நடிகர் விஜய்க்கு ஆப்பு…

.
தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களின் அவசர கூட்டத்தில் விஜயின் படங்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கமுடியாது என அறிவித்திருக்கிறார்கள்.

குருவி, வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா போன்ற படங்களின் மூலம் திரையரங்க உரிமையாளருக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டிருப்பதால் அதற்கு நஷ்டஈடு வழங்க வேண்டுமென நடிகர் விஜயிடம் அவர்கள் கோரியிருந்தனர். ஆனால், அந்த நஷ்டஈட்டினை விஜய் வழங்கவில்லை. இதனால் கொதித்துப்போன திரையரங்க உரிமையாளர்கள் ஒன்றுசேர்ந்து விஜயின் படங்களுக்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என அறிவித்திருக்கிறார்கள்.
தொடர் தோல்விகளால் துவண்டுபோயிருக்கும் விஜய்க்கு இந்த அறிவிப்பு மேலும் தலைவலியைக் கொடுத்திருக்கிறது.

No comments: