மாபெரும் தைப்பொங்கல் விழா - Paramatta Pongal 2020


எதிர் வரும் தைத்திங்கள் 18ம் நாள் சனிக்கிழமை காலை 9:45 மணி முதல் மதியம் 12:00 மணி வரை 
--> Parramatta Centenary Square  இல் இடம் பெறும் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள உங்கள் எல்லோரையும் புலம்பெயர்ந்தோர் சமூக வள நிலையமும்  --> (Community Migrant Resource Centre) Parramatta    பொங்கல் குழுவினரும் அன்போடு அழைக்கின்றனர்.
-->
Community Migrant Resource Centre இன் பேராதரவோடு 8வது வருடமாக அவுஸ்திரேலிய தமிழ்ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (ATBC),  சந்திப்போம் வாழ்த்துவோம் குழுவினர் - அன்பாலயம்  -  கம்பன் கழகம் - தமிழ் முரசு அவுஸ்திரேலியா  - தமிழ் மகளீர் அபிவிருத்தி குழுவினர் (TWDG) இணைந்து நடாத்தும் விழாவில் பங்குபற்ற குடும்பாக வாருங்கள் நண்பர்களையும் அழைத்து வாருங்கள். 
புல அரசியல் பிரமுகர்களும் தமிழ் சமூக நிறுவனங்களும் பொது மக்களும் இணைந்து கொள்ளும் இந்நிகழ்வினூடாக பாரம்பரிய விவசாய பூமியாகிய பரமற்றாவில் எமது வரலாற்றை நிலை நிறுத்துவோம்.
புலம் பெயர்ந்து வந்த எங்களை வாழ வைக்கும் இந்த புண்ணிய பூமிக்கு நன்றி செலுத்தும் நாளாக இது அமையட்டும்.
உழவர் திருநாள.;... தமிழர் பெருநாள்..... சிறக்கட்டும் பரமற்றா மாநகரில்....





-->

No comments: