உலகச் செய்திகள்


ஜப்பானில் திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011 ம் திகதி  மீண்டும் நிலநடுக்கம்! 7.1 ரிச்டர் அளவு பதிவாகியுள்ளது


 ஜப்பானை பயங்கர பூகம்பமும் சுனாமியும் தாக்கி பேரழிவை ஏற்படுத்தி  ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், திங்கட்கிழமை காலையும் அங்கு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

ஜப்பானின் வட கிழக்குப் பகுதியில் கடலுக்கடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.1 புள்ளிகளாகப் பதிவானது.

இதையடுத்து 1 மீட்டர் உயர சுனாமி அலைகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கப்பட்டது. ஆனால்,  சுனாமி ஏதும் ஏற்படவில்லை.

இந் நிலையில் சரியாக ஒரு மாதத்துக்கு முன் சுனாமி தாக்கியதன் நினைவாக ஜப்பான் முழுவதும் திங்கட்கிழமை அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்தன



No comments: