மூன்றுவகையான சிந்தனை , செயற்பாடு, மிக்கவர்
ஆசியாக்கண்டம் பரந்தது விரிந்தது. ஆசியாக்கண்டத்தில் காணப்படும் கலாசாரத்தின் அடிநாதமாக மெய்யியல் இருப்பதாக அறிஞர்கள் கருதுகின்றார்கள். இந்த மெய்யியல் பல சோதனைகளுக்கும் வேதனைகளுக்கும் ஆளாகி இருப்பதை வரலாற்றால் அறிய முடிகிறது. சோதனைகளையும் வேதனைகளையும் எதிர் கொண்டாலும் மெய்யியலை மட்டும் இழந்துவிட விரும்பாத நிலையில் சூழலுக்கு ஏற்ப ஒரு கலாசாரத்தை ஏற்படுத்தி அதனைவளர்ப்பதற்கும் அதனை வாழ்வுடன் இணைத்து நிற்பதற்கும் முயற்சிகள் நடைபெற்றதையும், அதற்கு தலைமை ஏற்பதற்கு தகுதியானவர் வந்த நிலையினையும் காணமுடிகிறது.இந்த வகையில் ஈழத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் -தமிழையும் சமய இலக்கியத்தையும் சேர்த்துக் கொண்டு வீறுபெற்று ஒரு தனித்துவமான கலாசாரம் எழுவதற்கு நல்லைநகர் நாவலர் பெருமான் காரணகர்த்தாவாக வந்து நிற்கிறார் என்பது மறுக்க முடியாத உண்மை எனலாம்.
ஆசியநாட்டில் இந்தியாவின் நிலை மிகவும் முக்கியத்துவம் மிக்கதாகும். சமயம் , இலக்கியம்
தமிழ் இலக்கிய நூல்களும் சமய இலக்கிய நூல்களும் இந்தியாவின் பொக்கிஷங்கள் என்பது மிகவும் பெருமைதான். ஆனால் ஈழத்துத்தமிழர்கள் தமிழ் சமய இலக்கியங்களில் காட்டும் ஈடுபாடும் உறுதிப்பாடும் அங்கு காணப்படும் நிலை சற்று தளப்பமாய் இருக்கிறது என்பதும் நோக்கத்தக்கதாகும். அதற்கு அங்கு காணப்படும் சமூகநிலையும், அரசியல் நிலையும் காரணமாகக் கூட இருக்கலாம். என்றாலும் இந்தியாவின் அங்கீகாரம் குறிப்பாக தமிழகத்தின் அங்கீகாரம் பெரிய அங்கீகாரமாக அன்றும் தேவைப்பட்டது. இன்றும் அந்த நிலை தொடர்கிறது என்பதும் மனமிருத்த வேண்டிய கருத்து எனலாம்.
சமணத்தாலோ , பெளத்தத்தாலோ , வை
போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்,
சைவத்தைக் கடைப்பிடித்து தமிழ் சமய இலக்கியங்கியங்களை உயிரென்று எண்ணி வாழ்ந்தவர்கள் அன்னியச் சூறாவளியினால் அவதிக்கு ஆட்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். கோவில்கள் தோறும் கந்தபுராணம் படிக்கப் பட்டது. கந்தனுக்குரிய விரதங்களை மக்கள் மிகவும் பக்குவமாக அனுட்டித்து வந்தார்கள். தமிழும் சமயமும் மலர்ந்தும் விரிந்தும் நல்லதொரு பண்பாடு ஒளிவிட்டு இருந்தது.ஆனால் அவையாவுமே கேள்விக்குறியாகியதால் மக்கள் திசையறியா கலமாக இருந்தார்கள்.
சமணத்தை நன்கு கற்று அதன் தலைமைப் பீடத்தில் இருந்தவர்தான் நாவுக்கரசர். அதே நாவுக்கரசர்தான் சைவத்தைக் காத்திட உழவாரப் படையினை கையில் ஏந்தி சமணத்தை எதிர்த்து சைவத்தின் காவலனாக வந்து நின்றார். இதன் காரணத்தால் திருநாவுக்கரசு நாயனார் சைவத்தமிழ் உலகில் இன்று வரை போற்றுதலுக்கு உரியவராக நிற்கிறார்.அப்பர் பெருமான் என்று சைவர்கள் அவரை அழைப்பதில் அகநிறைவு எய்துகிறார்கள் எனலாம்.
அப்பரைப் போல ஒருவராக ஆறுமுக நாவலரும் அக்கால யாழ்ப்பாண நிலையில் சைவத்தைக் காத்திட வந்து நிற்கிறார். நாவர் ஆங்கிலத்தில் கற்றார். கிறீத்தவ சூழலில் அவர் கற்றல் நிகழ்ந்தது. கிறீத்தவத்தை நன்கு தெரிந்தவர் ஆகிறார். அதனால் கிறீத்தவ வேதாகம நூலான பைபிளை தமிழில் மொழிபெயர்க்கும் ஆற்றலையும் பெற்று நிற்கிறார். முழுக்க முழுக்க கிறீத்தவ சூழலில் நின்ற ஆறுமுகநாவலர் மனம் முழுவதும் சைவமே நிறைந்து நின்றது. இதனால் சைவத்தை காத்திட சைவ தமிழ் இலக்கியங்கியங்களை காத்திட நாவலர் வீறுகொண்டு எழுகின்றார்.
தமிழ் இலக்கியங்களை தமிழ் இலக்கணத்தை சைவ இலக்கி யங்களை ஆராத காதலுடன் ஐயமகற்றியே ஆறுமுக நாவலர் கற்றார். ஆறுமுகம் என்னும் பெயர்கொண்டவர் தமிழ்நாடு சென்று ஆற்றிய சொற்பெருக்கை கண்ணுற்ற திருவாவடுதுறை ஆதீனமே " நாவலர் " என்னும் பட்டத்தை அளித்து ஆறுமுகத்தை அங்கீகாரம் செய்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து ஆறுமுகமாக சென்றவர் " ஆறுமுகநாவலர் " என்னும் கெளரவத்துடன் திரும்புகின்றார். தமிழகத்தின் அங்கீகாரத்துடன் அவரின் பணிகள் ஆரம்பிக்கப் படுவதும் மனங்கொள்ளத் தக்கதாகும். அங்கீகாரம் பெற்றாலும் யாழ்ப்பாணத்தில் அவரினால் மேற்கொள்ளப் பட்ட பணிகள் ஈழம் முழுவதற்குமே பெரும் பயனை வழங்கியது என்பதை மறுத்துவிட முடியாது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவிலுள்ள ஏறத்தாள ஐம்பது ஆண்டுகளை நாவலர் காலம் என்று குறிப்பிடலாம். பொதுவாக இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டிலும் சிறப்பாக ஈழத்திலும் நிலவிய சூழ்நிலையே ஆறுமுக நாவலரைத் தோற்றுவித்தது எனலாம். பல இலட்சம் தமிழ்ச் சைவர்கள் ஆறுமுகநாவலரின் காலத்தில் வாழ்ந்தார்கள்.ஆனால் தமிழ்ச் சைவர்களில் ஒருவரே ஆறுமுகநாவலர் ஆகிவிட முடிந்தது. இங்குதான் நவலரின் பெருமை புலப்பட்டு நிற்கிறது எனலாம்.
பல்லவர் , பாண்டியர், சோழர்,
இந்தியாவின் செல்வாக்கு ஈழத்தில் காணப்பட்டாலும் ஈழத்தின் சமூகநிலை இந்தியா போன்று இல்லாத காரணத்தால் இங்கு உருவான பண்பாடும் வித்தியாசமானதாகவே அமையும் நிலை ஏற்பட்டது எனலாம். புராணங்களில் கந்தபுராணத்தைப் போற்றும் மனப்பாங்கு தமிழ்நட்டைவிட யாழ்ப்பாணத்தில் நிறைந்தே இருந்தது எனலாம். கந்தபுராணத்தைச் சொந்த புராணமாக இங்குள்ள சைவர்கள் போற்றினார்கள். கோவில்கள் தோறும் கந்தபுராணத்தைப் படித்து அதன் விளக்கத்தை விபரமாக எடுத்துரைக்கும் ஒரு பணி தெய்வீகப் பணியாக யாழ்ப்பாண மக்களால் மேற்கொள்ளப் பட்டுவந்தது.
போர்த்துக்கேயர் , ஒல்லாந்தர்
தமிழ் படிக்க முடியாத நிலை. சைவத்தை கைக்கொள்ள முடியாத நிலை. திருமுறைகளை ஓத முடியாத நிலை. விரதங்களை அனுட்டிக்க முடியாத நிலை. சைவர்களாய் தமிழர்களாய் வாழுவதே மிகவும் கஷ்டமாய் ஆகிவிட்ட நிலை. " வேதநெறி தளைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்க ஒரு குழந்தை புனிதவாய் மலர்ந்து அழுதது", "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் " என்று ஒரு குரல் எழுந்து நின்றது. அதேபோன்று யாழ்ப்பாணத்தில் அவ்வேளை ஒரு குரல் எழுந்தது. அந்தக்குரல்தான் ஆறுமுகநாவலர் குரலாகும்.
நாயன்மார்கள் ஊர்கள்தோறும் சென்று பக்திப் பரவசம் நல்கும் பாடல்களைப் பாடி மக்களிடம் சமய நல்லுணர்வையும் நல் வாழ்க்கை முறைகளையும் சேர்ப்பித்தார்கள். அவர்களின் அர்ப்பணிப்பால் மக்களிடம் நல்லதொரு மாற்றம் ஏற்பட்டது. புத்துணர்ச்சி உருவானது. பக்தியென்னும் இயக்கம் வீறு கொண்டு எழுந்தது. தமிழும் வளர்ந்தது. சமயமும் வளர்ந்தது. சமூகத்திலும் நல்லதொரு மாற்றமும் விளைந்தது. கலங்கிய சமூகம், தடுமாறிய சமூகம், நிதானம் அடைந்தது. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் என்னும் நம்பிக்கையும் பிறந்தது. நற்றமிழை நாவாரப் பேச வேண்டும். நற்றமிழால் இறைவனை துதிக்க வேண்டும். நற்றமிழும் சமயமும் இரண்டு கண்கள் என்னும் உணர்வும் எல்லோர் மனதிலும் ஊற்றெடுக்க வைக்கப் பட்டது.
நாயன்மார்கள் காலம் பாடல்கள் கோலோச்சிய காலம். அதனால் எதைச் சொல்வதாக இருந்தாலும் அதற்கு வழி பாடல் என்னும் ஊடகம்தான். ஆனால் நாவலர் காலம் அப்படியானது அன்று. அதனால் நாவலர் அவர்கள் தனது சமய தமிழ் சமூகப் பணிகளுக்கு உரைநடையினையே உறுதுணை ஆக்கினார். பேச்சு, எழுத்து, விளக்கம், யா
தான் தேர்ந்தெடுத்த சைவத் தமிழ் நூல்களையும், தமிழ் இலக்கிய , இலக்கண நூல்களையும் அச்சிட்டு வெளியிட நாவலர் எடுத்த முயற்சி அவரின் தமிழ் வளர்ச்சியில் மிகவும் முக்கிய அம்சமென்றே கருதலாம். சிதம்பரத்தில் அச்சுக்கூடம் நிறுவி பல நூல்களை வெளிக்கொணர்ந்தார், அத்தோடு நில்லாமல் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையிலும் அச்சுக்கூடத்தை ஆரம்பித்து தமிழ் சைவநூல் களையும், மாணவர்கள் படிப்பதற்கான பாலபாடப்பு த்தகத்தையும்,
பெரியபுராண , கந்தபுராண , திருவிளையாடற் புராண வசன நூல்களையும் அச்சிட்டு வெளியிட்டார். தமிழ் ஏடுகள் பலவற்றைப் பரிசோதித்து எழுத்துப் பிழைகள் இல்லாமல் பழந்தமிழ் நூல்களை நாவலர் பெருமான் அச்சுவாகனமேற்றி அனைவரும் பயன் பெறுவதற்கு பெருமுயற்சிகள் செய்திருக்கிறார்.
அகத்தியர் அருளிய தேவாரத்திரட்டு நூல் தொடக்கம் விநாயக கவசம் நூல் வரை நாவலரின் கையூடாக எழுதியும் அச்சாகியும் வந்தன எனும் வகையில் அறுபது நூல்களைக் காணமுடிகிறது.நன்னூல் விருத்தி உரை, காண்டிகை உரை, இலக்கணச் சுருக்கம், இலக்கண வினாவிடை , இலக்கணம் படிப்பார்க்கு என்றுமே கைகொடுக்கும் நாவலர் பெருமானின் நற்கொடை எனலாம். சாதாரண மக்களும் விளங்கும் வகையில் தமிழ் உரைநடையினை கையா ண்டு வெற்றிகண்டவர் நாவலர் பெருமான் எனலாம். இதனால்த்தான் " வசனநடை கைவந்த வல்லாளர் " என்று இன்றும் போற்றப்படுகின்றார்.
நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
No comments:
Post a Comment