.
எத்தனை வேதனைகள்என்னைப் பெற்றெடுக்கும்போது பெற்றிருப்பாள்…
எத்தனை பொய்கள்என்னைச் சாப்பிட
வைக்க சொல்லியிருப்பாள்…
எத்தனை தாலாட்டுகள்
என்னைத் தூங்கவைக்கப் பாடியிருப்பாள்…
எத்தனை துயரங்கள்
என் படிப்பிற்காக அனுபவித்திருப்பாள்…
எத்தனை சாபங்கள்
என்னை ஏசியியோருக்கு விட்டிருப்பாள்…
எத்தனை போரட்டங்கள்…
என்னை நன்றாக வளர்க்கக் கடந்திருப்பாள்…
எத்தனை அறிவுரைகள்
என்னை நல்வழிப்படுத்த சொல்லியிருப்பாள்…
எத்தனை வேண்டுதல்கள்
என்னை மகிழ்ச்சிக்காக் கடவுளிடம் வேண்டியிருப்பாள்..
இத்தனையும் எனக்காகப் பட்டவள்
இத்தனையும் எனக்காகச் சொன்னவள்
இத்தனையும் எனக்காகக் கேட்டவள்
இன்றோ….
ஆதரவற்று முதியோர் இல்லத்தில்
நிம்மதியின்றி இருக்கிறாள்..
இதுதான் காலத்தின் முடிவாயின்
நாளை என் பாசப்பிள்ளையால்
என் நிலையும் இதுதானோ..??
ர.பாரதி
மூன்றாமாண்டு வணிகவியல்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
திருச்செங்கோடு
No comments:
Post a Comment