பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி சக்தி காலமானார்.


பிரபல திரைப்பட இயக்குனர் ஆர்.சி சக்தி ( 76) சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால், நேற்று சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது..
ஆர்.சி சக்தி மறைவு குறித்து தமிழ் திரையுலகை சேர்ந்த பலர் ஆழ்ந்த இரங்கல் வெளியிட்டுள்ளனர். இவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிகிறது.



மறைந்த ஆர்.சி. சக்திக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள புழுதிக்குளத்தில் பிறந்தவர் ஆர்.சி.சக்தி. சிறுவயதிலேயே படிப்பில் ஆர்வம் இல்லாமல் நாடகத்தில் கவனம் செலுத்தினார். ‘உணர்ச்சிகள்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இதில் கமல்ஹாசன் நாயகனாக நடித்தார்.
தர்மயுத்தம், மனிதரில் இத்தனை நிறங்களா?, பத்தினிப்பெண், தாலி தானம், ஸ்பரிசம், சிறை, வரம், உண்மைகள், கூட்டுப்புழுக்கள், மனக்கணக்கு உள்பட பல படங்களை இயக்கியவர் ஆர்.சி.சக்தி. 1980 களில் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘சிறை’ படம் ஆர்.சி. சக்திக்கு பெரும் புகழை பெற்று தந்தது. அனுராதா ரமணன் எழுதிய கதையை தழுவி இப்படத்தை அவர் இயக்கி இருந்தார்.
கடந்த 4 நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை எடுத்து வந்திருந்தவர் திடீரென மாத்திரையை எடுத்துக் கொண்ட போது ஏற்பட்ட மூச்சுத் திணறலால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இன்று மதியம் 1.30 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.






சென்னை: பிரபல இயக்குனர் ஆர்.சி.சக்தி சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 76. சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள  தனியார் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சக்தி, சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவரது உடலுக்கு கமல்ஹாசன், கவுதமி உட்பட ஏராளமான  திரை உலகினரும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதி சடங்கு இன்று நடக்கிறது. மறைந்த சக்திக்கு செந்தி என்ற மனைவி, செல்வம் என்ற  மகன் மற்றும் காந்தி, மகேஸ்வரி என்ற மகள்கள் உள்ளனர். பரமகுடி அருகில் உள்ள புழுதிகுளத்தைச் சேர்ந்த சக்தி, சினிமா ஆர்வம் காரணமாக சென்னைக்கு  வந்தார். முதலில் நாடகங்களில் நடித்தார்.

பிறகு வில்லுப்பாட்டுக் கலைஞர் சுப்பு ஆறுமுகம் குழுவில் இணைந்து பணியாற்றினார். 1970ல் ‘அன்னை வேளாங்கண்ணி‘ படத்தில் உதவி இயக்குனர் ஆனார்.  அப்போது டான்ஸ் மாஸ்டர் தங்கப்பனிடம் உதவியாளராக இருந்த கமல்ஹாசனுடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் கமல்ஹாசன், ஸ்ரீவித்யா நடித்த ‘உணர்ச்சிகள்‘ மூலம் இயக்குனர் ஆனார். ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த ‘தர்மயுத்தம்‘, ராஜேஷ், லட்சுமி நடித்த ‘சிறை‘,  விஜயகாந்த் நடித்த ‘மனக்கணக்கு‘, ரகுவரன் நடித்த ‘கூட்டுப்புழுக்கள்‘ உட்பட 18 படங்களை இயக்கியுள்ளார். கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான ஆர்.சி.சக்தி,  கடைசியாக ‘பத்தினிப்பெண்’ என்ற படத்தை இயக்கியிருந்தார்.

No comments: