தியாகி திலீபன் நினைவு நிகழ்வு_2020 – சிட்னி /குயின்ஸ்லாந்து /பேர்த் /மெல்பேர்ண்

 


    



தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாதுதன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 33வது ஆண்டு நினைவு நிகழ்வுசெப்ரம்பர் மாதம் 26 ஆம் நாள் சனிக்கிழமை (சிட்னிகுயின்ஸ்லாந்துபேர்த் இல்) இடம்பெறவுள்ளது.

ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன்காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான். தமிழ் மக்களின் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்துதிலீபன் மேற்கொண்ட பயணம் எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது.

பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

தற்போதைய கொறானாவைரஸ் இடர்கால நிலையை கருத்திற்கொண்டுஅரச விதிமுறைகள், சமூக இடைவெளியை பேணியவாறு இவ்நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும்.

நிகழ்வுகளில் நேரடியாக கலந்துகொள்ள முடியாதவர்கள் ஏனைய மாநிலத்தவர்கள் இணையவழி ஊடாகவும் இணைந்துகொள்ளமுடியும்.

ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து தமிழின விடுதலைக்காக பன்னிரு நாட்கள் நீராகாரம் இன்றி தன்னுடலை வருத்திஅகிம்சையின் உச்சத்தை தொட்டு உயிர்நீத்த
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின் 33ம் ஆண்டு நினைவுகளில்....






No comments: