சந்தானம், பவர் ஸ்டார், சேது என்று மூன்று இளைஞர்களும் எதிர் வீட்டுக்கு குடிவரும் விசாகாவை ஒருதலையாக காதலிக்கிறார்கள்.
விசாகா ஒருவரைக் காதலித்தால் மற்றொருவர் விலகிக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மூவரும் தனித்தனியாக அவளை அணுகுகிறார்கள்.
நாயகியை கவர்வதற்காக பழைய படத்தில் மூன்று பேரும் நாயகியின் அம்மா,
அப்பா, தாத்தா மூலம் விதவிதமான டெக்னிக்குகளைக் கையாள்வது போலவே, இந்தப்
படத்திலும்.
ஆனால் ஒரிஜினல் படத்தில் இருந்த உயிர்ப்புடன் கூடிய நகைச்சுவை இந்தப் படத்தில் மிஸ்ஸிங்.
விசாகாவை கவர்வதற்காக, அவருடைய அப்பா, சித்தப்பா, சின்னம்மா என்று ஓவ்வொருவரையும் மூவரும் ஐஸ் வைக்கிறார்கள்.
இறுதியில், விசாகா யாரை காதலிச்சார்? முடிவு என்ன ஆச்சு? என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார்கள்.
படத்தோட மிகப்பெரும் பலமே பவர்ஸ்டார்தான். பவர்ஸ்டார் நிஜவாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளை வசனங்களாக போட்டு தாக்குகிறார் சந்தானம்.
சீனிவாசன் அழுகிற போஸை படமெடுத்து அவரிடமே காட்டுவார் சந்தானம். அவர்
இன்னும் அழுதபடி, 'நல்லால்ல' என்று சொல்ல.. 'தெரியுதுல்ல' என்பார்.
இப்படி படம் முழுக்க சந்தானம் தன் பெஸ்ட் ஒன் லைனர்களை அள்ளிவிட்டுக் கொண்டே இருக்கிறார்.
பவர் ஸ்டார் படத்தில் ஸ்கோர் செய்யும் காட்சிகள் ஏராளம். ‘அழகுமலர் ஆட’
பாடலுக்கு நடனம் ஆடுவது, தனது அல்லக்கைகளின் பாராட்டுதல்களுடன் நடனப்
பயிற்சி மேற்கொள்வது என்று அசத்துகிறார்.
"என் கிட்ட இல்லாததது சிம்புகிட்ட என்னமா இருக்கு" என்று பவர்ஸ்டார் பேசும் வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது.
சந்தானம் இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல் மற்றவர்களுக்கும் சமவாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்ய நினைக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு வெற்றியையேக் கொடுத்துள்ளது.
இந்த படத்தின் மூலம் புதுமுகமாக அறிமுகமாகியிருக்கும் சேதுவுக்கு ஓரளவு
நடிப்புக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அழகான கதாநாயகி விசாகா நன்றாகவும்
நடித்திருக்கிறார்.
சங்கீத வித்வானாக வரும் வி.டி.வி. கணேஷ், தனது குரல் கெட்டதற்கான காரணம் சொல்வது அடக்கமுடியாத சிரிப்பு.
கோவை சரளா, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், தேவதர்ஷினி ஆகியோரும் கொமெடியில் நம் வயிரை பதம் பார்த்திருக்கின்றனர்.
படத்தின் ஆரம்பக் காட்சி முதல் கடைசி காட்சி வரை கொமெடியை விடாமல் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர்.
பழைய படத்தோடு ஒப்பிட்டு பார்க்காமல் புதிய படமாக பார்த்தால் வயிறு குலுங்க சிரிக்கலாம்.
தமன் இசையில் அனைத்து பாடல்களும் ஓ.கே. ரகம். பாலசுப்பிரமணியத்தின்
ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வேகமும், படத்திற்கு உத்வேகத்தையும்
கொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் லட்டு தின்ற திருப்தியுடன் படம் நிறைவடைகிறது. |
நன்றி விடுப்பு
விஸ்வரூபத்துக்கு எதிர்ப்பு-"கலாச்சார பயங்கரவாதம்": கமல்
நடிகர் கமல்ஹாசன் பண்பாட்டு பயங்கரவாதத்திற்கு முற்றுப்
புள்ளிவைக்க வேண்டியது அவசியம் என்றும் தனது விஸ்வரூபம் திரைப்படத்தினை
வெளியிடுவதில் உள்ள சிக்கல்களை சட்டபூர்வமாக எதிர்கொள்ளவிருப்பதாகவும்
கூறியிருக்கிறார்.
இஸ்லாமியர்களை விஸ்வரூபம் திரைப்படம்
பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகக் குறைகூறி அதற்குத் தடைவிதிக்க வேண்டுமென்று
கோரி பல்வேறு முஸ்லீம் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கவிருப்பதாக
அறிவித்ததன் பின்னணியில், தமிழக அரசு, சட்டம் ஒழுங்கினைக் காரணம் காட்டி,
நாளை வெள்ளியன்று(25.1.13) வெளியாகவிருந்த அத்திரைப்படத்திற்கு இருவாரத்தடை
விதித்திருக்கிறது.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் கமல்ஹாசன்,
இணையதளத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில், தான்
முஸ்லீம்களுக்கெதிரானவன் என்பது போல அரசியல் காரணங்களுக்காகத் தன்னை சில
சிறிய அமைப்புக்கள் சித்தரிக்க முயல்வதாகவும் அது தனக்கு மிகுந்த
மனவருத்தத்தினைத் தருவதாகவும், கூறியிருக்கிறார்.
தொழில்ரீதியான
வரம்புகளைக் கடந்து எப்போதுமே தான் நாகரிகத்திற்காகவும்,
மனிதாபிமானத்திற்காகவும் குரல்கொடுத்து வந்திருப்பதாகவும், இந்து முஸ்லீம்
நல்லிணக்கத்திற்காகவே உருவாக்கப்பட்ட ஹார்மனி இந்தியா என்ற அமைப்பில்
உறுப்பினராயிருக்கும் தான் முஸ்லீம்களை அவமானப்படுத்தும்வகையில்
படமெடுத்திருப்பதாகக் கூறுவது தன்னை அவமதிப்பதாகும் என்கிறார் கமல்.
சமூகத்தில் பிரபலமானவர்களைத் தாக்குவது கூட பிரபலமாகும் வழிதானே என்கிறார் அவர். நடுநிலை
தேசபக்த முஸ்லீம்கள் அனைவரும் தனது திரைப்படத்தைப் பார்த்து பெருமை
கொள்வர், அவ்வாறு அவர்களைப் பெருமைப்படுத்தும் வகையிலேயே விஸ்வரூபம்
உருவாக்கப்பட்டிருக்கிறது என்றும் வலியுறுத்துகிறார் கமல். நன்றி வீரகேசரி
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக மருதானை சினிசிட்டி திரையரங்கம் முற்றுகை
முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும்
விதமாய் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருப்பதாகக் கூறிவிஸ்வரூபம்
திரைப்படத்தை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத்
தொடர்ந்து கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக ஸ்ரீ
லங்கா தவ்ஹீத் ஜமாத் முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
தொடர்ச்சியாக
சினிமாக்கள் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமான
கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல்ஹாசன் இம்முறையும் விஸ்வரூபம்
திரைப்படம் மூலமாக தனது இஸ்லாமிய எதிர்ப்புத் துவேசத்தைக் காட்டுவதின்
மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும்,
சித்தரித்துள்ளதுடன் முஸ்லிம்கள் புனிதமாக கருதும் திருமறைக் குர்ஆனையும்
கொச்சைப்படுத்தி இத் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
21ம் தேதி
திங்கள் கிழமை தமிழ்நாட்டில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு
இத்திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. விஸ்வரூபம் திரைப்படத்தின்
காட்சிகள் தமிழ் சினிமா வரலாற்றில் இது வரைக்கும் எந்தத் திரைப்படத்திலும்
இல்லாத அளவு இஸ்லாத்தையும், முஸ்லிம்களும் கொச்சைப்படுத்தி
எடுக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தின் பலம் மிகு இஸ்லாமிய அமைப்பான தமிழ்நாடு
தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளதுடன், இந்தியாவில் எந்தவொரு திரையரங்கிளும்
இத்திரைப்படத்தை ஓட விடமாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.
இலங்கையிலும்
இத்திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத்
ஜமாத் சார்பில் இலங்கை திரைப்பட வெளியீட்டுக் கூட்டுத்தாபனத்திற்கு
வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், ஜனாதிபதி மற்றும் அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்ல ஆகியோருக்கும் இத்திரைப்படத்தை தடை செய்யும்படி கோரிக்கை
விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் 25ம்
திகதி விஸ்வரூபம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவதாக
அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இலங்கையில் கொழும்பு மருதானை சினிசிட்டி
திரையரங்கிலும் இத்திரைப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(25-01-2013) ஜும்மா தொழுகையைத்
தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சினிசிட்டி திரையரங்கை
முற்றுகையிடுவதாக இன்று நடந்த ஜமாத்தின் தலைமை நிர்வாக கூட்டத்தில்
முடிவெடுக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
விஸ்வரூபம் படத்தினை வெளியிடத் தடை : தௌஹீத் ஜமாஅத்
கமல் ஹாசன் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக
அரசினால் 15 நாட்களுக்கு வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது என இலங்கை
தௌஹீத் ஜமாஅத் தலைவர் ரஸ்மின் மௌலவி வீரகேசரி இணையத்தளத்திற்கு
தெரிவித்தார்.
விஸ்வரூபம் படத்தினை பார்த்த தௌஹீத் ஜமாத் அமைப்பினர்
படத்தின் பெரும் பகுதி முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது
என உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரை நேரில் சந்திந்து
வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து சற்று முன்பு விஸ்வரூபம் படத்திற்கு
தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து இலங்கை
தௌஹீத் ஜமாஅத் தலைவர் ரஸ்மின் மௌலவி வீரகேசரி இணையத்தளத்திற்கு கருத்து
தெரிவிக்கையில், இன்று மதியம் 1.30 மணியளவில் தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத்
மாநிலப் பொதுச் செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ், மாநிலச் செயலாளர் யூசுப்,
மாநிலச் செயலாளர் எக்மோர் சாதிக் ஆகிய நிர்வாகிகள் தமிழக உள்துறை செயலாளர்
மற்றும் ஆணையாளர் ஆகியோரை நேரில் சந்தித்து விஸ்வரூபம் திரைப்படத்தை தடை
செய்யக்கோரி நேரில் வலியுறுத்தினர்.
இத்திரைப்படம் முஸ்லிம்களை
இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ளது என்று வந்த செய்திகளைத்
தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களுக்கு கமல்ஹாசன் இந்த
திரைப்படத்தை திரையிட்டுக் காட்டினார்.
இந்திய வரலாற்றிலேயே இது
போன்ற ஒரு திரைப்படம் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இதுவரை எடுக்கப்படவில்லை
என்பதைத் தொடர்ந்து இந்தப்படத்தை வெளியிட்டால் மாபெரும் சட்டம் ஒழுங்குப்
பிரச்சினை ஏற்படும் என்பதால் மத்திய அரசும் மாநில அரசும் இப்படத்திற்கு
முற்றாகத் தடை விதிக்க வேண்டும்.
அவ்வாறின்றி இப்படம்
வெளியாகுமேயானால், அப்படம் தமிழகத்தில் எந்தத் தியேட்டரிலும் வெளியிட
விடமாட்டோம் என்று தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்தது.
சிலர்
இந்த திரைப்படம் வெளியிட்டால் சமூக நல்லிணக்கம் கெடும் என்று சொல்லி
வந்தனர். ஆனால் இந்த திரைப்படத்தை வெளியிடுவதால் இந்துக்களுக்கும்
முஸ்லிம்களுக்கும் மத்தியில் சமூக நல்லிணக்கம் கெடும் என்பதைவிட சட்டம்
ஒழுங்கு பிரச்சனை வரும் என்பதுதான் பிரதான விடயம் என்பதையும், எவ்வளவுதான்
ஜனநாய ரீதியாக போராட்டங்களை நடத்தினாலும் சிலர் உணர்ச்சி வசப்பட்டு
செய்யும் செயல்களால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டுவிடக்கூடாது
என்பதைத்தான் அராசங்கம் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்பதையும் நமது நிர்வாகிகள் உள்துறை செயலாளர் மற்றும் ஆணையாளரிடரித்தில்
விளக்கினர்.
உள்துறைச் செயலாளர் மற்றும் ஆணையாளர் மற்றும்
உயர்அதிகாரிகள் மிகுந்த கவனத்துடன் நமது வாதங்களைக் கேட்டனர். சட்டம்
ஒழுங்கு பாதிக்கப்படக்கூடாது என்பதில் அதிகாரிகளுக்கு அதிக அக்கரை இருந்ததை
இந்த சந்திப்பின்போது உணர முடிந்தது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில்
விஸ்வரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் தணிக்கைக்
குழுவினால் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் தடை என்பது சாத்தியமாகுமா
என்பது தொடர்பில் நீதிமன்றமே முடிவு செய்யவேண்டும். அத்துடன் மீண்டும்
படத்தினை தணிக்கை குழுவிற்கும் அனுப்பும் நடவடிக்கைளும்
எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து எமது அமைப்பினூடாக அறியக் கூடியதாக
உள்ளது.
மேலும் உண்மையில் படத்தின் அதிக காட்சிகள் முஸ்லிம்களை
கொச்சைப்படுத்துவதாவே உள்ளது எனவும் அவ்வாறான காட்சிகளை நீக்கினால் படமே
இல்லை எனவும் படத்தை பார்த்த எமது அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
இதுமட்டுமின்றி இலங்கையிலும் விஸ்வரூபம் திரைப்படத்தினை தடை விதிக்க
நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் ஒரு கட்டமாக எதிர்வரும்
வெள்ளிக்கிழமை பாரிய ஆர்ப்பட்டமொன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளோம் என்றார். நன்றி வீரகேசரி
விஸ்வரூபம் மீதான தடை நீக்கம்
தமிழக அரசினால் நேற்று விஸ்வரூபம் திரைப்படம் மீது
விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் சற்றுமுன்னர்
தீர்ப்பளித்துள்ளதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம்
தலைவர்களின் பலத்த எதிர்ப்பின் காரணமாக தமிழக அரசினால் 15 நாட்கள் தடை
செய்யப்பட்டிருந்த விஸ்வரூபம் திரைப்படத்தின் மீதான தடையை சென்னை உயர்
நீதிமன்றம் சற்று முன்னர் மீளப்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள்
உத்தியோகபூர்வமற்ற தகவல்களை வெளியிட்டுள்ளது.
குறித்த படி எதிர்வரும் 25ஆம் திகதி இலங்கை தவிர்ந்த ஏனைய உலக நாடுகளில் விஸ்வரூபம் வெளியிடப்படும் என தற்போது தெரிவிக்கப்படுகிறது.
(இணைப்பு 2)
தற்போதைய உத்தியோகபூர்வ அறிவித்தல்களின் படி 28ஆம் திகதி வரையில்
விஸ்வரூபம் திரைப்படத்தினை தமிழகத்தில் திரையிட முடியாது என சென்னை உயர்
நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள்
உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை இலங்கையில் காலவரையின்றி இப்படத்திற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால்
இப்படத்தின் தெலுங்கு பதிப்பு நாளை உலகம் முழுவதும் வெளியாகலாம் ஏனெனில்
அப்பதிப்புக்கு எதுவிதமான தடைகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு திடீர் தடை
சென்னை:
கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாக
இருந்தது. இந்நிலையில், விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக
காட்சிகள் இடம் பெற்றுள்ளது. அதனால், அந்த படத்தை வெளியிட கூடாது என்று
முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதை தொடர்ந்து விஸ்வரூபம்
படத்தை முஸ்லிம் அமைப்புகளுக்கு கமல்ஹாசன் போட்டு காட்டினார். படத்தை
பார்த்த அமைப்பினர் முழுமையாக முஸ்லிம்களுக்கு எதிராக படம்
எடுக்கப்பட்டிருக்கிறது. அதனால், விஸ்வரூபம் படத்தை திரையிட
அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.
மேலும்
விஸ்வரூபம் படம் மிலாதுநபி விழாவான 25ம் தேதி திரையிடப் படுகிறது. இது
முஸ்லிம் களை வருத்தமடைய செய்துள்ளது. அதனால், அன்றைய தினம் விஸ்வரூபம்
படத்தை திரையிட்டால் எதிர்ப்பு தெரிவிப்போம் என்றும் முஸ்லிம் அமைப்புகள்
தெரிவித்தன. இதுதொடர்பாக தமிழக போலீஸ் டிஜிபி மற்றும் உள்துறை செயலாளரை
சந்தித்து நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். மேலும் சில முஸ்லிம்
அமைப்புகள் உள்துறை செயலாளர் ராஜ கோபாலை சந்தித்து புகார் மனு கொடுத்தன.
அந்த
மனு மீது விசாரணை நடத்தும்படி டிஜிபிக்கு உள்துறை செயலாளர் ராஜகோபால்
உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை தொடர்ந்து மாவட்ட எஸ்பிகளிடம் டிஜிபி
விளக்கம் கேட்டார். மாவட்ட எஸ்பிகளும், விஸ்வரூபம் படத்தை வெளியிட்டால்
சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அதனால், படத்தை அடுத்த 15 நாட்களுக்கு
திரையரங்கில் வெளி யிட அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு
அறிக்கை கொடுத்தனர்.
இதைதொடர்ந்து திரையரங்கில் அடுத்த 15
நாட்களுக்கு விஸ்வரூபம் படத்தை வெளியிட வேண்டாம். அந்த படத்திற்கு தடை
விதிக்கப்பட்டிருக்கிறது என திரையரங்க உரிமையாளர்களுக்கு மாவட்ட
கலெக்டர்கள் சார்பில் நேற்று அறிக்கை அனுப்பப்பட்டது. கமல் அலுவலகம்
முற்றுகை: முன்னதாக, தேசிய லீக் கட்சி தொண்டர்கள் ஆழ்வார்பேட்டையில் உள்ள
நடிகர் கமல்ஹாசன் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு விஸ்வரூபம் படத்தை
வெளியிடக்கூடாது என கோஷமிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்
முற்றுகையிட்ட 30 பேரை கைது செய்தனர். நன்றி தேனீ
இறுதி நேரத்தில் கமலுக்கு கைநழுவிய ‘பத்மபூஷணம்’
விஸ்வரூபம் படத்தினால் நடிகர் கமலஹாசனுக்கு கிடைக்க விருந்த
‘பத்மபூஷண்’ விருது இறுதி நேரத்தில் கைநழுவி விட்டதாக கூறப்படுகிறது.
பத்மபூஷண் விருதுக்கு தகுதியுடையவர்களின்
பெயர்ப்பட்டியலில் கமலஹாசனின் பெயரும் இடம்பெற்றிருந்ததாகவும் ஆயினும்
அவரின் விஸ்வரூபம் படம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையினால் கடைசித் தருணத்தில்
இந்திய அரசாங்கம் அவரின் பெயரை நீக்கிவிட்டதாகவும் ஊகங்கள்
எழுந்திருப்பதாக டெக்கான் குரோனிக்கல் பத்திரிகை நேற்று சனிக்கிழமை
தெரிவித்தது.
விஸ்வரூபம் படத்திலுள்ள சில காட்சிகளுக்கு சிறுபான்மை
சமூகங்களிடமிருந்து ஆட்சேபனை எழுப்பப்பட்டதையடுத்து அப்படத்திற்கு தமிழக
அரசாங்கம் இடைக்காலத் தடை விதித்தது. அதனைத் தொடர்ந்து அண்டைய மாநிலங்காளன
கர்நாடகாவின் பெங்களூரிலும் ஆந்திராவின் ஹைதராபாத்திலும் அப்படம்
திரையிடப்படுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.
இலங்கையிலும் தடைவிதிக்கப்பட்ட போதிலும் கேரளத்தில் அப்படம் சுமார் 85 திரையரங்குகளில் வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டது.
அப்படத்திற்கு
தணிக்கைச் சபை அங்கீகாரம் வழங்கியிருந்தது. பத்ம பூஷண் விருதுக்கு தெரிவு
செய்யப்பட்டோர் பெயர் விபரம் வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக
அறிவிக்கப்பட்டது. அதற்கு முதல் நாள் வரை கமலஹாசனின் பெயரும் அதில் இடம்
பெற்றிருந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. உள்துறை அமைச்சின் உயர்
அதிகாரிகள் கருத்து தெரிவிக்க மறுத்து விட்ட போதும் விருதுகளை
அறிவிப்பதற்கு வெள்ளிக்கிழமை வரை தாமதம் ஏற்பட்டதாக வட்டாரங்கள்
கூறுகின்றன. கர்நாடகம், ஆந்திராவில் விஸ்வரூபம் வெளியிடப்படுவதற்கு தடை
விதிக்கப்பட்டதையடுத்து கமல்ஹாசனை கௌரவிப்பதா இல்லையா என்பது தொடர்பாக
முடிவெடுக்க முடியாமல் இருந்த காரணத்தினாலேயே பத்ம பூஷனி விருதுகள்
தொடர்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்க தாமதம் ஏற்பட்டதாக அந்த வட்டாரங்கள்
தெரிவித்தன.
கமலஹாசன் ஏற்கனவே பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். அத்துடன்
சிறந்த நடிகருக்கான தேசிய விருதுகள் பலவற்றையும் அவர் வென்றெடுத்தவர்.
இந்த விருடம் பத்ம பூஷண் விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட 24 பேரில் 8 பேர்
கலைத்துறையைச் சேர்ந்தவர்களாவர்.
ராஜேஷ் கண்ணா, ஷர்மிளா தாகூர் ஆகிய
நடிகர்களுக்கும் இந்த விருது கிடைத்திருக்கிறது. பத்மபூஷண் விருதுக்காக
கமலஹாசனின் பெயரை தமிழக அது பரிந்துரைத்திருந்த போதிலும் இறுதித்
தருணத்தில் அவரின் பெயரை நீக்கிவிட மத்திய அரசு முடிவு செய்துவிட்டதாக
கூறப்படுகிறது.
நன்றி தினக்குரல்
சிட்னியில் விஸ்வரூபம் வெளியிடப்படுகின்றது
|
No comments:
Post a Comment