ஆலம் விழுது - சிறுகதை சோனா பிறின்ஸ்

.


அலுவலக வேலையில் முழுமையாக ஈடுபட முடியாமல்இ கண்ணனுக்கு மனம் கனத்தது. எத்தனையோ வருடங்களாக குழந்தைக்காக ஏங்கியவனுக்குஇ ஆழக்கடலில் தேடிய முத்தாகக் கிடைத்த தன் மகள் சரண்யாஇ முதல்நாள் இரவு தூங்கும் வரைக்கும் அழுததை நினைக்கஇ கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது. அதனைப் பிறர் பார்த்து விடாமல் மறைத்துக் கொண்டான்.

எதற்காகத் தன் மனைவி தேவகி இப்படி நடந்து கொள்கின்றாள் எனக் குழம்பினான் கண்ணன். நன்கு படித்தவளால் ஒரு குடும்பப் பெண்ணாக நடந்து கொள்ள முடியவில்லையா? ஒரு வேளை அதிகம் படித்ததினால்தான் பிறர் மனங்களைப் படிக்கும் தன்மையை இழந்து விட்டாளா? என மனதிற்குள் கேள்விக்கு மேல் கேள்வி எழுந்தது அவனுக்கு. புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் கண்ணன் தன் இனத்தையும் தாயக மண்ணையும் மறந்ததில்லை.அதனால் அந்தக் கடமைகளில் ஈடுபடுவான். இது பிடிக்காமல் “இன்னும் எதற்காக அந்தக் கண்றாவியைக் கட்டிக் கொண்டு அழகின்றீர்கள்? வெளிநாட்டவரின் நாகரீகத்தை பின்பற்றிஇ நடை உடை போன்றவற்றில் மாற்றங்களைக் கொண்டு வந்து வாழ வேண்டும”; என்றும் கூறுவாள்.இதனால் சரண்யா தமிழ் பேசுவதையோ தமிழ்ப் பாடசாலைக்கு செல்வதையோ தேவகி அடியோடு வெறுத்தாள்.

முதல்நாள் இரவு சரண்யா மிகவும் ஆவலோடே “அப்பா வருகின்ற சனிக்கிழமை எங்கள் தமிழ்ப் பாடசாலையின் கலைவிழா நடக்கப் போகின்றது” என அதுபற்றி ஆவலுடன் கூறிக் கொண்டிருக்கும் போதினிலேஇ திடீரென்று புயல் போல் வந்த தேவகி சரண்யாவின் கரங்களைப் பிடித்து இழுத்தவாறு “ஏய் வாயை மூடு உனக்கு எத்தனை தடைவ சொல்வது தமிழில் பேசாதே தமிழைப் பற்றிப் பேசாதே என. தமிழ்ப்பாடசாலையும் தேவையில்லை ஒன்றும் தேவையில்லை” என வீடே அதிரும்படி கத்தினாள்.

அவ்வேளை மிரண்டு போய் அழுது கொண்டிருந்த சரண்யாவிற்கு ஆதரவாகப் பேச நினைத்த கண்ணன் “தேவகி! இப்படிச் செய்யாதே நீ இன்று ஆங்கிலத்தில் கத்தினாலும் நீயும் தமிழ் படித்துத்தானே இருக்கின்றாய்? எதற்காக பிள்ளைக்குத் தமிழ் தெரியக்கூடாது என்று நினைக்கின்றாய்?” என்றபோது “நீங்க நிறுத்துங்கோ உங்களைப்போல் அவளையும் மாற்றாதீங்கோ” என்று கத்திவிட்டு சரண்யா கதறக் கதறக் அறைக்குள் இழுத்துச் சென்றாள்.இப்படிப்பட்ட இரட்டைக் கலாச்சார மோதல்களால் தன் இல்லத்தில் இடம் பெறும் சண்டை சச்சரவை சமாளிக்கவும் முடியாமல் அதனை நிறுத்தவும் முடியாமல் தான் தோல்வியை மெல்ல மெல்ல தழுவிக் கொள்வதை அவனால் உணர்ந்து கொள்ள முடிந்தது. இப்படிப்பட்ட வீட்டுப் பிரச்சினையால் அலுவலகத்திலும் கவனக் குறைவாக பணியாற்றியதையிட்டுஇ மேலதிகாரிகளின் கண்டனத்திற்கும் ஆளாகியிருந்தான் கண்ணன்.

ஒருவாறு வேலையை முடித்தக் கொண்டு தொடர்வண்டியில் வீடு நோக்கிப் புறப்பட்டவன்இ ஜன்னல் அருகில் அமர்ந்து கொண்டு வெளியே கண்களை ஓடவிட்டான். உள்ளுக்குள்ளே குழந்தைகள் அங்கும் இங்கும் சத்தம் போட்டு ஓடித்திரிந்தன . அதனால் கவனம் ஈர்க்கப்பட்டவனாய் அவர்களைத் திரும்பிப் பார்த்தான் .அழகான நான்கு குழந்தைகள். இருவர் இரட்டைப் பிறவிகள் போன்றும் மற்றைய இருவரும் இரட்டையர்களுக்கு முன்னும் பின்னும் பிறந்தவர்கள் போன்றும் இருந்தார்கள். அவர்களது பெற்றோர் ஒருவருடன் ஒருவர் அன்போடு சாய்ந்து அமர்ந்து கொண்டு பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.பார்க்கும் போது நல்லதொரு மகிழ்ச்சியான குடும்பம் போல் தோன்ற மனதிற்குள் இருந்து கூடவே ஏக்கமும் பெரு மூச்சும் வெளிப்பட்டது.

திடீரென அக்குழந்தைகளில் ஒன்று ஓடி வந்து அவனருகில் இருந்து பேசத்தொடங்கியது.அக் குழந்தை கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டு தானும் அக்குழந்தையிடம் பெயர் வயது கல்வி பற்றி விசாரித்த வேளை திடீரென்று அப்பிள்ளை “என் அப்பா அம்மாவிற்கு பேச வராது” எனக்கூறிய அதிர்ச்சியான செய்தியைக் கேட்டு திடுக்குற்றான். அதன்பின்பே அக்குடும்பத்தின் மகிழ்ச்சிக்கான காரணத்தை அவனால் கண்டுகொள்ள முடிந்தத. பழைய பாடலில் சொல்வதுபோல்இ உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது? நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்குத்தான் அது என்ற உண்மையை எதிரே கண்டான்.

ஆண்டவன் கேட்பதற்கு இரண்டு செவிகளையும் பேசுவதற்கு ஒரு நாவையும் கொடுத்துள்ளான். ஆனால் மனிதன் செவிஇரண்டையும் மூடிக்கொண்டு பேசிப்பேசி மற்றவர்களை பழிவாங்குவதே வாழ்க்கை என எண்ணியவனாயஇ; தான் இறங்கும் இடம்வரவே இறங்குவதற்கு ஆயத்தமானான்.

வீட்டுக்கு வந்து குளித்து ஆடைமாற்றிக்கொண்டுஇ தேநீர்க் கோப்பையைக் கையில் எடுத்துக் கொண்டுஇ தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் அமர்ந்தான். அவ்வேளை சண்டைக்கு தயாரானவள் போல் தேவகி அவன் முன்னே வந்துஇ “இதோ பாருங்க! இன்றைக்கே எனக்கு முடிவு தெரிந்தாகணும். என் வாழ்க்கை முறையும் உங்க வாழ்க்கை முறையும் ஒன்றுக்கொன்று முரணானது . எனவே நீங்கள் என் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டு வீட்டில் ரகளையோடு வாழ்வதை விடுத்து எனக்கேற்றவாறு மாறவேண்டும்.பொதுத் தொண்டு போன்றவற்றை தூக்கி எறிந்து விட்டு என்கூட வாழ வேண்டும் அல்லது திருமணவாழ்வில் இருந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டும்” என்றாள்.

இடி விழுந்தது போல் உறைந்து போனான் கண்ணன்.அதன் பின் அவள் என்ன சொன்னாள் எனபது அவனுக்கு கேட்கவில்லை .பிள்ளைக்காக எல்லாவற்றையும் விட்டு விட்டு குடும்பத்தோடு வாழலாமா? என நினைத்தான். மறுகணம் தாயகத்தின் அவல நிலைக்குள் தவித்துக் கொண்டிருந்தஇ பிஞ்சு முகங்கள் நினைவில் வந்தன. இல்லை தாயகத்திற்கான வாழ்க்கை தான் சிறந்தது என நினைத்தான். மறுகணம் தன் பிள்ளை நாளை தேவகியுடன் தனித்து விடப்பட்டு வளரும் போதிலே தமிழைஇ தமிழ் கலாச்சாதத்தைஇ தெரியாத பிள்ளையாக வளர்ந்து விடுமே எனத் தயங்கினான். இந்த மனப் போராட்டங்களுடன் நீண்ட நேரம் உறக்கமில்லாமல் உறங்கிப் போனான். அதிகாலை மனப் பாரம் குறைந்தது போன்று விழித்துக் கொண்டவனுக்கு.
தன் பிள்ளை தன்னிடம் சட்ட முறைப்படி வந்து நிற்கும் நாட்களில் தன்னால் தமிழையும் தமிழ்க்கலாச்சாரத்தையும் ஊட்டி வளர்க்க முடியும் என நினைத்தவனுக்கு ஒரு தெளிவான முடிவு மனதில் தோன்றியது. அதாவது தாயகத்தில் எத்தனையோ விதவைகள் பிள்ளைகளை வளர்த்தெடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுகின்றார்கள்இ ஆகவே அங்குள்ள ஒரு விதவைத் தாய் தன் பிள்ளைகளை வளர்த்தெடுப்பதற்கான சகல செலவினங்களையும் புலம் பெயர் மண்ணிலும் இருந்தவாறே அனுப்பிஇ அக்குடும்பத்தை கரையேற்ற வேண்டும். இன்னொரு பெண்ணுடன் தன்னால் வாழ முடியாதுஇ எனவே தூர இருந்து உதவவேண்டும். என்றைக்கும் மனைவி எனும் ஸ்தானத்தில் இருந்தவள் தேவகி மட்டும்தான் என்ற முடிவுடன் அலுவலகம் செல்வதற்கு ஆயத்தமானான்.

2 comments:

putthan said...

தமிழில் பேசினால் ஆங்கில உச்சரிப்பு சரியாக வராது என்று பிள்ளைகளை தமிழில் பேசுவதை தடை செய்யும் பெற்றோர்களுமுண்டு.

[quote]என்றைக்கும் மனைவி எனும் ஸ்தானத்தில் இருந்தவள் தேவகி மட்டும்தான் என்ற முடிவுடன் அலுவலகம் செல்வதற்கு ஆயத்தமானான்[/quote]
டமிழ் கலாச்சாரம் கண்ணனை தடுக்கிது போல

Karuppy said...

Better than Usha Javahar