துருவ மகாராஜா - கனஷியாம் கோவிந்த தாஸ்

 .


துருவ மகாராஜா

ஹரே கிருஷ்ணா! மீண்டும் இந்த வாரம் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில வாரங்களாக வாழ்க்கை நெறி, மற்றும் பல உன்னத கருத்துக்களை பற்றி ஆராய்ந்தோம், இன்று சற்று மாறுதலாக புராணத்தில் உள்ள கதைகளை பற்றி காண்போம்.

இன்று துருவன் என்னும் ஒரு உன்னத பக்தன் பற்றி பார்க்கலாம்.

துருவன் என்னும் 5 வயது பாலகன் ஒரு அரச குமாரன். அவனுக்கு ஒரு நாள் தானும் அவனது சித்தியின் மகனை போல் தன் தந்தை மடியில் அமர்ந்து விளையாட வேண்டும் என்று ஆசை படுகிறான், ஆனால் அவனது தந்தை அதை வரவேற்கவில்லை மேலும் அவனது சித்தி அவன் மேல் கோபித்துக்கொண்டு , நீ என் வயிற்றில் பிறக்க வில்லை அதனால் உன் தந்தை மடியில் அமர உனக்கு உரிமை இல்லை. அப்படி நீ உன் தந்தை மடியில் அமர ஆசை இருந்தால் பரம புருஷனின் மேல் கடும் தவம் செய்து அடுத்த பிறவியில் என் கற்பத்தில் வந்து பிறந்தாயானால் நீ அமரலாம் என்று கூறி அவனை அந்த இடத்தை விட்டு விரட்டி விடுகிறாள்.

அந்த சிறு பாலகன் அழுதுகொண்டே அவன் பெற்ற தாயை நோக்கி ஓடினான். அவனை சமாதான படுத்த முயன்றும் அதில் தோல்வி அடைந்த அவன் தாய், அவள் தன் இயலமையை வெளிப்படுத்தினாள். நான் என்ன செய்ய முடியும் துருவா! உன் தந்தை என் வார்த்தையை கேட்க மாட்டார், உன் சித்தி கூறியது நிஜமே, நீ அந்த பரம புருஷனை தியானம் செய்தால் தான் உன் தகப்பனார் மடியில் அமர முடியும் என்று கூறினாள்.

பிறப்பில் ஷத்ரியன் ஆன துருவன் கடவுளை கண்டு விட வேண்டும் என்று உறுதி பூண்டான். கடவுள் எங்கு பார்க்கலாம் ? என்று அந்த பாலகன் வினவினான். பெரிய துறவிகள் எல்லாம், காட்டிலே தான் சென்று தேடுவர்கள் என்று கூறினாள். இந்த 5 வயது பாலகன் காட்டிற்கு பரம் பொருளை காண புறப்பட்டான். அவன் காட்டில் உள்ள எல்லா ஜீவராசிகளிடம் கடவுள் எங்கு உள்ளார் என்று வினவினான். இந்த சிறு பலகனின் உறுதியான நம்பிக்கையும் பக்தியும் கண்ட தேவ ரிஷி நாரத முனிவர் அவன் முன் தோன்றி "குழந்தை! நீ உன் தந்தை உதாசீன படுத்தியத்தை எல்லாம் பெரியதாக எடுத்துக்கொள்ளாதே , அந்த ஆதிமூலத்தை காண்பது மிகவும் கடினம். மிக கடினமான யோகமும், தவம் புரிய வேண்டும், நீ இன்னும் சிறு பாலகன், நீ உன் அரண்மனைக்கு சென்று விடு என்று கூறினார், ஆனால் துருவனோ கேட்பதாக இல்லை, பதிலுக்கு, நாரத முனிவரே! , உம் வாக்கை மிகவும் மதிக்கிறேன், ஆனால் அந்த பரம புருஷனை கண்டு , என் ஆசையை நிறைவு சேய்த்து கொள்ளாமல் நான் திரும்ப செல்ல மாட்டேன் என்று திடமாக கூறினான்.

பாலகனின் உறுதியை கண்ட நாரதர் அவனுக்கு பக்தில் எப்படி ஈடுபடுவது, பரம் பொருளை தியானம் செய்ய மூல மந்திரம், ஆஸ்டாங்க யோகம் எல்லாம் கற்று கொடுத்தார்.

ஆதிமூலத்தை காண, கடும் துவம் புரிய துவங்கினான். முதல் மாதத்தில் வெறும் பழங்களை தின்று தவம் புரிந்தான். இரண்டாவது மாதத்தில் ஆறு நாட்களுக்கு ஒரு முறை உண்டும், வெறும் இல்லை தழைகளை உண்டும் தவம் புரிந்தான். நான்காவது மாதத்தில் பிராண வாயு பயிற்சியில் தேர்ந்தான். 12 நாட்களுக்கு ஒரு முறை மூச்சுக்காற்றை உள் வாங்கினான். பிற நேரங்களில் அந்த விஷ்ணு(கிருஷ்ணர்) தியானத்தில் இருந்தான். பிறகு அவன் சுவாசிப்பதயே நிறுத்தி விட்டான். இதனால் உலகமே நின்று விடுவது போல் ஆகியது. இத்தனை அறிந்த தேவர்களும், பிற தேவதைகளும் அந்த பரம் பொருளான பகவன் விஷ்ணுவிடம் சென்று கூறினார்.

பக்தனின் தவத்தில் இறங்கி, அந்த பகவன் நான்கு கைகளோடு சங்கு சக்கிர கதாபாணியாக அவன் முன் தோன்றினான். அந்த பகவானை நேரில் கண்ட சந்தோஷத்தில் அவனுக்கு வார்த்தை கூட வரவில்லை. பக்தனின் நிலை அறிந்த பகவான் கருணா சிந்துவான அவன் அந்த பாலகன் மேல் கருணை பொழிந்தான். பக்தனின் மனத்தையும், லட்சியதையும் அறிந்த பகவன் அவனை என்றும் மிளிரும் துருவ நக்ஷத்திரத்தை பெற வரம் கொடுத்தான். துருவன் மேலும் பிரார்த்தித்தான், "பகவானே உன் காட்சியால் எனது தூங்கிக்கொண்டு இருக்கிற எல்லா புலன்களும் விழித்து கொண்டன . முட்டாள் தனமாக இத்தனை நாளும் பிரபு இறப்பில் இருந்து முக்தியை கொடுக்க வல்ல அந்த பகவானிடம் போய் சிறு ஆர்ப்ப சந்தோஷமான இவ்வுலக பதவி, செல்வத்திற்காக உன்னை தியானம் செய்த என்னை மன்னித்து விடு என்று கண்ணீர் மல்க வேண்டினான். உடைந்த கண்ணாடி துண்டை தேடி வந்த எனக்கு ஒரு பெரும் ஆபரணம் கிடைத்து விட்டது. எனக்கு எதுவும் வேண்டாம் என்றுகூ றி கண்ணீர் சிந்தி பகவானிடம் சரண் அடைந்தான்..

பிறகு துருவன் தனது அரண்மனைக்கு சென்றான். அவனது தகப்பனாரும், சித்தியும் மனம் திருந்தி அவனை வரவேற்றனர். மேலும் அரசன் தனது சிம் மா- ஸனத்தை துருவனுக்கு கொடுத்துவிட்டு பக்தி மார்க த்தை மேற்கொண்டு காட்டி ற் க்கு சென்றா ர். துருவன் மேலும் 36,000 ஆண்டுகள் பக்தி நெறியோடு நல் ஆட்சி செய்தான். அவன் வாழ்நாள் முடிந்த பின் துருவன் முக்தி அடைந்து பகவானை சென்று அடைந்தான்.

இந்த கதையில் இருந்து பகவன் ஸ்ரீ கிருஷ்ணர் உலகியல் இன்பம் மட்டும் இல்லாமல் மாறாத கிருஷ்ண பக்தியும், முக்தியும் அவரை சரண் அடைந்தவர்களுக்கு கொடுக்கிறார் என்பது தெரிகிறது.

ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில்
அனண்யாச் சிந்தாயந்தோ மாம்
ஏ ஜனா பர்யுபாசதே
தேஷாம் நித்யபியுக்தானாம்
யோக-க்ஷேமம் வாஹம்யஹம்
பகவத் கீதை 9.22
அர்த்தம்: ஆனால் எனது தெய்வீக உருவின் மீது தியானம் செய்து கொண்டு , பக்தியுடன் என்னை வழிபாடு செய்கிறவர்களுக்கோ, அவர்களுக்கு வேண்டியவற்றை கொடுத்து , அவர்களிடம் இருப்பதை காத்தும் நான் பாலிக்கிறேன்.

அரிது அரிது மானிடராக பிறப்பது அரிது. இந்த மனித பிறவியை பயன் படுத்திக்கொண்டு, பகவானை வாயார பாடி அவனை அடைவதே குறிக்கோள்ளாக கொள்ள வேண்டும். அவரை சரண் அடைந்தால் அவர் முக்தியோடு, இவ்வுலகில் அவர் பக்தர் சுகமாக வாழ எல்லா ஏற்படும் செய்கிறார்.

குறிப்பு: வாசகர்கள் இந்த புராணத்தில் குறிப்பிட்டுள்ள கடும் தவம், மற்றும் யோகம் புரிய முற்பட வேண்டாம். அந்த காலத்தில்(வேறு யுகம்) 1000 கணக்கான வருடங்கள் வாழ்ந்தார்கள், அதனால் அவர்களுக்கு அது எல்லாம் சாத்தியம் ஆகியது, ஆனால் இந்த கலி யுகத்தில் நமது ஆயுள் 100 மேல் சென்றால் மிக அதிசயம் , ஆகையால் தான் இந்த கலிக்கு நாம சங்கீர்த்தனமே உகந்தது என்று கூறப்பட்டு உள்ளது.

ஆகையால் வாருங்கள் அந்த உன்னதமான கிருஷ்ண நாமத்தை வாயார பாடி மனமார மகிழலாம்.
ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!

என்றும் அன்புடன்
கனஷியாம் கோவிந்த தாஸ்

No comments: