உலகச் செய்திகள்



நமிபியா ஜனாதிபதிக்கு உலகின் பெறுமதிமிக்க தனிநபர் விருது

உக்ரேனில் மோதல்களில் 6,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

ஈராக்கில் ஐ.எஸ். போராளிகளால் நால்வருக்கு துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றம்

சிசிலிக்கு அப்பால் மூழ்கிய குடியேற்றகளின் படகு : 10 பேர் உயி­ரி­ழப்பு

அமெரிக்க நியூயோர்க் நகரில் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்து




நமிபியா ஜனாதிபதிக்கு உலகின் பெறுமதிமிக்க தனிநபர் விருது


02/03/2015 பதவியை விட்டு வெளியேறி செல்லும் நமிபியா ஜனாதிபதி ஹிபிகெபுன்ஜி பொஹம்பாவுக்கு உலகின் மிகப் பெரிய பெறுமதிமிக்க தனிநபர் விருதான ஆபிரிக்க தலைமைத்துவத்துக்கான மொ இப்ராஹிம் விருது வழங்கப்பட்டுள்ளது.


ஒவ்வொரு வருடமும் சிறப்பாக ஆட்சி செய்யும் தலைவர் ஒருவரை தெரிவு செய்து 5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 வருட காலத்தில் நான்காவதாக வழங்கப்பட்ட இதற்கு முந்திய விருது எவராலும் உரிமை கோரப்படாத நிலைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.
2004 ஆம் ஆண்டும் தொடர்ந்து 2009 ஆம் ஆண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பொஹம்பாவின் பதவியை புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹேஜ் ஜெயிகொப் பொறுப்பேற்கவுள்ளார்.  நன்றி வீரகேசரி 










உக்ரேனில் மோதல்களில் 6,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

03/03/2015 ஐயும் தாண்­டி­யுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் தலை­வர்கள் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.

மேற்­படி மோதல்­களால் உக்­ரே­னி­லுள்ள பொது­மக்­க­ளது உயி­ருக்கும் உட்­கட்­ட­மைப்­புக்கும் பாரிய அழிவு ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் இதனை மனி­தா­பி­மா­னத்­துக்கு எதி­ரான ஒரு குற்­ற­மாக கருத முடியும் எனவும் மேற்­படி தலை­வர்கள் குறிப்­பிட்­டுள்­ளனர்.
கிழக்கு உக்­ரேனில் ஒரு வரு­டத்­திலும் குறைந்த காலப் பகு­தியில் இடம்­பெற்ற மோதல்­க­ளி­லேயே மேற்­படி மர­ணங்கள் இடம்­பெற்­றுள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் உயர்ஸ்­தா­னிகர் ஸெய்த் அல் ஹுஸைன் தெரி­வித்தார்.
கடந்த பெப்­ர­வரி மாதம் 15 ஆம் திகதி செய்­து­கொள்­ளப்­பட்­டுள்ள யுத்த நிறுத்த உடன்­ப­டிக்­கைக்கு அனைத்துத் தரப்பினரும் மதிப்பளிக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.   நன்றி வீரகேசரி 









ஈராக்கில் ஐ.எஸ். போராளிகளால் நால்வருக்கு துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றம்

04/03/2015 ஈராக்­கிய திக்றித் பிராந்­தி­யத்தில் ஐ.எஸ். போராளிகளால் நால்வருக்கு மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் புதிய வீடியோ காட்­சி­யொன்று அந்த தீவி­ர­வாத குழு­வி­னரால் திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
இது தொடர்பில் சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.
அர­சாங்­கத்­துடன் இணைந்து செயற்­பட்­ட­மைக்­கா­கவே மேற்­படி நால்­வ­ருக்கும் தீவி­ர­வா­தி­களால் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.திக்றித் நகரைக் கைப்­பற்ற அந்­நாட்டு அர­சாங்கம் 30,000 படை­யி­னரை உள்­ள­டக்கி இரா­ணுவ நட­வ­டிக்­கை­யொன்றை ஆரம்­ பித்த தினத்­தி­லேயே இந்த வீடியோ காட்சி வெளி­யி­டப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
மேற்­படி கொல்­லப்­பட்ட நால்வரும் திக்றித் பிராந்­தி­யத்­திற்கு வடக்­கே­யுள்ள நக­ரொன்றைச் சேர்ந்­த­வர்கள் என அந்த வீடியோ காட்­சியில் விப­ரிக்­கப்­பட்­டுள்­ளது.அந்த வீடியோ காட்­சியில் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றத்­துக்கு முன்னர் 'சஷ்வத் அல்-­-அலாம் அமைப்­பி­லி­ருந்து நீக்கம்' என்ற பதா­கை­யொன்று காண்­பிக்­கப்­பட்­டது.தொட­ர்ந்து முக­மூ­டி­ய­ணிந்த தீவி­ர­வா­தி­களால் அந்த நால்­வரும் தலையில் துப்­பாக்­கியால் சுட்டுக் கொல்­லப்­ப­டு­கின்­றனர்.  நன்றி வீரகேசரி 


















சிசிலிக்கு அப்பால் மூழ்கிய குடியேற்றகளின் படகு : 10 பேர் உயி­ரி­ழப்பு

05/03/2015 குடி­யேற்­ற­வா­சிகளை ஏற்றிவந்த பட­கொன்று சிசி­லிக்கு அப்பால் மூழ்­கி­யதில்  10 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.
மேற்­படி படகில் பய­ணித்த 211 பேர் உயி­ருடன் மீட்­கப்­பட்­டுள்­ளனர்.
சிசிலி நீரி­ணை­க்கு அப்பால் கடந்த 24 மணி நேரத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட 7 மீட்பு நட­வ­டிக்­கையின் போது 941 குடி­யேற்­ற­வா­சிகள் மீட்­கப்­பட்­டுள்­ளனர்.
அவர்­களில் 30 க்கு மேற்­பட்ட சிறு­வர்­களும் குறைந்­தது ஒரு பெண்ணும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.
வட ஆபி­ரிக்கா மற்றும் மத்­திய கிழக்கில் அண்மைக் கால­மாக இடம்­பெற்­று­வரும் மோதல்­களால் இடம்­பெ­யர்ந்து ஐரோப்­பிய நாடு­களைச் சென்­ற­டையும் முயற்­சியில் நூற்­றுக்­க­ணக்­கான குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி 



அமெரிக்க நியூயோர்க் நகரில் விமானம் ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்று விபத்து


07/03/2015 அமெ­ரிக்கா நியூயோர்க் நக­ரி­லுள்ள லாகார்­டியா விமான நிலை­யத்தில் பய­ணிகள் விமா­ன­மொன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று வேலியில் மோதி வியா­ழக்­கி­ழமை விபத்­துக்­குள்­ளா­னதில் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது.

அமெ­ரிக்­காவின் பெரும்­பா­லான பகு­தி­களில் வீசி வரும் பனிப்­புயல் கார­ண­மா­கவே இந்த விபத்து இடம்­பெற்­றுள்­ளது.மேற்­படி விபத்­தை­ய­டுத்து விமா­னத்­தி­லி­ருந்த 127 பய­ணி­களும் 5 விமான ஊழி­யர்­களும் உட­ன­டி­யாக வெளி­யேற்­றப்­பட்­டனர். அவர்­களில் 24 பேருக்கு சிறி­ய­ள­வான காயங்கள் ஏற்­பட்­டி­ருந்­தா­கவும் எவரும் பார­தூ­ர­மான காயங் ­க­ளுக்கு உள்­ளா­க­வில்லை எனவும் கூறப்­ப­டு­கி­றது.


காய­ம­டைந்­த­வர்­களில் இருவர் மட்டும் மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளனர்.அட்­லான்­டா­வி­லி­ருந்து நியூ­யோர்க்­கிற்கு பய­ணத்தை மேற்­கொண்ட 'டெல்ற்றா 1086' விமா­னமே இவ்­வாறு விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது.
இந்த விபத்தால் விமா­னத்தின் முன் ­ப­கு­தியும் இறக்­கை­யொன்றும் சேத­ம­டைந்­துள்­ளன.   நன்றி வீரகேசரி 



No comments: