மரண அறிவித்தல்

  


திருமதி கமலேஸ்வரி பத்மநாதன்

வீமன்காமம் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை, சிட்னி பென்டில்ஹில்லை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி கமலேஸ்வரி பத்மநாதன் அவர்கள் 1.5.2024 புதன் கிழமை அன்று குடும்பத்தினர் சூழ்ந்திருக்க அமைதியான முறையில் இறை பதம் எய்தினார். இவர் காலம்சென்ற ஆறுமுகம் பத்மநாதனின் அன்பு மனைவியும் சாந்தி,( சிட்னி) யசோதா(சிட்னி), யாமினி(சுவிஸ்) ஆகியோரின் பாசத்திற்குரிய  தாயாரும் கதிர்காமநாதன் (சிட்னி) ஜீவராசா( சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் நாராயண், திவ்யா, மாதங்கி, அய்ஸ்வகி, திவ்யசந்திரா  ஆகியோரின் பிரியமுள்ள பேத்தியுமாவார்.

 அவரின் இறுதிக்கிரியைகள் யாவும் 1,Memorial Avenue,  Rookwood, என்ற இடத்தில் அமைந்துள்ள Rookwood Memorial Garden, South Chapel இல் இந்து முறைப்படி 6.5.24 திங்கள் கிழமை காலை 9.30 மணியில் இருந்து 12.00 மணிவரை நடைபெறும். இதனை உற்றார் உறவினர் நண்பர்கள் யாவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

 மேலதிக விபரங்களுக்கு; 

ஜெ.கதிர்காமநாதன் ( மருமகன்) 0421591681 

யசோதா.பத்மநாதன் ( மகள்) 0403051657


No comments: