உலகச் செய்திகள்


பணிப்பெண்ணை பட்டினியால் வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதிக்கு மரணதண்டனை

உக்ரேனிய பிராந்தியத்தில் படையினரை குவிக்கும் ரஷ்யா; பதற்றநிலை அதிகரிப்பு


கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த திட்டம்
======================================================================


பணிப்பெண்ணை பட்டினியால் வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதிக்கு மரணதண்டனை


07/03/2014  இந்தோனேசிய பணிப்பெண் ஒருவரை பட்டினியால்  வாட வைத்து கொன்ற மலேசிய தம்பதியொன்றுக்கு தூக்கிலிட்டு மரணதண்டனை நிறைவேற்ற  மலேசிய உயர் நீதிமன்றமொன்று உத்தரவிட்டுள்ளது.



வியாழக்கிழமை வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு குறித்து சர்வதேச  ஊடகங்கள் வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பொங் கொங் மெங் (58 வயது) மற்றும் அவரது மனைவி தியொஹ் சிங் யென் (56 வயது) ஆகியோரே தம்மிடம் 3 வருடங்களாக பணியாற்றிய மேற்படி இந்தோனேசிய பெண்ணான இஸ்ரி கோமாரியஹ்ஹை (26 வயது) அடித்து உதைத்து துன்புறுத்தியதுடன் பட்டினியால் வாடவிட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர்.
மேற்படி தம்பதியிடம் பணியாற்ற ஆரம்பித்த போது 46 கிலோகிராமாக இஸ்ரியின் நிறை,  அவர் இறக்கும் போது 26 கிலோகிராமாக இருந்துள்ளது.
அத்துடன் அவரது முதுகு, கைகள் மற்றும் நெற்றியில் சிராய்ப்புக் காயங்களும் காணப்பட்டுள்ளன.
நன்றி வீரகேசரி 





உக்ரேனிய பிராந்தியத்தில் படையினரை குவிக்கும் ரஷ்யா; பதற்றநிலை அதிகரிப்பு

04/03/2014  ரஷ்­யா­வா­னது உக்­ரேனின் கிறி­மியா பிராந்­தி­யத்­தி­லான தனது இரா­ணுவ பிர­சன்­னத்தை பலப்­ப­டுத்­தி­யுள்­ளது.மேற்­படி பிராந்­தி­யத்­தி­லி­ருந்து வாபஸ்­பெற மேற்­கு­லக நாடுகள் வலி­யு­றுத்தி வரும் நிலை­யி­லேயே இந்­ந­ட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.
அந்தப் பிராந்­தி­யத்­தி­லான பாது­காப்பை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான ரஷ்யப் படை­யினர் ஈடு­பட்­டுள்ள நிலையில், அப்­பி­ராந்­தி­யத்தை நோக்கி ரஷ்ய கவச வாக­னங்­களும் கப்­பல்­களும் தொடர்ந்து நகர்ந்து வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
ரஷ்யா உக்­ரேனின் இறை­மையை மீறி­யுள்­ள­தாக உலகின் அதி­கா­ரத்­து­வ­மிக்க 7 பிர­தான தொழிற்­றுறை சக்­தி­களும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளன.
இந்­நி­லையில் உக்­ரே­னா­னது இந்­நெருக்­கடி தொடர்பில் தனது படை­யி­னரை முழு­மை­யாக அணி திரள உத்­த­ர­விட்­டுள்­ள­துடன் மேல­திக சர்­வ­தேச ஆத­ரவைக் கோரி­யுள்­ளது.
தனதும் கிறி­மியா மற்றும் உக்­ரே­னி­ன் ஏனைய பிராந்­தி­யங்­க­ளி­லு­முள்ள ரஷ்ய மொழி பேசு­ப­வர்­க­ளதும் அக்­க­றை­களை பாது­காக்கும் முக­மாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக ரஷ்யா தெரி­வித்­துள்­ளது.
இந்­நி­லையில் ரஷ்யா உக்­ரே­னுடன் போரில் ஈடு­பட விரும்­ப­வில்லை என ரஷ்ய பிரதி வெளி­நாட்டு அமைச்சர் கிர­கோரி கரஸின் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு தெரி­வித்­துள்ளார்.
இந்த நெருக்­க­டி­யா­னது ரஷ்ய பங்குச் சந்­தை­களில் திங்­கட்­கி­ழமை பெரும் வீழ்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.
தற்­போது கிறி­மியா பிராந்­தியம் ரஷ்ய படை­யி­னரின் கட்­டுப்­பாட்டின் கீழ் உள்­ள­தா­கவும், ஆனால் அவர்கள் துப்­பாக்கிப் பிர­யோகம் எத­னையும் மேற்­கொள்­ள­வில்லை எனவும் அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
கிறி­மி­யா­வி­லுள்ள இரு மிகப் பெரிய உக்­ரே­னிய படைத்­த­ளங்கள் ரஷ்ய படை­யி­னரால் சுற்றிவளைக்­கப்­பட்­டுள்­ள­துடன், விமா­ன­நி­லையம் போன்ற முக்­கிய கட்­ட­டங்கள் அவர்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
ரஷ்­யா­வையும் கிறி­மி­யா­வையும் பிரிக்கும் கடல் கால்­வாயில் ரஷ்­யாவின் பக்­க­மாக பெரு­ம­ளவு கவச வாக­னங்கள் குவிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
கிறி­மி­யாவின் தூர கிழக்கு பிர­தே­சத்­தி­லுள்ள பட­கு­து­றை­யொன்றை ரஷ்ய ஆத­ரவு படை­யினர் கைப்­பற்­றி­யுள்­ளனர்.
அப்­பி­ராந்­தி­யத்­துக்­கான சில கைய­டக்கத் தொலை­பேசி சேவை­களும் முடக்­கப்­பட்­டுள்­ளன.
இந்­நி­லையில்இ உக்­ரே­னி­லுள்ள ஆண்­க­ளுக்கு திங்­கட்­கி­ழமை முதல் ஆரம்­ப­மாகும் 10 நாள் இரா­ணுவ பயிற்­சியில் பங்­கேற்க அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.
ரஷ்­யாவின் நட­வ­டிக்கை குறித்து அமெ­ரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், ஜேர்­மனி, இத்­தாலி மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு கடும் கண்­டனம் தெரி­வித்­துள் ­ளன.
ரஷ்ய சொசி பிராந்­தி­யத்தில் எதிர்­வரும் ஜூன் மாதம் இடம்­பெ­ற­வுள்ள 'ஜி8' நாடு­களின் உச்சிமாநாட்டை பகிஷ்­க­ரிக்கப் போவ­தாக அமெ­ரிக்க வெள்ளை மாளிகை குறிப்­பிட்­டுள்­ளது.
உக்­ரே­னுக்கு பல­மான நிதி ஆத­ரவை வழங்­கப்­போ­வ­தாக 'ஜி 7' நாடுகள் தெரி­வித்­துள்­ளன.
இந்­நி­லையில் உக்­ரேனில் நிலவும் நெருக்­க­டிக்கு இரா­ஜ­தந்­திர ரீதியில் தீர்­வொன்றை எட்­டு­வ­தற்கு அமெ­ரிக்க மற்றும் ஐரோப்­பிய ஒன்­றிய அதி­கா­ரிகள் தொடர்ந்து ஈடு­பட்­டுள்­ளனர்.
ஐக்­கிய நாடுகள் பிரதி செய­லாளர் நாயகம் ஜான் எலி­யஸன் இந்த விவ­காரம் தொடர்பில் ஆராய உக்­ரே­னுக்கு பய­ணத்தை மேற்­கொண்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் உக்­ரே­னுக்கு விஜயம் செய்­துள்ள பிரித்­தா­னிய வெளி­நாட்டு செய­லாளர் வில்­லியம் ஹேக்இ ஐரோப்பா இந்த நூற்­றாண்டில் எதிர்­கொண்ட மிகப் ­பெ­ரிய நெருக்­க­டி­யாக உக்­ரே­னிய விவ­காரம் உள்­ள­தாக தெரி­வித்தார்.
கடந்த மாதம் ஜனா­தி­பதி விக்டர் யனு­கோவிச் பத­வி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­ பட்ட பின்னர் பத­வி­யேற்­றுள்ள அர­சாங்­கத்தை அங்­கீ­க­ரிக்க ரஷ்யா மறுத்து வரு­கி­றது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் ரஷ்­யா­வு­ட­னான உறவை வலுப்­ப­டுத்தும் வகையில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­து­ட­னான முக்­கிய உடன்­ப­டிக்­கை­யொன்றை யனு­கோவிச் கைவிட தீர்­மா­னித்­த­தை­ய­டுத்துஇ அங்கு இடம்­பெற்ற வன்­மு­றை­களின் விளை­வாக அவர் பாரா­ளு­மன்ற தீர்­மா­னத்தின் பிரகாரம் பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.   நன்றி வீரகேசரி 







கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைக்க பொதுவாக்கெடுப்பு நடத்த திட்டம்

08/03/2014 உக்ரைன் நாட்டின் தன்னாட்சி பிராந்தியமான கிரிமியாவில் உள்ள ரஷ்யkirmiஆதரவாளர்கள் இன்று தங்கள் பகுதியை ரஷ்யாவுடன் இணைக்க கோரி அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து மூத்த எம்.பி. கிரிகொரி லாபி தெரிவித்திருப்பதாவது:- “கிரிமிய நாடாளுமன்றம் கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்த வேண்டுகோளை ரஷ்ய அதிபர் பரிசீலிக்க வேண்டும் என தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் வரும் மார்ச் 16-ந்தேதி கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைப்பது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இந்த இரண்டு தீர்மானங்களுக்கும் ஆதரவாக 86 எம்.பி.க்களில் 78 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர்” என்றார். சமீபகாலமாக ரஷ்ய ஆதரவு படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள கிரிமியா, உக்ரைனின் தன்னாட்சி பெற்ற குடியரசுப் பகுதியாகும். 18-ம் நூற்றாண்டு வரை ரஷ்யாவுடன் இருந்த இந்த பகுதி, உக்ரைன் தனி நாடாக பிரிந்தபோது கிரிமியாவை 1954ம் ஆண்டு சோவியத் தலைவர் நிகிதா குருஷ்சேவ் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது. நன்றி தேனீ 










No comments: