உலகச் செய்திகள்


குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மார்கழி கோலங்கள் : கோலமிட்ட பெண்கள் கைது !

அரசகரும மொழிகளில் ஒன்றாக தமிழை பேணுவதில் சிங்கப்பூர் அரசாங்கம் கடும் உறுதி

ஈராக்கில் அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறை- தூதுவர் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

ரஷ்யாவில் 20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புட்டின்

அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் எலைட் குட்ஸ் படையின் தளபதி பலி!

ஈரானின் மிக முக்கிய தளபதியை கொலை செய்வதற்கான உத்தரவை டிரம்பே வழங்கினார்- வெள்ளை மாளிகை

சொலைமானியின் கொலை முட்டாள்தனமானது- ஈரான்

அணு­சக்தி, ஏவு­கணைப் பரி­சோ­த­னைகள் தொடர்­பான இடை­நி­றுத்­தத்­திற்கு முடிவு


குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மார்கழி கோலங்கள் : கோலமிட்ட பெண்கள் கைது !

30/12/2019  இந்திய நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்ற வண்ணம் உள்ளது.
இந்நிலையில் அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வல அமைப்புகளும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதேவேளை, நேற்றைய தினம் திடீரென தமிழ்நாடு பெசன்ட் நகரில் சில வீடுகளின் முன் வேண்டாம் என்.ஆர்.சி., வேண்டாம் சி.ஏ.ஏ. என பெண்கள் கோலமிட்டிருந்தனர். இது போல் கோலம் வரைந்த 6 பெண்களை பொலிஸார் கைது செய்தனர்.
இதற்கு ஸ்டாலின், வைகோ, கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு கனிமொழி வீட்டிலும், இன்று காலையும் என்.ஆர்.சி.க்கு எதிரான கோலமிடப்பட்டிருந்தது.
அதேபோல், கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திலும்  திமுக தலைவர் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லத்திலும் வேண்டாம் சிஏஏ, என்ஆர்சி என கோலமிடப்பட்டது.
அது போல் தமிழ்நாடு முகப்பேர், சேலம் ஆகிய இடங்களில் தி.மு.க. மகளிரணி சார்பில் கோலம் போடப்பட்டது. இன்னும் சில இடங்களில் நோ என்.ஆர்.சி., நோ சி.ஏ.ஏ. என மெஹந்தியில் மக்களின் கைகளில் எழுதப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. திருப்பூரில் வீதியில் நிறபூச்சால் எதிர்ப்புத் தெரிவித்து வாசகங்கள் எழுதப்பட்டன.
இந்த நிலையில் பெசன்ட் நகரில் கோலமிட்டு கைதாகி விடுதலை செய்யப்பட்டவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்தனர்.
இதுகுறித்து முகஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
” மாவுக்கோலத்தால் கூட மத்திய அரசு காயம்படக் கூடாது எனக் காக்கும் கொத்தடிமை அ.தி.மு.க. அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்ட இளைய சமுதாயத்தினர் என்னை சந்தித்தனர்.
ஒரு கோலத்தை அழிக்க இந்த அலங்கோல ஆட்சி முயன்றது. இதோ தமிழ்நாடே போர்க்கோலம் வரைகிறது! எடப்பாடி அரசுக்கு நன்றி! ” என கருத்து தெரிவித்துள்ளார்.
நன்றி வீரகேசரி 







அரசகரும மொழிகளில் ஒன்றாக தமிழை பேணுவதில் சிங்கப்பூர் அரசாங்கம் கடும் உறுதி

31/12/2019  சிங்­கப்­பூரின் அர­ச­க­ரும மொழி­களில் ஒன்­றாகத் தமிழைத் தொடர்ந்தும் பேணு­வதில் சிங்­கப்பூர் அர­சாங்கம் உறு­தி­பூண்­டி­ருக்­கி­றது. தமிழ்­மொழி சிங்­கப்பூர் பாரா­ளு­மன்­றத்தில், பாட­சா­லை­களில் தாய்­மொ­ழி­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.
அச்சு ஊட­கங்­களும், இலத்­தி­ர­னியல் ஊட­கங்­களும் தமி­ழுக்கு மிகவும் ஆத­ர­வாக இருப்­ப­துடன், ஏனைய உத்­தி­யோ­க­பூர்வ நிகழ்­வு­க­ளிலும் தமிழ்­மொழி பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆங்­கிலம், சீன­மொழி மற்றும் மலே மொழி ஆகி­ய­வற்­றுடன் சேர்த்து தமிழ் மொழியும் ரூபா நோட்­டு­க்களில் அச்­சி­டப்­ப­டு­கி­றது. தமி­ழுக்­கு­ரிய அந்த அந்­தஸ்தை எந்தத் தடங்­க­லு­மின்றித் தொடர்ந்து பேணு­வதில் அர­சாங்கம் முழு­மை­யான உறு­தி­யுடன் இருக்­கி­றது.
சிங்­கப்­பூரின் வெளி­யு­றவு அமைச்­ச­ரான விவியன் பால­கி­ருஷ்ணன் கடந்த ஞாயி­றன்று வெளி­யிட்­டு­வைத்த 'தமிழ் சமூ­கமும், நவீன சிங்­கப்­பூரின் உரு­வாக்­கமும்' என்ற நூலில் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருக்கும் நேர்­கா­ண­லொன்­றி­லேயே அந்­நாட்டின் வர்த்­தக உற­வுகள் மற்றும் தகவல் தொடர்­புகள் அமைச்­ச­ரான எஸ்.ஈஸ்­வரன் இவ்­வாறு குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.
அந்த நூலை அந்­நாட்டில் வாழும் இந்­தி­ய­ரான 'ஒன்லைன் வொய்ஸ்' என்ற இணைய ஊட­க­சே­வையின் ஆசி­ரி­ய­ரான சௌந்­த­ர­நா­யகி வைர­வனும், மூத்த சிங்­கப்பூர் பத்­தி­ரி­கை­யா­ள­ரான ஏ.பி.ராமனும் கூட்­டாக எழு­தி­யி­ருக்­கி­றார்கள்.
'தமிழ் தொடர்பில் சிங்­கப்பூர் அர­சாங்­கத்தின் கொள்கை நிலைப்­பாடும், அதற்கு வழங்­கப்­ப­டு­கின்ற ஆத­ரவும் மிகவும் தெளி­வா­னது. மிகுதி தமிழ்ச் சமூ­கத்தின், குறிப்­பாக எமது இளை­ஞர்­களின் கைக­ளி­லேயே தங்­கி­யி­ருக்­கி­றது. அவர்கள் தமிழை ஆரத்­த­ழுவி அன்­றாட வாழ்வில் பயன்­ப­டுத்தி அதனை வாழும் மொழி­யாக ஆக்­க­வேண்டும்.
இளந்­த­லை­மு­றை­யி­ன­ரையும், பரந்­து­பட்ட தமிழ்ச்­ச­மூ­கத்­தையும் தமிழின் வளர்ச்­சி­யிலும் அதன் கலா­சா­ரத்­திலும் தீவி­ர­மாக ஈடு­ப­டுத்­து­வ­தற்குத் தமிழ்­மொழி உற்­ச­வங்­களை ஏற்­பாடு செய்­வது ஒரு வழி­யாகும்' என்று ஈஸ்­வரன் நேர்­கா­ணலில் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.
இந்த நூல் ஆரம்ப நாட்­களில் சிங்­கப்­பூரில் இந்­தி­யர்­களின் வரு­கையை ஆவ­ணப்­ப­டுத்­து­கி­றது.
அவ்­வாறு வந்த இந்­தி­யர்­களில் சிப்­பாய்கள், தொழி­லா­ளர்கள், வர்த்­த­கர்கள், கடன்­கொ­டுப்­ப­வர்கள், சிவில் சேவை­யா­ளர்­களும் அடங்­குவர். கால­னித்­துவ அர­சாங்கம் இந்­தி­யாவில் குற்­ற­வா­ளி­யாகக் காணப்­ப­டு­கின்­ற­வர்­களை 1787ஆம் ஆண்டு முதல் சுமாத்­தி­ரா­வி­லுள்ள பென்­கூலன் பகு­திக்கும், 1990ஆம் ஆண்­டி­லி­ருந்து மலே­சியத் தீப­கற்­பத்­தி­லுள்ள பினாங்­கிற்கும் அனுப்­பிக்­கொண்­டி­ருந்­தது.
1830களில் சிங்­கப்­பூரும், மலே­சி­யத்­தீ­ப­கற்­பத்தின் மலாக்கா மற்றும் பினாங் துறை­முக நக­ரங்­களும் பிரிட்டிஷ் கால­னித்­துவ ஆட்­சியின் கீழ் கால­னி­க­ளாக மாறின என்று ஆய்­வா­ளர்­களை மேற்­கோள்­காட்டி அந்த நூலில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தேர்ச்­சி­யற்ற தொழி­லா­ளர்­க­ளையும், ஒப்­பந்த அடிப்­ப­டை­யி­லான தொழி­லா­ளர்­க­ளையும் பெறு­வ­தற்கு பிரிட்டிஷ் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு இந்­தியா ஒரு பிர­தான மூல­மாக இருந்­தது. இந்தத் தொழி­லா­ளர்கள் ஆரம்ப நாட்­களில் சிங்­கப்­பூரில் உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளையும், கட்­டி­டங்­க­ளையும் நிர்­மா­ணிப்­ப­தற்குப் பயன்­ப­டுத்­தப்­பட்­டார்கள்.
தென்­னிந்­தி­யர்கள், குறிப்­பாகத் தமி­ழர்கள் இயல்­பா­கவே தங்­க­ளது மேல­தி­கா­ரி­களின் உத்­த­ர­வு­களைப் பணி­வாகக் கேட்டுச் செயற்­ப­டு­ப­வர்­க­ளாக இருந்­தார்கள். அவர்கள் பெரும்­பாலும் கல்விப் பின்­பு­லத்தைக் கொண்­டி­ரா­த­வர்­க­ளா­கவும், தரங்­கு­றைந்த வாழ்க்கை நிலை­மை­களின் கீழ் குறைந்­த­ளவு சம்­ப­ளத்தை ஏற்­றுக்­கொள்­வ­தற்குத் தயா­ராக இருந்­தார்­க­ளென்றும் நூலில் கூறப்­பட்­டி­ருக்­கி­றது.
கால­னித்­துவ ஆட்­சி­யா­ளர்கள் வெளி­யே­றிய பின்­னர்தான் சிங்­கப்பூர் பொரு­ளா­தார ரீதியில் முன்­னேற்றம் கண்­டது. தமிழ்ச்­ச­மூ­கமும் பல்­து­றை­களில் முன்­னேறி சிங்­கப்­பூரின் சுபீட்­ச­மிகு சமு­தா­யத்தின் ஓரங்­க­மாக மாறியது.
நவீ­ன­ காலத் தமிழ்ச்சமூகத்தினால் சிங்கப்பூருக்குச் செய்யப்பட்ட மிக உயர்ந்த சேவையென்று நோக்குகையில் 1999 செப் டெம்பர் முதலாம் திகதி தொடக்கம் 2011 ஆகஸ்ட் 31 ஆம் திகதிவரை சிங்கப்பூரின் ஜனாதிபதியாகப் பணியாற்றிய எஸ்.ஆர்.நாதன் என்று பிரபலமாக அறியப்பட்ட செல்லப்பன் நாதனின் சேவையாகும்.
அதேபோன்று ஏனைய இந்தியர்கள் அமைச்சர்களாக, சிரேஷ்ட சிவில் சேவை யாளர்களாக, தனியார்துறையில் வர்த்தகத் தலைவர்களாகவும் சேவையாற்றியிருக்கி றார்கள் என்றும் அந்த நூலில் கூறப்பட்டி ருக்கிறது.  நன்றி வீரகேசரி 









ஈராக்கில் அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் நுழைந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறை- தூதுவர் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

31/12/2019  ஈராக் சிரியாவில் உள்ள ஈரானிய ஆயுத குழுக்கள் மீது அமெரிக்கா மேற்கொண்ட விமானதாக்குதலிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்கள்  ஈராக்கிய தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள்  நுழைந்துள்ளது வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈராக்கில்  கடும்பாதுகாப்பிற்கு மத்தியில் காணப்படும் பகுதியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள்ளேயே  ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரகத்தின் மதில் மற்றும் வாயில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே புகுந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வழமையாக தடை செய்யப்பட்ட பச்சை வலயத்தின் ஊடாக ஈரானின் ஆதரவாளர்கள் பலர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு பேரணியாக சென்ற பின்னர் தூதரகத்திற்கு வெளியே பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என சிஎன்என் தெரிவித்துள்ளது.
தூதரகத்தின் ஜன்னல்கதவுகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைப்பதையும் தூதரகத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இதேவேளை பாதுகாப்பு காரணங்களிற்காக அமெரிக்க தூதுவரும் தூதரக பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர் என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்களை சேர்ந்தவர்களே இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ரொய்ட்டர்ஸ் அவர்கள் தூதரகத்தின் வாயில்கதவில் வாசகங்களை எழுதியதுடன் கற்களால் கண்காணிப்பு கமராக்களையும் ஜன்னல்களையும் சேதப்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளது.


