பகவத் கீதை - புகைப் பழக்கத்தை விடுவது எப்படி?
ஹரே கிருஷ்ணா!

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். கடந்த வாரக் கட்டுரை குறித்து கேள்வி கேட்ட ஒருவர், தீய பழக்கங்களை எப்படி கை விடுவது என்று கேட்டு இருந்தார். அது குறித்து இவ்வாரம் கலந்தாராயலாம் என்று தீர்மானித்தேன்.


அதிலும் குறிப்பாக புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களை முற்றிலுமாக எப்படி விட்டொழிப்பது என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதை மூலம் கூறும் அறிவுரையைப் பார்ப்போம்.
 இந்த வாரக் கட்டுரையில் புகைக்கும் பழக்கத்தை குறித்து மட்டும் நான் எழுதினாலும் எல்லா வித கேட்ட பழக்கத்திற்கும் இந்த வார கட்டுரை பொருந்தும். வழக்கம் போல தங்களுடைய சந்தேகங்களைக் கேட்க தவறாதீர்கள்.

ஒருவர் எதற்காக சிகரெட்(cigarette) பிடிக்கிறார்? இந்த கேள்வி எனக்குள் பலமுறை எழுந்துள்ளது. எனது சந்தேகத்தை எனது புகை பிடிக்கும் நண்பர்களிடம் சிலமுறை கேட்கவும் செய்திருக்கிறேன். பல விதமான பதில்கள் வரும். "புகை பிடிக்கும் போது வரும் அனுபவத்தை விவரிக்க இயலாது. அது காதல் போன்ற ஒரு விஷயம். விவரிக்க இயலாது " என்றனர் சிலர். வேறு சிலர் "எனக்கு மனது சரி இல்லை என்றால் புகைப்பேன். மனது அமைதியாகும்" என்றனர். இன்னும் சிலரோ "இந்த பழக்கம் எப்படி வந்தது என்று எனக்குத் தெரியாது. நண்பர்கள் கற்றுக் கொடுத்தனர். இப்பொழுது நண்பர்கள் அனைவரும் பிரிந்து விட்டோம். ஆனால் இந்த பழக்கம் இன்னும் தொடர்கிறது. காரணம் இல்லாமல் இன்னும் புகைக்கிறேன்" என்றனர்.

சரி. இந்த புகை பிடிக்கும் பழக்கம் நமக்கும், நம் குடும்பத்தினருக்கும், நம் குழந்தைகளுக்கும் கேடு விளைவிக்கின்றது என்று நாம் அனைவருக்கும் தெரியும். அப்படியென்றால் இந்த தீய பழக்கத்தை விட வேண்டியதுதானே? இந்த கேள்வியையும் என் நண்பர்கள் முன் வைத்தேன். " புகைப்பது தீய பழக்கம் என்று எனக்குத் தெரியும். ஆனால் எவ்வளவு முயன்றும் என்னால் அந்த பழக்கத்தை விட முடியவில்லை" என்று நேர்மையாக பலர் ஒப்புக்கொண்டனர். இன்னும் சிலரோ "சிகரெட் பிடிப்பதை விட வேண்டும் என்று ஆசை தான். ஆனால் எனக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கு இதை விட வேறு மருந்து எனக்கு இப்பொழுது இல்லை" என்று மிக கவலையாக கூறினர்.

இங்கு நான் கூறியது அனைத்தும் எனது நண்பர்கள் மத்தியில் வந்த விவாதங்கள் மட்டுமே. இதை போல நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இதை போன்ற நிகழ்வுகளும் அனுபவங்களும் ஏற்படுவது இயல்பே. "Cigratte smoking is injurious to health". அதாவது புகை பிடிப்பது உடலுக்கு கெடுதல் விளைவிக்கும். இந்த வாசகம் உலகத்தில் உள்ள அனைவருக்கும், அதிலும் குறிப்பாக புகை பிடிப்பவர்களுக்கு மிக நன்றாக மனப்பாடமாகத் தெரியும். ஆனாலும் இந்த கெட்ட பழக்கத்தை எப்படி விடுவது என்று தெரியாமல் நாள்தோறும் திண்டாடிக் கொண்டிருகின்றனர். நான் சில வாரங்களுக்கு முன்பே கூறி இருந்தது போல நாம் எதிர்நோக்கும் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு ஸ்ரீ கிருஷ்ணர் அருளிய பகவத் கீதை ஆகும். இது குறித்து கிருஷ்ணர் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.

ஒருவர் எதற்காக புகைபிடிக்கிறார்? இந்த கேள்விக்கு விடை தேடுவோம். ஒரு சிறுவன் எதற்காக இனிப்பான தின்பண்டத்தை உண்கிறான்? அவனுக்கு இனிப்பின் சுவை பிடித்து இருக்கின்றது. அதனால் அந்த சுவையினால் ஈர்க்கப்பட்டு, அந்த சுவைக்கும் அனுபவத்திற்காக இனிப்பினை உண்கிறான். அது போலத் தான் புகை பிடிக்கும் நண்பர்கள் தாங்கள் புகைக்கும் போது ஏற்படும் ஒருவிதமான அனுபவத்தை நாடி இந்த தீய பழக்கத்திற்கும் அடிமையாகின்றனர். எப்படி ஒரு சிறுவனுக்கு இனிப்பு ஒரு சுவையை தருகின்றதோ அது போல நம் நண்பர்களுக்கும் புகைக்கும் அனுபவமும் ஒரு சுவையை தருகின்றது. சிறுவனிடம் இருந்து இனிப்பை பறித்தால் அவன் துடி துடித்துப் போவான். புகைப்பவர்களிடம் இருந்தும் சிகரெட்'ஐ பறித்தால், அவர்களுக்கும் அதே கதி தான். சிறுவனிடம் இருந்து இனிப்பை பறிக்க வேண்டுமெனில் அதற்க்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவனுக்கு அந்த இனிப்பை விட மகிழ்ச்சி தரக்கூடிய வேறொரு பொருளைத் தர வேண்டும். உதாரணமாக ஒரு விளையாட்டு பொம்மையைத் தந்தோமேயானால் அவன் எந்தவித அழுகையும் இல்லாமல் இனிப்பை விட்டு விட்டு பொம்மையுடன் விளையாட போய்விடுவான். பொம்மையின் சுவை இனிப்பின் சுவையினை விட இனியதாக இருக்கும் அவனுக்கு. அது போல புகை பிடிப்பவர்களிடம் இருந்து சிகரெட்'ஐ பறிக்க வேண்டுமானால் அவர்களுக்கு சிகரெட்'ஐ விட இன்னும் அதிக சுவை தரக்கூடிய வேறு ஒன்றைக் கொடுக்க வேண்டும். அதை விட்டு விட்டு திடீரென்று சிகரெட்'ஐ நிறுத்தச் சொன்னால் நிறுத்த முடியாது. அப்படியே நிறுத்தினாலும் அந்த நிறுத்தம் அதிக நாள் நீடிக்காது. ஏனென்றால் எந்த ஒரு விஷயத்தை மறக்க நினைக்கின்றோமோ, சொல்லி வைத்தது போல மனது அந்த ஒரு விஷயத்தைப் பற்றி மற்றும் தான் நினைக்கும்.
ஒரு ஊரில் ஒரு போலி வைத்தியன் ஒருவன் இருந்தான். ஊரை ஏமாற்றி, மக்களின் நோய்களை தீர்ப்பதாகச் சொல்லி நிறைய செல்வங்களைக் குவித்தான். அவனிடம் ஒரு நாள் வயிற்று வழியால் துடித்த ஒரு நோயாளி வந்தான். அவனின் நோய் குறித்து ஆராய்ந்த வைத்தியன் அவனிடம் மருந்தைக் கொடுத்து, "இந்த மருந்தினை நீ ஒரு நாளைக்கு மூன்று முறை உண்ண வேண்டும். மிக முக்கியமான விஷயம். இந்த மருந்தை உண்ணும் பொழுது நீ கரிய நிறமுடைய குரங்கைப் பற்றி மட்டும் நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் இந்த மருந்து வேலை செய்யாது. ஒரு வாரம் சென்று வா" என்று கூறி அனுப்பினான். அவன் கூறியதைப் போல நோயாளியும் ஒரு வாரம் கழித்து வந்தான். அவன் வைத்தியனிடம் "உங்கள் மருந்து வேலை செய்யவே இல்லை. எனக்கு இன்னும் வயிற்றுவலி இருக்கிறது" என்றான். அதற்கு வைத்தியன் "நான் குடுத்த மருந்தினை நீ உண்ணும் பொழுது கரிய நிறமுடைய குரங்கினை நினைத்தாயா?" என்று கேட்டான். அதற்கு நோயாளி கூறினான் "ஆமாம் வைத்தியரே. நான் குரங்கைப் பற்றி நினைக்க கூடாது என்று எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் குரங்கு மட்டும் தான் என் நினைவுக்கு வந்தது" என்றான்.

இந்த நோயாளியைப் போல தான் புகைப்பவர்களின் நிலைமையும். சிகரெட்'ஐ பிடிக்க கூடாது என்று நினைத்து நினைத்தே மறுபடியும் சிகரெட்'ஐ குறித்து நினைக்கின்றனர். அதனால் அவர்களால் புகைப்பதை நிறுத்தமுடியவில்லை. துரதிஷ்டவசமாக "nicotin patch"(நிகோடின் பாச்) எனப்படும் செயற்கை முறையும் உடலுக்கு கெடுதலைத்தான் விளைவிக்கின்றது. அதனால் புகைப்பதை யாராலும் முழுமையாக நிறுத்த முடியவில்லை.

ஆகவே புகைப்பதை நிறுத்த ஒரே வழி சிகரட்'ஐ விட சுவை தரக்கொடிய மற்றொரு பொருளை அடைய வேண்டும். அப்பேற்பட்ட ஒரு பொருள் கிடைத்தல் பிறகு புகைப்பழக்கத்தை தூர எறிந்து விடுவர். அப்படி புகைப்பதை விட சுவை தரக்கூடிய பொருள் தான் என்ன?


விஷயா வினிவர்தந்தே
நிரஹாரஸ்ய தேஹின
ரசவர்ஜம் ரசோபச்ய
பரம் திருஷ்ட்வா நிவர்த்ததே
- பகவத் கீதை 2 .59

"புலன் நுகர்வினின்றும் உடலை உடைய ஆத்மா கட்டுப்படுத்தப் பட்டாலும் கூட புலன் நுகர்வுப் பொருட்களுக்கான சுவை இருக்கலாம். ஆனால், உயர்ந்த சுவையொன்றை அனுபவிப்பதால், அத்தகு ஈடுபாடு முழுவதுமாய் முற்றுப்பெற, அவன் உணர்வில் நிலை பெறுகின்றான்."

கீழ்த்தரமான சுவையிலிருந்து விடுபட வேண்டுமெனில் உன்னத சுவையினை நாம் நாட வேண்டும். நம்முடைய ஐந்து புலன்களில், நாம் அடக்குவதற்கு மிக கடினமான புலன் நம்முடைய நாக்கு ஆகும். உதாரணமாக நாம் ஒரு ஊசியின் மெல்லிய துளையில் நூலைக் கோர்கின்றபோது நம்முடைய நாக்கு என்ன செய்கின்றது என்று கவனியுங்கள்.இரண்டு உதடுகளில் ஒன்றைத் தொட்டுக்கொண்டு அசையாமல் நிற்கும். அது அசைந்தால் மற்ற நான்கு புலன்களும் பாதிக்கும், நூலைக் கோர்க்க முடியாது. இந்த நாக்கை கட்டுப்படுத்தாமல் மற்ற புலனைக் கட்டுப்படுத்த முடியாது. அதே நேரத்தில் இந்த நாக்கு ஒன்றினைக் கட்டுப்படுத்தினால் மற்ற புலன்களை சுலபமாக அடக்கிவிடலாம்.

சிகரெட் பிடிப்பவர்களுக்கு அந்த சிகரெட்'இல் இருந்து ஒரு விதமான சுவையினை இந்த நாக்கு தான் அனுபவிக்கின்றது. இந்த நாக்கு ஒன்றைக் கட்டுப்படுத்தினால் சிகரெட்'ஐ மிக சுலபமாக விட்டு விடலாம். இந்த நாவினைக் கட்டுப்படுத்த, அதற்கு உயர்ந்த சுவை அளிக்கக் கூடிய இரண்டு விஷயங்களைத் தர வேண்டும் - ஒன்று ஸ்ரீ கிருஷ்ணருக்குப் படைத்த பிரசாதம், மற்றொன்று நாம் சென்ற வாரம் ஜெபித்த ஹரி நாமம்.

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே!
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே!!

இந்த இரண்டு உணவினை நம்முடைய நாவிற்கு அளித்தால் நம்முடைய நாக்கு இந்த சிகரெட் என்ற கேடு விளைவிக்கும் சிறிய சுவையினை விட்டு விட்டு, அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய பெரிய சுவையான கிருஷ்ண பக்தியை நாடும். பிரசாதம் மற்றும் ஹரி நாமம் என்ற இந்த இரண்டு மருந்தினை நாம் உண்டால் எல்லாவிதமான தீய பழக்கத்தில் இருந்தும் 100% பூரண நிவாரணம் ஏற்படும். இந்த முறையைப் பின்பற்றி புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் என்ற இரு தீய பழக்கத்திலிருந்தும் முழுமையாக விடுபட்டவன் என்ற முறையில் என்னால் இந்த உண்மையை ஆணித்தரமாக கூற முடியும்.

உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இந்த கட்டுரையை காண்பித்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள். இக்கட்டுரை குறித்த எல்லாவித சந்தேகங்களையும் கேள்விகளையும் வரவேற்கிறேன்.

என்றும் அன்புடன்

கனஷியாம் கோவிந்த தாஸ்

8 comments:

Anonymous said...

If anyone wants to give up smoking, it is simple.

When you get that urge breathe in and out gently using your stomach this could be called yogic breathing.

Unknown said...

Eating Krishna prasadam is even more easy:)!

Anonymous said...

romba mukkiyam

Anonymous said...

Wonderful article Mr Ghanashyam. Simple and powerful. I have a question. I smoke once in a while. In order to even start following your method, I need to quit the habit and then chant Krishna and eat prasadam. Is it not? But where to start? Your reply much appreciated.

Kiran

Anonymous said...

what is the possibility; method you described will work for everyone? Do we have some practical proof.
Sorry, if my question is rude, but what I am asking will benefit myself and others.

Unknown said...

Hare Krsna Kiran!
Sorry for the delay in reply. Thanks for your practical question. You do not need to do any preparation to chant Hare Krsna and eat prasadam. Irrepective of your current state and condition, you can chant Hare Krsna and eat prasad. Once you do these two things, you will slowly develop the will power to give up smoking gradually and one fine day you will quit the habit completely.
You are like a small piece of iron that sticks to the magnet of smoking habit. By chanting Hare Krsna and eating prasad, you bringing another bigger and powerful magnet close to the original magnet. Since Hare Krsna is a powerful magnet, you will automatically detach yourself from the smaller magnet and get attracted to the bigger magnet of Krsna.

So delay no more and start the chanting. For any help or guidance please email me on ghanashyam.jps@gmail.com


Anbudan
Ghanashyam

Unknown said...

This is in reply to the question posted on May 19, 2010 1:15 PM...
Hi,
Thanks for your sincere question. Appreciate your intention to help others.
If you need any practical proof, then here I am. By following the process I have outlined in this article I have successfully quit smoking. I can also show you dozens of people who have successful quit the habit following the same process.
As they say "The proof of the pudding is in the eating". So anyone who wants to know if this process really works, please give it a try. This is Krsna's method and Krsna never fails:)
There is no cost attached to this process. It is free and it works. If you have the bad habit, why don't you follow this process for a trial period of 1 month. Are you up for the challenge:)? Email me on ghanashyam.jps@gmail.com


Anbudan
Ghanashyam

தமிழ்வாணன்(Thamizhvaanan) said...

நல்ல தகவல்...நன்றி நண்பரே...முயற்சிக்கிறேன்.