“சிங்களமும் தமிழும் அரச கரும மொழிகளாக்கப்பட வேண்டும்!



.
பாராளுமன்றத்தில் 55 வருடங்களுக்கு முன்பே முழங்கிய பொன்.கந்தையா
1956ல் பதவிக்கு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் அரசாங்கம், ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை
பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, தமிழர்களின் வரலாற்றில் அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரே கம்யூனிஸ்ட்
பாராளுமன்ற உறுப்பினரான (1956 - பருத்தித்துறை தொகுதி) தோழர் பொன்.கந்தையா, அந்த மசோதா மீது ஆற்றிய
உரையின் சில பகுதிகள், அதன் முக்கியத்துவம் கருதி கீழே தரப்படுகின்றது.
கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த மசோதாவுக்கு எதிராக
எனது கருத்துக்களைச் சொல்ல நான் இப்பொழுது
எழுகின்றேன்.
இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக சிங்களமும் தமிழும்
ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது தான் எமது கருத்தாகும்.
“நிச்சயமாக சிங்கள மொழியைப் பாதுகாக்க வேண்டுமானால்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று ஒரு கம்யூனிஸ்ட்
கட்சி உறுப்பினர் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது.
அதனாற்தான் “தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டுமானால்
கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று
பருத்தித்துறையில் நானே கூறியுள்ளேன். ஏன்? ஏனென்றால்,
எமது கம்யூனிஸ்ட் கட்சி தான், இறுதியில் எமது நாட்டின்
சுயபாசைகளையும் பண்பாடுகளையும் பாதுகாக்கக் கூடிய
பாதுகாவலனாக இருக்கப் போகின்றது என்பது எங்களுக்குத்
தெரியும்.



கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த மசோதாவுக்கு நான்
எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். இந்த மசோதாவை எதிர்ப்பதற்கான
பொன ; கநi;i; தயா
எனது நோக்கு, நான் ஒரு தமிழனாக இருக்கின்றேன் என்ற உண்மையை மட்டுமே
அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தமிழன் என்ற வகையில், எனக்கு அருமையாக இருக்கின்ற
அனைத்தையுமே இந்த மசோதா திருடுகின்றது என்றே நான் நம்புகின்றேன். எனது கடந்த
காலத்தையும் நிகழ்காலத்தையும் இது மறுக்கின்றது என்பதோடு, கேடு சூழும் இந்தச் சட்டம்,
சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படாதிருப்பின், எமது குழந்தைகளினதும் அவர்தம்
தலைமுறைகளினதும் எதிர்காலத்தையும் மறுத்துக் கொண்டிருக்கும். இந்த மசோதாவின் மூலம்
அரசாங்கம் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாகவும, கௌரவமாகவும்,
நாடடி; ன ; குடிமகக் ளாகவும ; இருநது; கொணடு; வாழும ; பயனுளள் வாழக் i; கயையும, ; அதறக் hன
உரிமையையும் மறுக்கின்றது. நாங்கள் கொண்டிருந்த, கொண்டுள்ள, கொண்டிருக்க வேண்டும்
என்று அவாவுகின்ற எல்லாவற்றையுமே இது எங்களுக்கு மறுக்கின்றது.
எனது தாய் எனக்கு உணவூட்டியபோது பாடிய அந்த மொழியை, எனது மனைவி எனது
குழந்தைக்கு அதனது முதல் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த பயிற்சியளித்த
அந்த மொழியை, எனது தாயோடும் மனைவியோடும் குழந்தைகளோடும் பேசுவதற்கு இந்த
அரசோ அல்லது வேறு எந்த அரசுதானுமோ அல்லது உலகின் கொடுங்கோலன் எவனுமோ
தடைபோட முடியாது. எனது சொந்த மொழியைப் பேசுவதற்கு எவரும் தடைபோட முடியாது.
சட்டங்களும் தடுக்க முடியாது. அந்த உரிமை பிரச்சினையாக இல்லை. பிரச்சினையாக
இருப்பதெல்லாம், நான் இந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டு, நாளாந்த வாழ்விலும்
அரசிலும் எனது மொழியை பிரயோகிக்கக் கூடிய உரிமைதான். எனது மொழி உரிமையை
நஙீ க் ள ; மறுகக் pனற் பொழுது, இநத் நாடடி; ன ; தமிழ ; மகனாக நான ; கொணடி; ருகக் pனற் ,
கொண்டிருக்கக் கூடிய உரிமைகள் ஒவ்வொன்றையுமே நீங்கள் மறுக்கின்றீர்கள்.
நானும் எனது மக்களும் இல்லாது போய்விட வேண்டும், முடிந்துவிட வேண்டும் என்று உங்கள்
போக்கில் நீங்கள் எடுத்த முடிவை எங்களுக்குப் பரிசாக வழங்குகிறீர்கள்.


1 comment:

தமிலு வலய்ப்பதிவு said...

----------------------------------------------------

பாடல்: 008
"சிங்கலம், தமிலுவின் பொதுமய்ப் பன்பே"

பொருல்:
ஒரே ஒரு "க-ச-ட-த-ப, ன-ர-ல" எலுத்தய்க் கொன்ட ஆதி மொலி திரிபு அடய்ந்ததால், சிங்கலம், தெலுங்கு, கன்னடம், மலய்யாலம், தமிலு உல்லிட்ட மொலி பலவும் தோன்ரலாயிட்டு என்ப. ஆயினும் சிங்கலம், தெலுங்கு, கன்னடம், மலய்யாலம், தமிலு உல்லிட்ட மொலி அன்ய்த்திலுமே, "எகர-ஏகாரம், ஒகர-ஓகாரம்" ஒலி னுட்ப வேருபாடு அமய்ந்து இருப்பது சிந்தனய்க்கு உரிய செய்தி ஆகும். மேலும் கீல்க்கானும் சிங்கலம், தமிலு சொல் சிந்திக்கத்தக்கதாய் உல்லது. என்னே சிங்கலம், தமிலு மொலியின் ஒட்ருமய்?

சிங்கலம் = தமிலு.
-----------------
கரா = கரய்,
கல, கல்ல = கல்,
குடா = குடா,
குடுபிக = குடும்பிகர்,
கொடய = கோட்டய்,
தம்பப்பன்னி = தாமிரபரனி,
தமெட = தமிலர்,
பருமக = பெருமக(ன்/ல்)
புர = புரம்,
மடு = மடு,
மருக = மருகர், மருமக(ன்/ல்),
லங்கா = இலங்கய்
(மாவிலங்கய், தொன்மாவிலங்கய், னன்மாவிலங்கய்)

தொடுப்பு:
(1) ஈலாயா கல்வெட்டின் சொல்லும், என்னலும்:
கரா (கரய்) = 53 (1983),
கல, கல்ல (கல்) = 1202 (1970), 47 (1983),
குடா = 656 (1970),
குடுபிக (குடும்பிகர்) = 33 (1970),
பருமக (பெருமகன்/பெருமகல்) = 161 (1970), 471 (1970), 515 (1970), 620 (1970), 1054 (1970),
புர (புரம்) = 1002 (1970)
மடு = 837 (1970)
மருக (மருகர்), (மருமகன்/மருமகல்) = 83 (1970), 289 (1970), 643 (1970),

(2) இலங்கய்:
சங்க காலத்தில் ஓய்மான் தேசத்தின் தலய்னகர் ஆக னன்மாவிலங்கய் வெலங்கிட்டு. ஓய்மான் னல்லியக்கோன், ஓய்மான் னல்லியாதர், ஓய்மான் வில்லியாதர் ஆகியோர் ஓய்மான் தேசத்தய் ஆட்சி செய்திட்ட அரசர் ஆவார்.
(சங்க காலச் சுவடி: புலவர் இடய்க்கலி தேசத்தின் னல்லூர் னத்தத்தனார் இயட்ரிய சிருபானாட்ருப்படய், மட்ரும் புலவர் னன்னாகனார் இயட்ரிய புரனானூட்ருப் பாடல்: 176, 376, 379.)

(3) சொல் பிரப்பு:
ன (னகர்வது) = னதி
ஓ (ஓடுவது, ஓய்ந்திடாமல் ஓடுவது) = ஓயா
R (RUN) = RIVER

----------------------------------------------------