நன்றி வீரகேசரி 













ரஷ்யாவில் 20 ஆண்டுகளாக பதவியில் நீடிக்கும் புட்டின்

31/12/2019  ரஷ்யாவில் 20 ஆண்டுகளாக ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிகளில் புட்டின் தொடர்ந்து நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உலகின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.
1999ஆம் ஆண்டு ரஷ்யா பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது ஒருங்கிணைந்த சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புட்டின் பணியாற்றினார். 1999ஆம் ஆண்டு ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது அப்போதைய ஜனாதிபதி  போரிஸ் எல்ட்சின், பொறுப்பு பிரதமராக புட்டினை நியமனம் செய்தார்.
அதன்பின் ஜனாதிபதி பொறுப்பை போரிஸ் எல்ட்சின் 1999ஆம் ஆண்டு டிசெம்பர் 31ஆம் திகதி ராஜினாமா செய்தார். அப்போது பொறுப்பு ஜனாதிபதியாக  விளாடிமிர் புட்டினை நியமித்தார்.
அப்போது கிளர்ச்சியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வான்வெளி தாக்குதலை புட்டின் நடத்தியமையால் ரஷ்ய மக்களிடம் பெரும் புகழ் பெற்றார்.
அன்றுமுதல் புட்டின் ரஷ்யாவில் ஜனாதிபதி அல்லது பிரதமர் ஆகிய 2 பதவிகளில் ஏதாவது ஒன்றை வகித்தபடி தன்னை அரசியலில் நிலை நிறுத்தி வந்துகொண்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் புட்டின் அபாரவெற்றி பெற்றார். அவர் 2022ஆம் ஆண்டு வரை ஜனாதிபதியாக இருப்பார். ரஷ்ய நாட்டு அரசாங்கத்தை தனது கை விரல் நுனியில் வைத்திருக்கும் புட்டின் இன்று தனது அரசியல் பயணத்தின் 21ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
புட்டின்  20 ஆண்டுகளாக  ஜனாதிபதி அல்லது பிரதமர் பதவிகளில் தொடர்ந்து நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.
புட்டின் மீது பல்வேறு சர்சைகள் கூறப்பட்டாலும் அவர் ரஷ்யாவில் சக்தி வாய்ந்த தலைவராகவே இருந்து வருகிறார்.  நன்றி வீரகேசரி 











அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் ஈரானின் எலைட் குட்ஸ் படையின் தளபதி பலி!

03/01/2020  அமெரிக்க இராணுவம் இன்று காலை பக்தாத்தில் உள்ள விமான நிலையம் மீது மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதலில் ஈரான் நாட்டின் எலைட் குட்ஸ் படையின் தளபதி ஜெனரல் குவாசிம் சோல்மானி கொல்லப்பட்டதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வந்த கிளர்ச்சிப்படை பாப்புலர் மொபைலைசேஷன் ஃபோர்ஸ்(பிஎம்எப்) படையின் துணைத் தளபதி அபு மஹதி அல் முஹன்திஸும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார்
ஈரான் ஆதரவில் செயல்பட்டுவந்த இஸ்லாமிக் ரெவலூஸனரி கார்ட் கார்ப்ஸ் படையின் தலைவராக குவாசிம் சோல்மானி  செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் நாட்டின் 2 ஆவது அதிகாரம் படைத்த தளபதியாக குவாசிம் சொலைமணி  பார்க்கப்பட்டார். அதாவது மூத்த தலைவரான அயாத்துல்லா அலி காமேனுக்கு அடுத்தபடியாக சுலைமான் கருதப்பட்டார். 
மெத்தமாக இந்த தாக்குதலில் எட்டுப் பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் தளபதி குவாசிம் சோல்மானி கொல்லப்பட்டதை அவர் அணிந்திருந்த மோதிரத்தை வைத்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் பலமுறை சோல்மானி கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகின. 
கடந்த 2006 ஆம் ஆண்டு விமான விபத்தில் சோல்மானி இறந்ததாகவும், 2012 ஆம் ஆண்டில் டாமஸ்கஸில் வெடிகுண்டு தாக்குதலில் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











ஈரானின் மிக முக்கிய தளபதியை கொலை செய்வதற்கான உத்தரவை டிரம்பே வழங்கினார்- வெள்ளை மாளிகை

03/01/2020 பக்தாத்தின் சர்வதேச விமானநிலையத்தில் ஈரானின் மிக முக்கிய இராணுவ அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கான உத்தரவினை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வழங்கினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஈராக்கிலும் சிரியாவிலும் ஈரான் முன்னெடுத்த நடவடிக்கைகளிற்கான தளபதியாக விளங்கிய, அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்த ஜெனரல் காசெம் சுலைமானி பக்தாத் விமானநிலையத்திலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த வேளை ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பிஎம்யூ எனப்படும் ஈரான் சார்பு ஆயுத குழுக்களுடன் ஈரானின் இராணுவதளபதி சென்றுகொண்டிருந்தவேளை இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பிஎம்யூ அமைப்பின் தலைவர் அபுமஹ்டி முகான்டசும் கொல்லப்பட்டுள்ளார்.
ஈரானின் இராணுவ அதிகாரியும் ஈரான் சார்பு ஆயுதகுழுக்களை சேர்ந்தவர்களும் இரண்டு கார்களில் பயணம் செய்துகொண்டிருந்தவேளை ஆளில்லா விமானதாக்குதல் இடம்பெற்றுள்ளது.
டிரோனிலிருந்து மேற்கொள்ளப்பட்டபல ஏவுகணைகள் கார்களை தாக்கின என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள அமெரிக்க படையினரையும் இராஜதந்திரிகளையும் இலக்குவைத்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கான திட்டங்களை ஜெனரல் சுலைமானி வகுத்துக்கொண்டிருந்தார் என  பென்டகன் தெரிவித்துள்ளது.
ஈரானின் எதிர்கால தாக்குதல் திட்டங்களை முறியடிக்கும் நோக்கிலேயேஇந்த தாக்குதல் இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ள பென்டகன் உலகம்முழுவதும் உள்ள எங்கள் மக்களையும் நலன்களையும் பாதுகாப்பதற்கான அனைத்துநடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொள்ளும் எனவும்தெரிவித்துள்ளது.


நன்றி வீரகேசரி 












சொலைமானியின் கொலை முட்டாள்தனமானது- ஈரான்

03/01/2020  ஈரானின்  முக்கிய இராணுவதளபதியை அமெரிக்கா தனது ஆளில்லா விமானதாக்குதல் மூலம் கொலை செய்துள்ளதை ஈரான் முட்டாள்தனமான மிருகத்தனமான செயல் என வர்ணித்துள்ளது.
தளபதி சொலைமானியை படுகொலை செய்யும் அமெரிக்க பயங்கரவாத படைகளின் முட்டாள்தனமான ஈவிரக்கமற்ற நடவடிக்கை பிராந்தியத்திலும் உலகிலும் அமெரிக்க எதிர்ப்பை மேலும் வலுப்படுத்தும் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் முகமட் ஜவாட் ஜரீவ் தெரிவித்துள்ளார்.
இந்த படுகொலை ஆபத்தான முட்டாள்தனமான நிலைமையை கொந்தளிப்பாக்கும் நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.   நன்றி வீரகேசரி 













அணு­சக்தி, ஏவு­கணைப் பரி­சோ­த­னைகள் தொடர்­பான இடை­நி­றுத்­தத்­திற்கு முடிவு

02/01/2020  வடகொரி­யா­வா­னது தனது அணு­சக்தி நிகழ்ச்சித் திட்­டங்­களை விருத்தி செய்­வதை தொடர்ந்து மேற்­கொள்­வ­துடன்  விரைவில் புதிய தந்­தி­ரோ­பாய ஆயு­த­மொன்றை அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாக வடகொரிய தலைவர் கிம் யொங் உன்  நேற்று புதன்­கி­ழமை அறி­வித்­துள்ளார்.


 வருட இறு­திக்குள் வடகொரி­யா­வுடன் அணு­சக்திப் பேச்­சு­வார்த்­தை­களை மீள ஆரம்­பிப்­ப­தற்­கான காலக்­கெ­டுவை அமெ­ரிக்­கா­ தவ­ற­விட்­ட­தை­ய­டுத்தே   வடகொரிய தலைவர்   இவ்­வாறு எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.


அந்த வகையில் அமெ­ரிக்­கா­வு­ட­னான பேச்­சு­வார்த்­தை­களின்போது  அணு­சக்தி மற்றும் நீண்ட தூர ஏவு­கணை பரி­சோ­த­னைகள் இடை­நி­றுத்தம் செய்­யப்­பட்­டமை முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டுள்­ள­தாக கிம் யொங் உன் கூறினார்.


எனினும் பேச்­சு­வார்த்தை­க­ளுக்­கான கதவு தொடர்ந்து திறந்தே உள்­ள­தா­கவும்  அது அமெ­ரிக்­காவின் மனோ­பா­வத்தில் தங்­கி­யுள்­ள­து எனவும்  அவர் தெரி­வித்தார்.


வடகொரியா தனது அணு­சக்தி நிகழ்ச்சித் திட்­டத்தை முழு­மை­யாகக் கைவிடும் வரை  அந்­நாட்­டுக்கு எதி­ரான தடை­களை நீக்க அமெ­ரிக்கா மறுத்­தி­ருந்­தது.


 கடந்த ஆண்டின் இறு­தியில்  வட கொரியா அமெ­ரிக்­கா­வுக்கு தனது நாட்­டுக்கு எதி­ரான தடை­களை நீக்க அழுத்தம் கொடுக்கும் வகையில்  பல சிறிய ரக ஆயுதப் பரி­சோ­த­னை­களை மேற்­கொண்­டி­ருந்­தது.
அணு ஆயுதப் பரி­சோ­த­னைகள் மற்றும்  அமெ­ரிக்க பிர­தான நிலப்பகு­தியை சென்­ற­டையக்கூடிய  கண்டம் விட்டு கண்டம்  சென்று தாக்கும் வல்­ல­மையைக் கொண்ட  ஏவு­க­ணை­களை ஏவிப் பரி­சோ­திப்­பது  என்­ப­னவற்றை நிறுத்­து­வ­தற்­கான சுய பிர­க­டனம் அமெ­ரிக்­கா­வு­ட­னான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்­கான அடித்­த­ளங்­களில் ஒன்­றா­க­வுள்­ளது.



இந்­நி­லையில் வடகொரியத் தலை­ந­கரில் வழ­மைக்கு மாறான முறையில் இடம்­பெற்ற ஆளும் கட்­சியின் 4 நாள் கூட்­டத்தின் முடிவில் கிம் யொங் உன் மேற்­படி எச்­ச­ரிக்­கையை விடுத்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
அமெ­ரிக்கா  பேச்­சு­வார்த்­தை­களை மீள ஆரம்­பிப்­ப­தற்கு வடகொரி­யாவால் திரும்பத் திரும்ப விடுக்­கப்­பட்ட அழைப்பை அலட்­சியம் செய்த நிலையில் வடகொரிய தலைவர் தனது கட்­சிக்­கூட்­டத்தை கடந்த சனிக்­கி­ழமை கூட்­டி­யி­ருந்தார்.



வடகொரிய தலை­வரின்  மேற்­படி எச்­ச­ரிக்­கைக்கு  சில மணித்­தி­யா­லங்கள் கழித்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் தன்னால் வெளியி­டப்­பட்ட அறிக்­கையில்,  கிம் இந்த விவ­காரம் குறித்து உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­திட்­டுள்ளார் எனவும்   வடகொரிய தலைவர் தனது சொல்லை மீற­மாட்டார் எனக் கரு­து­வ­தா­கவும் குறிப்பிட்டுள்ளார்.


தான் வடகொரிய தலை­வ­ருடன் இணைந்து எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்­டி­யுள்­ள­தாக  அவர் கூறினார்.


''அவர் உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­திட்­டுள்ளார். அவர் அணு ஆயுதக் களைவு தொடர்­பான பேச்­சு­வார்த்தை குறித்து உடன்­ப­டிக்­கையில் கைச்­ச­ாத்­திட்­டுள்ளார். அது சிங்­கப்­பூரில் இடம்­பெற்­றது. அவர் தனது சொல்லைக் காப்­பாற்­றுவார் என நான் நினைக்­கிறேன்'' என  ட்ரம்ப் தெரி­வித்தார்.


 அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் மைக் பொம்­பியோ  இது தொடர்பில் குறிப்­பி­டு­கையில், வடகொரியா மோதல் மற்றும் போர் என்பனவற்றுக்கு பதிலாக சமாதானம் மற்றும் சுபீட்சம் என்பனவற்றை தெரிவு செய்யும்  எனத் தான் நம்புவதாக கூறினார்.


தனது எதிர்பார்ப்புக்களுக்கு இணங்கத் தவறினால் புதிய பாதையொன்றைத் தான் நாட நேரிடும் என வடகொரியத் தலைவர் ஏற்கனவே எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










No comments: