லாக் அப் திரை விமர்சனம்

 


தமிழ் சினிமா தற்போது மெல்ல டிஜிட்டல் தளத்திற்கு மாறி வருகிறது, வரும் காலத்தில் இனி தியேட்டர்களுக்கு உச்ச நடிகர்கள் படத்திற்கு மட்டும் போனால் போதும் என்ற நிலை உருவாகிவிடும் போல, அந்த அளவிற்கு OTT ஆதிக்கம் செலுத்தி வருகிறது, அந்த வகையில் தற்போது ஓ டி டியில் வெளிவந்துள்ள லாக் அப் ரசிகர்களை கவர்ந்ததா? பார்ப்போம்.

கதைக்களம்

படத்தின் ஆரம்பத்தில் ஒரு காவல் துறை அதிகாரி கொலை செய்யப்படுகிறார். அதை தொடர்ந்து அந்த கொலை நடந்த சில தூரம் கடந்து ஒரு பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்து கைது வரைக்கும் சென்ற நிலையில், மற்றொரு போலிஸ் இல்லை இந்த இரண்டு சம்பவங்களுக்கும் ஏதோ தொடர்புண்டு.

கண்டிப்பாக இதை கனேக்ட் செய்து பார்க்க வேண்டும் என்று இரண்டு கேஸையும் கையில் எடுக்க அதன் பின் யார் யார் இதற்குள் உள்ளார்கள் என்பதன் விவரம் ஒவ்வொன்றாக வெளிவருவதே இந்த லாக் அப்.

படத்தை பற்றிய அலசல்

வைபவ் சமீபத்திய இளம் நடிகர்களில் நல்ல பொழுதுபோக்கு படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் இதிலும் தன் நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், படம் முழுவதும் ஒரு இருக்கத்ததோடையே இருந்து அதற்கான காரணமும் தெரிய வருவது நன்றாக இருந்தது.

படத்தின் ஒன் மேன் ஷோ என்று வெங்கட் பிரபுவை சொல்லலாம், ஒரு கே.எஸ்.ரவிகுமார், மன்சூர் அலிகான் எல்லாம் போலிஸாக நடித்தால் எப்படியிருக்கும், செம்ம சர்காஸிட்டிக் ஆக இவர் அடிக்கும் அலும்பு அண்ட் கண்டுப்பிடிக்கும் விஷயம் என சபாஷ்.

ஆனால், இப்படி ஒரு மர்டர் மிஸ்ட்ரி படம் என்றாலே அடுத்து என்ன அடுத்து என்ன என்ற ஆர்வம் வரும், அப்படியான ஆர்வம் இந்த படத்தில் பல இடங்களில் வந்தாலும் சில இடங்களில் கொஞ்சம் தொய்வாக தான் உள்ளது.

வாணி போஜனக்கு பெரிய கதாபாத்திரம் ஏதும் இல்லை, வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் தான்.

படத்தின் நீளம் மிக குறைவு என்றாலும் கொஞ்சம் படம் கொஞ்ச அதிக நேரம் ஓடுவது போன்ற உணர்வையும் தவிர்க்க முடியவில்லை.

அரோல் குரோலி பின்னணி இசை சூப்பர். நல்ல ஹெட்செட்டில் கேட்டால் இன்னும் ரசிக்கலாம்.

க்ளாப்ஸ்

வெங்கட் பிரபு ஆக்டிங்.

படத்தின் டுவிஸ்ட். வசனங்கள், அதுவும் நிகழ்காலத்தை ஒப்பிட்டு எழுதியது.

பல்ப்ஸ்

இன்னும் கூட கொஞ்சம் விறுவிறுப்பாக எடுத்திருக்கலாம்.

மொத்தத்தில் இதுவரை டிஜிட்டலில் வந்த தமிழ் படங்களில் லாக் அப் ஒரு படி மேலே நிற்கிறது.

நன்றி CineUlagam

No comments: