அழியாத கோலமாக மனதில் நிற்கும் கலைஞன்

.
சினிமா ரசிகர்களின் மனதில் அழகான வீடு கட்டி அழியாத கோலமிட்டு நிரந்தரமாக  வசிப்பவர் பாலுமகேந்திரா. தலைமுறைகளுடன் போட்டியிட்டு ஐந்து படங்கள் தருவேன் என்றவர் எதிர்பார்த்திருந்தவர்களை ஏமாற்றி விட்டுச்சென்று விட்டார். இயக்குநரின்படம் நடிகரின் படம் என்ற நிலையைக் கடந்து பாலுமகேந்திராவின் படம்  என்ற புதிய பரிமாணத்தை ஏற்படுத்தினார். கதை, இசை, இயக்கம், நடிப்பு எல்லாவற்றையும் கடந்து பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவக்காண ரசிகர்கள் படை எடுத்தனர். அவரின் கமரா காட்டும் காட்சிகள் அனைத் தும் பார்வையாளர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும்.

மட்டக்களப்பு அமிர்தகழியைச் சேர்ந்த பாலுமகேந்திராவை காலம் தென்னிந்தியாவில் காலூன்றச் செய்து சாதனையாளராக்கியது. உலகின் சிறந்த படங்களுடன் தமிழ்ப்படங்களையும் ஒப்பிட்டு விமர்சனம் செய்து கேலி செய்பவர்களின் முகத்தில் அடிப்பது போல ஈரான் படங்களைப் பார்த்து ஆச்சரியப்படாதீர்கள். எமது படங்களைப் பார்த்து அவர்க்ள ஆச்சரியப்படவேண்டும் என்று சவால் விடுத்தார். அந்தச்சவாலில் அவர் வெற்றிபெறுவார் என்று நம்பிக் கொண்டிருந்த வேளையில் வாழ்வை முடித்து விட்டுச் சென்றுவிட்டார்.
இலங்கையில் இருக்கும்போது படிக்கின்ற காலத்திலேயே  சிறுகதை, கவிதை, குறும் படம் என்பனவற்றில்  சிறந்து விளங்கினார். இலண்டனில் உயர்கல்வியை முடித்தபன் பூனே திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு கல்வியில் தங்கப்பதக்கத்துடன் வெளியேறினார்.

1971ஆம் ஆண்டு நெல்லு என்ற மலையாளப் படத்தில் ஒளிப்பதிவாளராக   அறிமக மானார்.முதல் படமே அவருக்கு கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதைப் பெற்றுக்கொடுத்தது. 77ஆம் ஆண்டு கோகிலா என்ற படத்தை இயக்கினார்.இது அவருக்கு தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்தது. 1979ஆம் ஆண்டு அழியாத கோலங்கள் மூலம் தமிழுக்கு வந்தார் இதுவும்   விருதுப்படமானது.
பாலு மகேந்திராவின் படங்கள் அனைத்திலும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். இயக்குநர்களும், கதாநாயகர்களும் வெள்ளைத்தோல் பெண்களை தேடி அலைந்த வேளையில் கறுத்தப்பெண்களுடன் காவியப்படம் பலபடைத்தவர்.

ஷோபா என்ற அற்புதமான நடிகையை சினிமாவுக்குத் தந்தார். பாலு மகேந்திராவின் கமராவும்கதை சொல்லி நடிக்கும் சுமாரான அழகையும் மனதில் பதியும் அழகாகத் தருவதில் வல்லவர் கோடிக் கணக்கான பணத்தை இறைத்து படம் எடுப்பதே விடுத்து குறைந்த பட்ஜெட்டில் நிறைவான படத்தைக் கொடுக்கலாம் என்ப தில் இறுதிவரை  உறுதி யாக இருந்தார்.
அழியாத கோலங்கள் படத்தின் மூலம்  எதிர்மறையான விமர்சனங்கள் அவர் மீது சுமத்தப்பட்டது. சிறுவர்கள் நடிக்கும் வயது வந்தவர்களுக்கான  படம் அவர் சொல்லுக்குளானார்.  அழியாத கோலங்கள்  மாநில விருதுகளை அள்ளியபோது விமர்சகர்களின் வாய் அடைக்கப்பட்டது.


இயக்கம், ஒளிப்பதிவு, சிறந்த திரைக்கதை என்ற ரிவுகளில் பல விருதுகளைப் பெற்ற ஒரே கலைஞர். தேசிய விருதுகளையும். தமிழக கர்நாடக கேரள மாநில விருதுகளையும் பெற்று தனக்கு  நிகர் எவரும் இல்லை என்று நிரூபித்தவர். இவை தவிர நந்தி விருது, பிலம்பேர் விருது, என்பவற்றையும் இவர் விட்டுவைக் வில்லை.பூனே திரைப்படக்கல்லூரியிலிருந்து வெளியேறிய பாலுமகேந்திராவுக்கு முதல்பட வாய்ப்புக் கொடுத்தவர்  செம்மீன் மூலம் தேசிய விருதுபெற்ற இயக்குநர் ராமுகாரியத் சேது மாதவன், பரதன் ஆகியோரின் படங்களுக்கும் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். தரமான படங்கள் மலையாளத்திலிருந்து வெளியா தால் தனது திறமையை வளர்ப்பதாகவே மலையாளக்கரையில் ஒதுங்கினார் பாலு மகேந்திரா.

பாலு மகேந்திராவின் புகழ் திரை உலகை ஆச்சரியப்படவைத்த வேளை தனது ஆஸ்தான நாயகியான ஷோபாவுடன் தமிழ்ப்படம் இயக்கத் தயாரானார். அப்போது முள்ளும் மலரும் என்ற படக்கதையுடன் மகேந்திரன் அவரைச் சந்தித்தார். முள்ளும் மலரும் நாவலை ஏற்கன வே,அவர் படித்திருந்ததனால் தனது அழியாத கோலங்கள்படத்தை  ஒத்திவைத்தார் முள்ளும் மலரும்  படத்தின் மூலம் ரஜினியின் தங்கையாக ஷோபா  தமிழுக்கு அறிமுகமானார். முள்ளும் மலரும் படத்தின் வெற்றிக்குப்பின் வெளியான அழியாத கோலங்கள் தமிழ்த்திரை உலகின் புதிய எழுச்சியை ஏற்படுத்தியது

நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து பணியாற்றுவதற்கான  ஏற்பாடுகளைச் செய்தார். பாலும் மகேந்திராவின் இயக்கத்தில் நடிக்க சிவாஜி சம்மதித்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களினால் அது தடைப் பட்டது. மம்முட்டியை இயக்குவதற்கும் பாலு மகேந்திரா ஆசைப்பட்டார். அதுவும் கை கூடாமல் போனது.பாலுமகேந்திராவினால் ஈர்க்கப்பட்ட பலர் அவரைத் தமது படங்களில் ஒளிப்பதிவாளராக்க வேண்டும் என்றுவிரும்பிக் காத்திருந் தனர். எல்லாப் படங்களையும் அவர் ஏற்றுக் கொள்ள வில்லை. தான் இயக்கும்  படத்துக்கு இளையராஜாதான் இசையமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மணிரத்தினம், பாரதி ராஜாஆகியோர் இளை யராஜாவை விட்டு ரஹ்மானிடம் சென்றபோதும் இவர் இளையராஜாவைக் கைவிட்டதில்லை.

ரோஜாபடத்தின் மூலம் ரஹ்மான் இசை, உலகில் பரபரப்பை ஏற்படுத்தியபோது தேசியவிருது தேர்வுக்குழுவின் தலைவராக பாலு மகேந்திரா பணியாற்றினார்.இறுதிச்சுற்றில் இளையராஜாவுக்கும் பாலுமகேந்திராவுக்கும் சமவாக்குகள் கிடைத்தன.  பாலுமகேந்திராவின் வாக்குத்தான் தேசிய விருது பெறுபவரைத்  தீர்மானிக்கும் என்ற நிலை இருந்தது. புதியவரான 22 வயது இளைஞனுக்கு வாக்களித்து ரஹ்மானின் இசைப்பயணத்துக்கு உற்சாக மூட்டினார்.
பாலு மகேந்திராவின் படங்கள் அதிகமானவை இரண்டு பெண்களுடன் குடும்பம் நடத்தும் கணவனைப்பற்றியதாகவே இருக்கும். அவரின் கதைகளைப் போல வாழ்க்கையிலும் அகிலா, ஷோபா, மெளனிகா என்ற மூன்று பெண்கள் குறுக்கிட்டார்கள். ஷோபாவும், மெளனிகாவும் நடிகைகள்  வாழ்க்கையை ஒளிவு மறைவுயின்றி தனது வாழ்க்கையின் மறுபக்கத்தை  வெளியிட்டார். ஷோபாவுடனான தொடர்புகள் பற்றி கிசுகிசு வெளிவந்த போது பெரிதாக அதை வெளிக் காட்டவில்லை. ஷோபாவின் தற்கொலை அவரை பாதித்தது. மெளனிகாவை தாலிகட்டிய மனைவியாக ஏற்றுக்கொண்டார்.
வாழ்க்கையில் துன்பங்களைச் சந்தித்த பாலு மகேந்திரா  யாரிடமும் எதையும் இரந்து கேட்கவில்லை. தனது  கஷ்டங்களை வெளிக் காட்டவில்லை. வாசிப்பு அவரின் இரத்தத்தில் ஊறியது. தனது உதவியாளர்களும் வாசிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.கள். அவரின் பட்டறையில் வளர்ந்த பாலா, ராம், வெற்றி மாறன், சீனுராமசாமி ஆகியோர் தேசிய விருதுப்படங்களைத் தந்ததால் மூலம்  குருவுக்கு  காணிக்கை செலுத்தியுள்ளனர்.

ஊர்மிளா 
சுடர் ஒளி 23/02/14
nantri: varmahblogspot

No comments: