துர்க்கை அம்மன் அறிவுத்திறன் போட்டி பரிசளிப்பு

.


ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டி - 2010

பரிசளிப்பு நிகழ்ச்சி 11-02-2011

சென்ற வருடம் நடைபெற்ற ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவின் போது 11-02-2011 ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணிக்கு துர்க்கை அம்மன் ஆலய மண்டபத்தில் பெரும் திரளான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது என்பதை அறியத் தருகின்றோம். பரிசு பெறும் பிள்ளைகளை தயவுசெய்து உரிய நேரத்தில் அழைத்து வரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அலங்கார உற்சவம் துர்க்கை அம்மன் கோவில் திருவிழா எதிர்வரும் 09-02-11 முதல் 19-02-11 வரை விநாயகர், நடராஜர், ஸ்ரீ இலட்சுமி, ஸ்ரீ சரஸ்வதி தேவியருடன் கோவில் கொண்டுள்ள துர்க்கா தேவியர்க்கு அம்பிகையின் தெய்வீகமான திருநாட்களில் மேன்மையான மாசி மக நன்னாளான 18-02-11ஜ அம்பாளின் தீர்த்த உற்சவமாக கொண்டு   09-02-11 முதல் 19-02-11 வரை 12 நாட்கள் தினமும் மாலை அபிஷேக ஆராதனையும் திருவிழாவும் நடைபெற துர்க்கை அம்மன் திருவருள் பாலித்துள்ளது.

நன்றி

அறிவுத்திறன் போட்டி குழு.




No comments: