அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் அமரர் கலைவளன் சிசு. நாகேந்திரன் நினைவரங்கு !



இணையவழி காணொளி அரங்கு  சங்கத்தின் காப்பாளராக பதவி வகித்தவரான,   மறைந்த  எழுத்தாளர் கலைவளன் சிசு. நாகேந்திரன் அய்யாவுக்காக சங்கம் ஒழுங்குசெய்திருக்கும்  நினைவரங்கு நிகழ்ச்சி, சங்கத்தின் தலைவர் மருத்துவ கலாநிதி ( திருமதி ) வஜ்னா ரஃபீக் தலைமையில்   எதிர்வரும்  ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு இணையவழி காணொளி அரங்கின் (Zoom Meeting) ஊடாக நடைபெறும்.  இந்நிகழ்வில்  சிசு. நாகேந்திரன் அய்யா பற்றிய  நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் உரைகளும் இடம்பெறும். சிசு.நாகேந்திரன் எழுதிய அந்தக்காலத்து யாழ்ப்பாணம்,  நூல் பற்றி திருமதி புஷ்பா சிவபாலனும், பிறந்த மண்ணும் புகலிடமும் நூல் பற்றி திருமதி கலாதேவி பாலசண்முகனும், பழகும் தமிழ் சொற்களின் மொழிமாற்று அகராதி பற்றி திரு. அசோக்கும் தத்தமது வாசிப்பு அனுபவங்களை சமர்ப்பிப்பார்கள்.  அதனையடுத்து,  அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின்  ஆண்டுப்பொதுக்கூட்டம்  நடைபெறும்.    சங்கத்தின் உறுப்பினர்கள்  இணையவழிக் காணொளியில்  ( Zoom Meeting)  இணைந்துகொள்வதை  உறுதிப்படுத்தவும்.   

Join Zoom Meeting https://us02web.zoom.us/j/81576308299?pwd=NUNZblp5VlZESHo1ZGJhMy9HTHJkUT09  Meeting ID: 815 7630 8299 Passcode: 231519 

தகவல்:  மு. ஶ்ரீ கௌரி சங்கர்  (செயலாளர் - அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம்)  

தொலைபேசி:  04218 69 644

மின்னஞ்சல்:  atlas25012016@gmail.com                          Srigowri.sanker@gmail.com

   

No comments: