சிட்னியில் திருக்குறள் மாநாடு - 23.03.2014





சிட்னி  தமிழ் இலக்கிய கலை மன்றம் சார்பாக கடந்த செப்டம்பர் மாதம்  உலக தமிழ் இலக்கிய மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது, அதன் தொடர்ச்சியாக எதிர்வரும் மார்ச் மாதம் 22, 23ஆம் திகதி திருக்குறள் மகாநாடு - 2014 உம், மார்ச் மாதம் 2 ஆம் திகதி திருக்குறள் போட்டிகளும் நடைபெற உள்ளது.

வளர்ந்து வரும் எமது இளம் சமுதாயத்திற்கு தமிழை ஊக்குவிக்கும் நோக்கில் சிட்னி தமிழ் இலக்கிய கலை மன்ற்ம் வருடா வருடம் திருக்குறள் போட்டிகளை நடத்தி வருகிறது. இப்போட்டிகள் மார்ச் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சிட்னி துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் ஐயன் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள தமிழர் மண்டபத்தில் பிற்பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது.

No comments: