பாரதிரஜாவின் கனவு 1

.
சென்னைத் தெருக்களில் அலைந்த நூற்றுக்கணக்கானவர்களில் பாரதிராஜாவும், இளைய
ராஜாவும் அடக்கம். "மயில்' என்ற திரைக்கதைய உருவாக்கிய பாராதிராஜா அதனை
தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கழகம் சிறந்த
திரைக்கதைகளுக்கு நிதி உதவி செய்து வந்தது. தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்கு
அனுப்பிய விண்ணப்பப்படிவத்தில் கதை இயக்கம் பாரதிராஜா, கமரா நிவாஸ்,
இசை ராஜா என்று குறிப்பிட்டிருந்தார். ராஜா வேறு யாருமல்ல அவர் தான் இளைய
ராஜா.

நிதி உதவி கிடைக்கும். படம் வெளியாகும். அதன்பின்னர் தயாரிப்பாளர்கள் தேடிவ
ருவார்கள் என்று பாரதிராஜா காத்திருந்தார். அவரின் எண்ணம் நிறைவேறவில்லை.
அவருக்கு நிதி உதவி கிடைக்கவில்லை. தெலுங்கு இசையமைப்பாளரான பெண்டி
யாலா சீனிவாசன் என்பவர் "பட்டாம்பூச்சி' என்ற படத்துக்கு இசை அமைப்பாளராகப்
பணிபுரிந்துவந்தார். மெல்லிசை மன்னன் எம்.எஸ். விஸ்வநாதனுக்கு உதவி இசைய
மைப்பாளராகப் பணி புரிந்த கோவர்த்தன் பட்டாம் பூச்சிக்கு உதவியாளராக பணிபுரிந்தார்.

அந்தப் படத்தில் ஓர்கன் வாசிப்பதற்காக இளையராஜாவையும் அழைத்தார் கோவர்த்தன்.
இளையராஜாவின் இசையில் மயங்கிய கோவர்த்தன்,இளையராஜாவுக்கு நிறைய சந்தர்ப்பம் கொடுத்தார். எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்திருக்கு. இருவரும் இணைந்து இசையமைப்போம். கோவர்த்தன் ராஜா என்று டைட்டிலில்போடுவோம் என்று ஒரு நாள் கோவர்த்தன் இளையராஜாவிடம் கூறினார். இளையராஜாவும் அதற்கு ஒப்புக்கொண்டார்.

பிரபல திரைக்கதாசிரியரான செல்வராஜ் ஒருநாள் இளையராஜாவைத் தேடிவந்து ""டேய் ராஜா உனக்காக பஞ்சு அருணாசலம் சார் கிட்ட கதைத்திருக்கிறேன். வா போய்ப் பார்க்கலாம் என அழைத்துச் சென்றார். பஞ்சு அருணாசலத்திடம் இளையராஜாவை செல்வராஜ் அறிமுகப்படுத்தினார்.

இசை அமைத்திருந்தா ஒரு பாட்டுப் படிச்சுக்காட்டு என்று பஞ்சு அருணாசலம் கேட்டார்.
அன்னக்கிளி உன்னைத் தேடுதே, மச்சானைப் பாத்தீங்களா, சுத்தச்சம்பா ஆகிய மூன்று பாடல்களையும் மேசையில் தாளம் தட்டி படித்துக்காட்டினார் இளையராஜா. இளையராஜாவின் பாடலில் சொக்கிப்போன பஞ்சு அருணாசலம் "டியூன் நன்றாக
உள்ளது. இப்பநான் எடுக்கிறபடம் கொமெடிப்படம். நல்லகதை என்றால் உனது டியூன்
வெற்றி பெறும். நான் படம் தயாரித்ததால் நீதான் இசையமைப்பாளர் என்று கூறினார்.

இதே வசனத்தைப் பலமுறை கேட்டதால் இளையராஜா அதனைப் பெரிதாக எடுக்கவில்øல. வழமைபோல ஜி.கே.வெங்கடேஷிடம் உதவியாளராகப் பணியாற்றினார் இளையராஜா. பஞ்சு அருணாசலம் கதைவசனம் எழுதிய மயங்குகிறாள் ஒரு மாது வெற்றி பெற்றது. ஒருநாள் மிக அவசரமாக வந்த செல்வராஜ் பஞ்சு அருணாசலம் அழைப்பதாகக் கூறி இளையராஜாவை, அழைத்துச் சென்றார். அவர்கள் இருவரையும் கண்ட பஞ்சு அருணாசலம், சொன்னாயா என்று செல்வராஜாவைக் கேட்டார். நீங்களே சொல்லுங்கள் என்று செல்வராஜ் கூறினார்.
செல்வராஜ் ஒரு கதை கூறினார். அருமையாக இருக்கு. நான் தயாரிக்கப்போகிறேன்.
நீதான் இசை அமைப்பாளர் என்று பஞ்சு அருணாசலம் கூறினார்.இளையராஜாவும்
சந்தோசப்பட்டார்.கோவர்த்தனும் தானும் இணைந்து இசை அமைப்பதாகக் கூறினார்.
கைராசி, பட்டணத்தில் பூதம் ஆகிய படங்களுக்கு கோவர்த்தன் தனித்து இசை அமைத்தி
ருந்தார். அதனைப்பஞ்சு அருணாசலம் விரும்பவில்லை.நான் இளையராஜாவுக்குத்தான்
சந்தர்ப்பம் கொடுக்கப்போகிறேன் என்றார்.தனது நிலைமையை கோவர்த்தனிடம்
கூறினார் இளையராஜா. இசையமைக்க சான்ஸ் கிடைப்பது மிகவும் கஷ்டம் .ஆகையினால் நீ தாராளமாக இசை அமை என்று கோவர்த்தனன் உற்சாக மூட்டினார்.

பஞ்சு அருணாசலத்தின் படத்துக்கு விஜயபாஸ்கர்தான் வழமையாக இசை அமைப்பார். விஜய பாஸ்கர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட்டாயின. பஞ்சு விஜய
பாஸ்கர் கூட்டணியைப் பிரிக்க வேண்டாம் என்று சிலர் கூறினார்கள். பஞ்சு அருணாசலத்தின் சகோதரர்கள் சஞ்சலப்பட்டு எதற்கு வீண் வம்பு எம்.எஸ்.விஸ்வநாதனைப் போடலாம் என்றார்கள். இளையராஜாதான் இசை அமைப்பாளர் என்பதில் பஞ்சு அருணாசலம் உறுதியாக இருந்தார்.

பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதுவார் என்று கூறினார்கள். கவிஞர் கண்ணதாசன் அவசரமாகச் சிங்கப்பூருக்குச் சென்று விட்டார். அவர் எப்போ வருவார் என்று கேட்டபோது பூஜை முடிந்தபின்னர்தான் வருவார் என்றார்கள். பாடல்களை தான் எழுதுவதாக பஞ்சு அருணாசலம் கூறினார். பூஜை முடிந்து பாடல்பதிவு ஆரம்பமாகும் வேளையில் கரண்ட் கட்டாகியது. இளையராஜாவுக்கு மனதில் இருந்த உற்சாகம் காணாமல் போனது. டோலக் வாசிப்பவர் நல்ல சகுனம் என்றார்.

ரமணி
மித்திரன் 23 06 2007

Nantri :varma blogspot

No comments: