நீங்களும் அழகிதான்..!

.


பெண்கள் எப்பொழுதும் தங்களை அழகாக வைத்திருப்பதற்கு அரும்பாடுபடுவார்கள். அப்படி அழகாக இருப்பதற்கான சில டிப்ஸ்...
கண்
கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வேண்டுமாயின் வெள்ளரிக்காய் சாற்றை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் வைத்து வரவும்.

உதடு
உதடு வசீகரமாக இருக்க வேண்டுமா? முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் ஆகிய மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் இளஞ்சூடான நீரில் கழுவினால் கிடைத்துவிடும் வசீகரம்.

முகத்தின் எண்ணெய் பசை

முட்டையின் வெண்கரு 7 தேக்கரண்டி, தேன் கால் தே.க., மாதுளைச் சாறு அரை தே.க. போன்ற மூன்றையும் கலந்து, அரை மணி நேரம் வரையில் முகத்தில் பூசிவிட்டு பின்னர் கழுவினால் எண்ணெய் பசை ஓடிவிடும்.

முக வறட்சி
பச்சை கொத்த மல்லி அல்லது புதினாவை நன்றாக அரைத்து முகத்தில் பூசி பிறகு சிறிது நேரம் கழித்து கழுவினால் வறட்சி நீங்கும்.

கரும்புள்ளி
முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க சாதிக்காயை அரைத்துப் பூசுங்கள்.

முகப்பரு
பூண்டு அல்லது கருந்துளசியை அரைத்துப் பூசிவர நாளடைவில் பருக்கள் மறையும்.

வாய் நாற்றம்
புதினா கீரையைக் காய வைத்து தூளாக்கி அதனால் பல் துலக்குவதால் வாய் நாற்றமின்றிப் பல் பளிச்சென்றிருக்கும்.

வெண்மையான பல்
இரவு நேரத்தில் பச்சை கேரட்டை மென்று தின்றால் பல் உறுதியடைவதுடன் வெண்மையும் பெறும்.

கை
பாத்திரம் தேய்ப்பதால் ஏற்படும் கை வெடிப்புகளுக்கு உருளைக்கிழங்கை வேக வைத்து பொடித்து கைகளில் தேய்த்து வந்தால் கை மிருதுவாகும்.

நகம்
நகங்களில் சிதைவு ஏற்படாமலும் வெண்மையாகவும் இருக்க வேண்டுமாயின் சூரியகாந்தி எண்ணையை கை, கால் நகங்களில் தடவ வேண்டும்.

மார்பக பாதுகாப்பு
வெள்ளைக்குன்றிமணி வேரை எலுமிச்சம் பழச்சாறு இட்டு நன்றாக அரைத்து மார்பகங்களின் மீது பூசிவர, தளர்ந்த மார்பகம் அழகான வடிவம் பெறும்.

வியர்வை நாற்றம்
ஆவாரம் பூவை உலர்த்தி, சமமான அளவு பயிற்றம் மா கலந்து அரைத்து தினமும் தேய்த்துக் குளித்து வந்தால் வியர்வை நாற்றம் அகலும்.

உடல் பருமன்
பப்பாளிக்காயை பொரியலோ, குழம்போ வைத்து வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

பாதம்
பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு தே.க., பன்னீர் இரண்டு தே.க., எலுமிச்சம் சாறு ஒரு தே.க. ஆகிய மூன்றையும் கலந்து வெந்நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.

No comments: