ஜனா­தி­பதி தேர்­தலும் கூட்­ட­மைப்பின் நிலைப்­பாடும்


08/11/2019 ஜனா­தி­பதி தேர்­தலில் புதிய ஜன­நா­யக முன்­ன­ணி­யின்­ வேட்­பாளர்  சஜித் பிரே­ம­தா­ஸவை   ஆத­ரிப்­பது என்று   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு  தீர்­மானம் எடுத்­துள்­ளது. கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும்    இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி , புௌாட், ரெலோ  ஆகிய கட்­சிகள்   தனித்­த­னியே  தமக்குள் கூடி ஆராய்ந்து   தற்­போது   பொது­நி­லைப்­பா­டொன்­றினை  அறி­வித்­துள்­ளன.  நேற்­றைய தினம்   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்  உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு  வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
ஜனா­தி­ப­தி­ தேர்தல் தொடர்பில்  தமிழ்  தேசி­யக்­கட்­சிகள் ஒன்­றி­ணைந்து  ஒரு தீர்­மா­னத்­திற்கு வர­வேண்டும் என்று   வலி­யு­றுத்­தப்­பட்டு வந்­தது.  தமிழ் மக்­களின்  பிரச்­சி­னைகள் தொடர்பில்  பொது­வான நிலைப்­பா­டொன்­றுக்கு வந்து அத­ன­டிப்­ப­டையில்  பிர­தான   ஜனா­தி­பதி  வேட்­பா­ளர்­க­ளுடன்  கலந்­து­ரை­யா­டல்­களை  மேற்­கொண்டு   இறு­தித்­தீர்­மா­னத்­திற்கு வர­வேண்டும் என்று  தமிழ் மக்கள் சார்பில்   கோரப்­பட்டு வந்­தது.
இதற்­கி­ணங்க ஆறு தமிழ் தேசி­யக்­கட்­சி­களின் தலை­வர்கள் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டி­ருந்­தனர். யாழ்ப்­பாணம்,  மட்­டக்­க­ளப்பு பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யத்­தி­னரின்  ஏற்­பாட்டில்  ஆறு­கட்சித் தலை­வர்­களும் கலந்­து­ரை­யா­டல்­க­ளை­ மேற்­கொண்டு தமிழ் மக்­களின்   பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு தொடர்பில் 13 அம்ச திட்­ட­வ­ரைபும்    தயா­ரிக்­கப்­பட்­டது. இந்த திட்­ட­வ­ரைபில் ஐந்து தமிழ் கட்­சி­களின் தலை­வர்கள் கையெ­ழுத்­திட்­ட­துடன் அந்த  விடயம் தொடர்பில் பிர­தா­ன­வேட்­பா­ளர்­க­ளுடன் பேச்­சு­வார்த்தை நடத்­து­வ­தற்கு  தீர்­மா­னிக்­கப்­பட்டது.
வடக்கு, கிழக்கு இணைந்த பிராந்­தி­யத்தில் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான தீர்வு,  பொறுப்­புக்­கூறல் உட்­பட்ட   13 விட­யங்கள் தொடர்­பி­லேயே  கலந்­து­ரை­யாடல் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் தமிழ் மக்­களின்  பிரச்­சி­னை­க­ளுக்­கான  தீர்வு குறித்த இந்த  யோச­னைகள் தொடர்பில்  தென்­ப­கு­தியில்  இன­வாத பிர­சாரம் முடுக்­கி­வி­டப்­பட்­ட­துடன்  அதனை  நிரா­க­ரிக்கும் வகையில்  செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.  பொது­ஜன பெர­மு­னவின் வேட்­பாளர் கோத்­த­பாய ராஜ­
ப­க் ஷவும் அதன்  தலைவர் மஹிந்த ராஜ­ப­க் ஷவும் இந்த 13 அம்­சங்கள் தொடர்பில்   தமிழ் கட்­சி­க­ளுடன்  பேசு­வ­தற்கு   தயா­ரில்லை  என்று  அறி­வித்­தி­ருந்­தனர்.
இன­வாத பிர­சா­ரங்கள் கார­ண­மாக  புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் வேட்­பா­ள­ரான சஜித் பிரே­ம­தா­ஸவும்   இந்த விடயம் தொடர்பில்  மௌனம் காத்­து­வந்தார்.  இவ்­வா­றான நிலையில்  ஐந்து  கட்­சி­களின் தலை­வர்­களும்  ஒன்­றி­ணைந்து   பிர­தான வேட்­பா­ளர்­களை   சந்­திப்­ப­தற்­கான  முயற்சி  வெற்­றி­ய­ளிக்­க­வில்லை.  இதன் பின்­ன­ணியில்  ஐந்து தமிழ் கட்­சி­களும்  தமது நிலைப்­பா­டு­களை   அறி­விக்­க­வேண்­டிய சூழ்­நிலை  உரு­வா­கி­யி­ருந்­தது.  
முதலில்  தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் தலை­வரும்   முன்னாள் முத­ல­மைச்­ச­ரு­மான சி.வி. விக்­கி­னேஸ்­வரன் தமது கட்­சியின் நிலைப்­பாட்டை அறி­வித்­தி­ருந்தார்.  அதன் பின்னர்   இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி  தமது நிலைப்­பாட்டை  அறி­வித்­தது.  அதனைத் தொடர்ந்து ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சி யும்  தமது நிலைப்­பாட்டை முன்­வைத்­தது.
புௌாட், ரெலோ ஆகிய கட்­சி­களும் தம­து­நி­லைப்­பா­டு­களை அறி­வித்­துள்­ள­துடன் தற்­போது கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும்  மூன்று கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தமது தீர்­மா­னத்தை   தெரி­வித்­துள்­ளன.  இவற்­றுக்கு முன்­னரே தமிழ் தேசிய மக்கள் முன்­னணி  தமது  முடி­வினை அறி­வித்­தி­ருந்­தது.  
உண்­மை­யி­லேயே  ஜனா­தி­பதி  தேர்தல் தொடர்பில் தமிழ் தேசி­யக்­கட்­சிகள் ஒன்­றி­ணைந்து ஓர் முடி­வுக்கு வரா­தமை கவ­லைக்­குரிய விட­ய­மே­யாகும்.  ஏனெனில் அனை­வரும் ஒன்­றி­ணைந்து தீர்­மானம் ஒன்­றுக்கு   வந்­தி­ருந்தால்  அது   தமிழ் மக்­களின்  எதிர்­காலத்­திற்கு   சுபீட்­ச­மா­ன­தாக  அமைந்­தி­ருக்கும்.  ஆனால்   கட்­சிகள்   அத்­த­கைய நிலைப்­பாட்­டுக்கு  வர­மு­டி­யா­மைக்கு  தென்­ப­கு­தியில்    கிளப்­பப்­பட்ட   இன­வாதப் பிர­சா­ரங்கள் கார­ண­மாக   அமைந்­துள்­ளன.
தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்­வுகள் குறித்து தமிழ் அர­சியல் கட்­சிகள்  ஒன்­றி­ணைந்து   முன்­வைத்த  13 அம்ச கோரிக்­கைகள் தொடர்பில்  எதி­ர­ணி­யினர்  இன­வாதப் பிர­சா­ரத்­தினை   மேற்­கொண்டு  அர­சியல் சுய­லா­பத்­தினை  பெற முற்­பட்­ட­மை­யினால்  ஏனைய  தரப்­பி­னரும் அந்த விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு  அச்சம் கொண்­டி­ருந்­தனர்.  இதன்­கா­ர­ண­மா­கவே   தமிழ் கட்­சிகள்  ஒன்­றி­ணைந்து   மேற்­கொண்ட முயற்சி வெற்­றி­ய­ளிக்­காத நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டி­ருந்­தது.
இதன் பின்­ன­ணியில் தமிழ் மக்கள் கூட்­ட­ணியின் செய­லாளர்   சி.வி. விக்­கி­னேஸ்­வரன்    தமது  13 அம்ச  கோரிக்­கைகள் தொடர்பில்  சிங்­கள வேட்­பா­ளர்கள் கவனம் செலுத்­தா­மை­யினால் அவர்­க­ளுக்கு  வாக்­க­ளிக்­கு­மாறு விரல்  நீட்ட முடி­யாது என்றும்  இதனால்  மக்கள்  விருப்­பப்­படி  வாக்­க­ளிக்­கலாம் என்றும் அறி­வித்­தி­ருந்தார்.
சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தலை­மை­யி­லான ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியும்  இரு பிர­தான வேட்­பா­ளர்­க­ளுக்கும் வாக்­க­ளிக்­கு­மாறு கோரும் தார்­மீக உரிமை தமக்­கில்லை என்றும் மக்கள் தமது விருப்­பப்­படி வாக்­க­ளிக்­கலாம் என்றும் தெரி­வித்­தி­ருந்­தது.
இதற்கு முன்னர் தமது முடி­வினை   அறி­வித்­தி­ருந்த கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணி­யா­னது தேர்­தலை  தமிழ் மக்கள் பகிஷ்­க­ரிக்­க­வேண்டும் என்று  கோரி­யி­ருந்­தது.  இவ்­வாறு இந்த    கட்­சிகள் தமது  தீர்­மா­னத்தை அறி­வித்­தி­ருந்த நிலையில் தற்­போது  தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும்  மூன்று கட்­சிகள் ஒன்­றி­ணைந்து  சஜித் பிரே­ம­தா­ஸ­விற்கு  தமிழ் மக்கள் வாக்­க­ளிக்­க­வேண்டும் என்று  அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.
தற்­போ­தைய நிலையில் தமிழ் மக்கள்  தமது  இருப்­பி­னையும் ஜன­நா­யக சூழ­லையும்  தொடர்ந்தும் பாது­காக்கும் வகையில் தமது வாக்­கு­களை பயன்­ப­டுத்­த­வேண்­டி­யது  இன்­றி­ய­மை­யா­த­தாகும்.  தேர்­தலை  பகிஷ்­க­ரிப்­ப­தனால் தமிழ் மக்­க­ளுக்கு  எந்­த­வித நன்­மையும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. தமிழ் மக்கள் தமது ஜன­நா­யக உரி­மை­யினை  பாது­காக்கும் வகையில்  தமது வாக்­கு­களை பயன்­ப­டுத்­த­வேண்­டி­யது   இன்­றி­ய­மை­யா­த­தாகும்.
2005ஆம்  ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­த­லின்­போது   வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தேர்­தலை  பகிஷ்­க­ரிக்கும் நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.  தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் எடுத்த அத்­த­கைய நிலைப்­பாடு கார­ண­மாக தமிழ் மக்கள்  பேர­ழி­வு­களை சந்­திக்கும் நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது.  இத்­த­கைய வர­லாறு  மீண்டும் திரும்­பு­வ­தற்கு பகிஷ்­க­ரிப்பு  உத­வுமே தவிர  வேறொன்­றுக்கும் அத்­த­கைய செயற்­பாடு  உத­வப்­போ­வ­தில்லை.
தமிழ் மக்கள் கூட்­ட­மைப்பும்   ஈ.பி.ஆர்.எல்.எப்.பும் ஒரே நிலைப்­பாட்­டையே    அறி­வித்­துள்­ளன. தமிழ் மக்கள்   தமது விருப்­பப்­படி  யாருக்­கேனும் வாக்­க­ளிக்­க­வேண்டும் என்­பதே அந்­தக்­கட்­சி­களின்  நிலைப்­பா­டாக உள்­ளன.  வாக்­க­ளிக்­க­வேண்­டி­யதன் அவ­சி­யத்தை அந்­தக்­கட்­சிகள்  வலி­யு­றுத்­தி­யுள்­ளன.  எனவே மக்கள்   கட்­டா­ய­மாக  தேர்­தலில் வாக்­க­ளிக்­க­வேண்டும்.  இதன்­மூ­லம்தான்  ஜன­நா­யக உரி­மை­களை  பாது­காத்­துக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கும்.
தமிழ் மக்­களின்  தலை­மைகள்   அந்த மக்­க­ளுக்கு வழி­காட்டும் வகையில்   செயற்­ப­ட­வேண்­டி­யது  இன்­றி­ய­மை­யா­த­தாகும்.  இந்த இரு கட்­சி­களின் தலை­மை­களும்  அந்த   வழி­காட்டும் விட­யத்தில்  தவ­றி­ழைத்­துள்­ள­தா­கவே  தெரி­கின்­றது. ஏனெனில்  ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் மக்கள்  எத்­த­கைய முடி­வினை எடுக்­க­வேண்டும் என்­பது தொடர்பில் உறு­தி­யான அறி­விப்­பினை இந்த தலை­மைகள்  விடுத்­தி­ருக்­க­வேண்டும்.
தற்­போது   தமிழ்  தேசி­யக்­கூட்­ட­மைப்­பா­னது   தனது உறு­தி­யான அறி­விப்­பினை  வெளி­யிட்­டி­ருக்­கின்­றது.  இந்த முடி­வுக்கு வரு­வ­தற்கு முன்னர் பல்­வேறு  கருத்து வேறு­பா­டுகள் கூட்­ட­மைப்பில்  அங்கம் வகிக்கும் மூன்று கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் இருந்­தன.  அந்த  வேறுபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து தற்போது   உறுதியான முடிவு  அறிவிக்கப்பட்டிருக்கின்றது. புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்  சஜித் பிரேமதாஸவுக்கு கூட்டமைப்பு ஆதரவு அளித்தமை  சரியானதா அல்லது தவறானதா என்று  ஆராய்வதைவிட   தமிழ் மக்களின்  தலைமையானது   ஏதோ ஒரு வகையில் அந்த மக்களை வழிநடத்துவதற்கு  முனைந்திருக்கின்றது.
தமிழ் மக்கள் தமது பிரதிநிதிகளாக தெரிவு செய்துள்ளவர்கள்   தீர்க்கமான  முடிவுகளை எடுக்கவேண்டும் என்றே எண்ணுகின்றனர். எனவே  இந்த விடயத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு வழங்கியது என்பதை விட  ஒன்றிணைந்து கூட்டமைப்பாக தீர்மானம் எடுத்துள்ளமை  வரவேற்கத்தக்கது.
தற்போதைய யதார்த்த நிலையினை உணர்ந்து தமிழ் தேசிய அரசியல் கட்சிகள்  செயற்படவேண்டியது  இன்றியமையாததாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில்  பகிஷ்கரிப்பு என்ற விடயத்தை மறந்து தமிழ் மக்கள்  தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டியது இன்றிமையாதது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.   நன்றி வீரகேசரி 









No comments: