30/12/2019  கிழக்கு மாகா­ணத்தில் ஆசி­ரி­யர்­க­ளுக்­கான இட­மாற்­றங்கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதில் 422 ஆசி­ரி­யர்கள் உள்­வாங்­கப்­ப­டு­கி­றார்கள். அவர்­க­ளுக்­கான இட­மாற்றக் கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ள­தென கிழக்கு மாகாண கல்வித் திணைக்­க­ளத்தின் மேல­திக கவ்­விப்­ப­ணிப்­பாளர் ஏ.விஜ­யா­னந்­த­மூர்த்தி தெரி­வித்தார்.
அவர் இது­பற்றி மேலும் தெரி­விக்­கையில்,
ஆசி­ரி­யர்கள் தமது இட­மாற்­றத்­துக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­த­போ­திலும், பல ஆசி­ரி­யர்­களின் விண்­ணப்­பங்கள் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. அவைகள், இட­மாற்­றத்­துக்­கான அடிப்­படைத் தேவை­களை பூர்த்தி செய்­ய­வில்லை. நிரா­க­ரிக்­கப்­பட்­ட­மைக்கு அதுவே கார­ண­மாகும்.


இட­மாற்றம் பெறு­கின்ற ஆசி­ரி­யர்­களின் முழு­வி­ப­ரங்­களும் கிழக்கு மாகாண கல்வித் திணைக்­க­ளத்­துக்­கான இணையத் தளத்தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அதி­லி­ருந்து தமக்குத் தேவை­யான தக­வல்­களை ஆசி­ரி­யர்கள் பெற முடியும். இட­மாற்றம் பெறுவோர் தங்­க­ளுக்­கான இட­மாற்றக் கடி­தங்­களை தற்­போது கட­மை­யாற்றும் வலயக் கல்விப் பணி­ம­னை­யி­லி­ருந்து பெற்றுக் கொள்ள வேண்டும். புதிய பாட­சா­லையில், அவர்கள் கட­மை­களைப் பொறுப்­பேற்­ப­தற்கு முன்பதாக,  கடமையிலுள்ள பாடசாலைக்குரிய  ஆவணங்களையும் பொருட்களையும் அதன் அதிபரிடம் ஒப்படைத்துவிடல் வேண்டும் என அவர்  குறிப்பிட்டார்.   நன்றி வீரகேசரி