நான்கு வகை பக்தர்கள் யார்?

.

ஹரே கிருஷ்ணா! வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். கடவுளை வழிபடும் அனைவரும் பக்தர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இந்த பக்தர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். இது குறித்து ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் என்ன கூறியுள்ளார் என்பதை இந்த வாரம் காண்போம் .


சதுர்விதா பாஜந்தேமாம் ஜனா: ஸுக்ருதினோர்ஜூந
ஆர்த்தோ ஜிக்யசூர்த்தார்தீ க்யாநி ச பரதர்ஷப

- பகவத் கீதை - 7 .16

அர்த்தம்:
பரதர்களின் சிறந்த அர்ஜுனா நான்கு விதமான நல்லோர் எனக்கு தொண்டு செய்கின்றனர் - துயருற்ரோர் , செல்வம் விரும்புவோர் கேள்வியுடையோர், பூரணத்தின் அறிவை தேடுவோர் என்பவர் ஆவார்

இத்தகு நான்கு விதமான மனிதர்கள் பக்தி தொண்டிற்காக பரம புருஷனிடம் வரும் போது , தூய பக்தர்களின் உறவால் தூய்மையடைந்து தரமும் தூய பக்தர்களாகி விடுகின்றனர் .

அதனால் கண்ணனை வழிபடும் காரணத்தை பற்றி கவலை கொள்ள தேவை இல்லை. காரணம் எதுவாக இருந்தாலும், பக்தியுடன் கூப்பிட்டவார்களுக்கு அருள் புரியும் கருணா மூர்த்தி அவன். இந்த வழியில் பகவத கதையான "கஜேந்திர மோக்ஷம்" பற்றி இந்த வாரம் காண்போம்.
திரிகூட பர்வதத்தில் கஜேந்திரன் என்னும் யானை தலைவன் அவன் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் வாழ்ந்து வந்தான் . அவன் மிக பலசாலியான யானை யாக இருந்தான் , அவனது வாடையை முகர்ந்த புலி, சிங்கம் , சிறுத்தை எல்லாம் அலறி அடித்து ஓடுமாம். அவனால் காதில் மான், முயல், எருமை மற்றும் எல்லா ஜீவராசிகளும் பயமில்லாமல் திரிந்தன.
ஒரு நாள் அவனும் அவனது தோழர்களும் சேர்ந்து அருகில் உள்ள ஒரு பூஷ்கரணியில் நீர் பருகிய பின், அதில் குளித்து தான் நாள் முழுதும் நடந்த களைப்பை போக்கிகொண்டு இருந்த வேளையில் திடீரென ஒரு முதலை நீரில் இருந்து கஜேந்திரனின் காலை பிடித்து, கடித்து உண்ண தொடங்கியது. கஜேந்திரன் கடும் முயற்சி செய்து விடுவித கொள்ள முயன்றும் அவனால் முடியவில்லை, அவனது நண்பர்கள் அவனை விடுவிக்க முயன்றும் எதுவும் நடக்கவில்லை. கஜேந்திரன் அந்த முதலையிடம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் போர் புரிந்து விடுவித்துக்கொள்ள முயன்றான், வருடங்கள் ஓடியது, கஜேந்திரன் தான் பலத்தை இலக்க தொடங்கினான். நீரில் இருக்கும் முதலைக்கு பலம் கூடிக்கொண்டே சென்றது. கஜேந்திரன் சுற்றும் முற்றும் பார்த்து, எண்ணினான் நான் ஆயிரம் வருடங்களாக போராடியும், என் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் போர் புரிந்தும் இன்னும் நான் நீரில்லேயே இருக்கிறேன், என் முடிவு அருகே வந்து விட்டது, இந்த நிலையில் இருந்து என்னை ஒருவன் காப்பாற்ற வேண்டுமானால் அவன் சர்வரக்ஷகனாக தான் இருக்க முடியும் என்று உறுதி கொண்டு , தான் தும்பிக்கையால் பூஷ்கரணியில் உள்ள தாமரை மலரை எடுத்து தான் மனதார " கிருஷ்ணா ஆதி மூலமே " என்னை காப்பாற்று , நான் ஆபத்தில் உள்ளேன் என்று பகவானை பிரார்த்தனை செய்தது. ஆதி மூலமே என்று கதருகின்ற பக்தனின் மனக் குரல் கேட்டு அந்த சர்வ அந்தரியாமியான அந்த "ஆபத் பாந்த அநாத ரக்ஷகன் " கருட வாகனத்தில் வந்து தான் சுதர்சன சக்கரத்தினை ஏவி அந்த முதலை இடம் இருந்து கஜேந்திரனை காப்பாற்றினார். .
ஆகையால் பிறப்பிலேயே கிருஷ்ண பக்தனாக இருந்தால் தான் பகவன் ரக்ஷிப்பான் என்பது எல்லாம் கிடையாது , கிருஷ்ண என்று யார் உள்பக்தி மற்றும் அன்போடு கூப்பிடலும் ஓடி வருவார். துயரத்தின் போது பகவானை நினைப்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு வரலாறு பார்த்தோம், கூடிய விரைவில் செல்வத்திற்காக பகவானை வழிபாடு செய்து பயன் அடைந்தவர்களை காண்போம்.

ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!

என்றும் அன்புடன்,
கனஷியாம் கோவிந்த தாஸ்