எங்கள் கனவு...
எங்கள் கனவுகளுக்கு சிறகுகள் முளைப்பதில்லை
வானில் பறப்பவையோ
எங்கள் கனவுகளுக்கு சிறகுகள் முளைப்பதில்லை
வானில் பறப்பவையோ
வண்ணங்களால் ஆனதுவோ
இல்லை யெங்கள் கனவுகள்;
உறக்கத்தில் வருவதோ
இல்லை யெங்கள் கனவுகள்;
உறக்கத்தில் வருவதோ
வண்ணந் தீட்டிய அழகோகூட இல்லையெங்கள்
கனவிற்கு, எங்களின் கனவுகளெல்லாம்
நிர்வாணாம் இழக்காதவை;
நினைவில் ததும்பும் எண்ணக் குழந்தைகள்
போலே; எண்ணியதை எண்ணியாங்கு
நினைவில் ததும்பும் எண்ணக் குழந்தைகள்
போலே; எண்ணியதை எண்ணியாங்கு
செய்யவிழையும் சிந்தனையின் சிலிர்ப்புகள்
அருஞ்செயல்களின் முதலெழுத்துகள் அவை;
எளியோர்க்கு திறக்காத கதவும், எதிர்வீட்டில்
மூடாத கூரையும், இன்னும்
எளியோர்க்கு திறக்காத கதவும், எதிர்வீட்டில்
மூடாத கூரையும், இன்னும்
கிழிசல் மூட்டாத கால்சட்டையையும் மாற்றும்
கனமான கனவுகள் அவை;
ஒரு செங்கோல் கேட்டு அதை அறத்தொடு
போற்றும் கனவும், பசுந்தோட்கள் அன்றி
ஒரு செங்கோல் கேட்டு அதை அறத்தொடு
போற்றும் கனவும், பசுந்தோட்கள் அன்றி
பணிவிடைச்செய்யும் அரசுமாய் நாடிய
வாழ்வியல் கனவு அது;
பெண் ஆண் ஏற்றயிறக்கமின்றி, பாசமிகு உறவும்
பழி வீண் வஞ்சமெழாது மக்கள்
பெண் ஆண் ஏற்றயிறக்கமின்றி, பாசமிகு உறவும்
பழி வீண் வஞ்சமெழாது மக்கள்
பண்பிலும் அன்பிலும் நெருங்கி இரத்தக்கோடுகள் அழித்து
ஒரு கூட்டிற்குள் அடங்கும் உயரிய கனவு அது;
இரவில் நம்பிக்கையை உடுத்திக்கொண்டு
பகலில் சாதிகளை சோற்றுக் கல்லென அகற்றி
இரவில் நம்பிக்கையை உடுத்திக்கொண்டு
பகலில் சாதிகளை சோற்றுக் கல்லென அகற்றி
மனிதத்துள் மறுநாட்களை தரிசிக்கும்
மனதிற்குள் இவ்வுலக நேயர்களைத் தேடும்
அறிவோடும், பிறப்பை அறங்கொண்டு சலிக்கும்
புனிதர்களின் கனவு எங்கள் கனவு;
பணத்தால் உறவு கிழிவதையும்
பணத்தால் உறவு கிழிவதையும்
பொருட்களால் மட்டுமே ஆன உலகை
அன்பிட்டுத் தைக்கவும், ஒரு ஊசி வேண்டும் என்றனர்
பலநாள் கனவு கண்டோர்;
ஊசி என்னவோ
ஊசி என்னவோ
வள்ளுவத்துள் விழுந்துகிடக்கிறது
வாருங்கள், ஊசியை எடுக்க வள்ளுவத்தைப் படிப்போம்
வள்ளுவத்தின் வழியே தமிழமுது குடிப்போம்;
தமிழமுதின் தனிச்சுவையில் இனி
அறத்தின் கதவுகள் அதுவாக திறந்துகொள்ளும்,
எங்களின் கனவுகளுக்கும் இனி
சிறகுகள் முளைக்கும்; வண்ணங்கள் தீட்டப்படும்!!
வாருங்கள், ஊசியை எடுக்க வள்ளுவத்தைப் படிப்போம்
வள்ளுவத்தின் வழியே தமிழமுது குடிப்போம்;
தமிழமுதின் தனிச்சுவையில் இனி
அறத்தின் கதவுகள் அதுவாக திறந்துகொள்ளும்,
எங்களின் கனவுகளுக்கும் இனி
சிறகுகள் முளைக்கும்; வண்ணங்கள் தீட்டப்படும்!!
No comments:
Post a Comment