தமிழ் சினிமா - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைவிமர்சனம்


சினிமாவில் கதை, இயக்கம் என்பதை தாண்டி சில முகங்களுக்காகவே படம் பார்க்க வேண்டும் என நம்மில் பலருக்கும் தோன்றும் சரிதானே. மற்ற மொழி சினிமா பிரபலங்களுக்கும் நம் தமிழகத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படியாக நடிகர் துல்கர் சல்மானுக்காகவும், இயக்குனர் கௌதம் மேனனுக்காகவும் படத்தை பார்க்கலாம் என சென்றவர்களில் இப்போது எழுத்தாக இங்கு உங்களோடு பேசிக்கொண்டிருக்கும் நானும் ஒருவன். சரி கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்க்க நம் பார்வையை கொஞ்சம் கூர்மையாக்குவோமா...

கதைக்களம்

படத்தின் ஹீரோவாக துல்கர் சல்மான், அவருக்கு நண்பராக விஜே ரக்‌ஷன். இருவருக்கும் ஒருவருக்கொருவரே உற்ற துணை. இவர்களுக்கு குடும்ப பின்னணி எல்லாம் பெரிதாக கிடையாது. ஃபிரிலேன்சராக வேலை செய்யும் இருவரும் ஒரு ஜாலியான, ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கிடையில் துல்கர் ஹீரோயின் ரிது வர்மாவை காண்கிறார். வழக்கமான காதலர் போல பின் தொடரும் இவரும் அவரும் ஃபிரண்ட்ஸ் ஆகிறார்கள். இடையில் ரிதுவின் தோழி நிரஞ்சனி மீது லவ் வருகிறது. இதற்கிடையில் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பதற்காக துல்கர், ரக்‌ஷன் இருவரும் சில திருட்டு வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
இதற்கிடையில் போலிசாக வரும் கௌதம் மேனன் வீட்டில் சிறு விபத்து சம்பவம். இதன் பின்னணி என்ன அவர் ஆராய தொடங்குகிறார். சில புகார்களும் அவருக்கும் தனிப்பட்ட முறையில் வர அவர் மறைமுக விசாரணையை தொடங்குகிறார்.
இந்நிலையில் ரக்‌ஷன், துல்கர், நிரஞ்சனி, ரிது என நால்வரும் கோவா செல்கிறார்கள். திடீரென போலிசார் துல்கர் மற்றும் ரக்‌ஷனை சுற்றி வளைக்கிறார்கள். இந்நிலையில் இருவருக்கும் ஏமாற்றம், பெரும் அதிர்ச்சி. கடைசியில் அவர்கள் நால்வரும் என்ன ஆனார்கள்? அவர்களின் பின்னணி என்ன, கௌதம் தேடி வந்ததன் மர்மம் என்ன என்பதே இந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் கதை.

படத்தை பற்றிய அலசல்

ஹீரோ துல்கருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. தமிழில் ஓ காதல் கண்மணி படத்திற்கு பின் அவரை இப்போது தான் ரசிகர்கள் திரையில் மீண்டும் காண்கிறார்கள். வழக்கம் போல அவருக்கான சாக்லேட் பாய் கேரக்டர் போல தான் இந்த படத்திலும். ஆனால் ஒரு சென்சிட்டிவ் மைண்ட் பிளே.
ரக்‌ஷனை டிவி சானல் நிகழ்ச்சி தொகுப்பாளராக நம் அனைவருக்கும் நன்கு பரிட்சயமானவர். தற்போது இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். ஒரு செகண்ட் ஹீரோ போல தெரிந்தாலும் அங்கங்கு தன் ஸ்டைலில் கவுண்டர் கொடுக்கிறார். இன்னும் நன்றாக ஸ்கோர் பண்ணலாமே ரக்‌ஷன்.
தெலுங்கு ஹீரோயின் ரிது வர்மா விஜபி 2 படத்திற்கு பின் தமிழில் இரண்டாவது படமாக இதன் மூலம் வந்திருக்கிறார். இவரின் பின்னணி என்ன என்பது இரண்டாவது பாதியில் தெரிந்த பின் பலருக்கும் ஒரு ஷாக். கவனம் பெற்றாலும் ஹீரோவுடன் இவருக்கும் பெரிதளவில் ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி இல்லை.
சிகரம் தொடு, காவிய தலைவன், பென்சில், கபாலி என நிரஞ்சனியை ஏற்கனவே பல படங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே. இப்படத்தில் சீரியஸான ரோல். அதிலும் ரக்‌ஷன் செய்யும் குறும்பை இவர் டாமினேட் செய்வது ஸ்கோர் செய்வது என கவர்கிறார்.
கௌதம் மேனன் ஒரு போலிஸ் அதிகாரியாக திரையில் வந்ததுமே பலரின் முகத்தில் புன்னகை பளிச்சிட்டது. சற்று கூடுதலான எதிர்பார்ப்பு. அவருக்கு உண்டான ஸ்டைலில் படத்தின் முக்கிய காட்சிகளை பிரதிபலிக்கும் விதமாக இருக்கும் கிளைமாக்ஸ் சீன்கள் ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் சர்ப்பிரைஸ். சில இடங்களில் இவரின் நடவடிக்கைகள் கண்களை கவர்கின்றன. கேமியோ ரோல்களில் படத்தில் வந்து போகும் அவரை முழுமையாக இப்படத்தில் காண்பது ரசிகர்களுக்கு மனநிறைவு.
இயக்குனர் தேசிங் பெரிய சாமி, தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நவீன முறையில் நூதன திருட்டுகளை அரங்கேற்றும் நன்கு படித்த அதிமேதாவிகளை அம்பலப்படுத்திய முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
இயக்கம், காட்சிகள் பதிவு, இசை என ஹேப்பியான ஒரு ஃபீல். ஆனால் படத்தின் நீளம் சற்று அதிகம். ஓரிரு பாடல்களின் கருத்துக்கள் மனதை ஈர்க்கின்றன.

கிளாப்ஸ்

கௌதம், ரிது, துல்கர், ரக்‌ஷன் ஆகியோர் ஸ்வீட்டான பெர்ஃபாமன்ஸ்...
மனங்களை கவரும் காட்சிகள், லொக்கேசன்...
ரக்சனின் அனிமேசன், துல்கரின் டெக்னாலஜி மைண்ட் கொஞ்டம் இண்ட்ரஸ்டிங்..

பல்ப்ஸ்

படத்தை இன்னும் கொஞ்சம் கிருஸ்ப்பாக கொடுக்கலாமே...
மொத்தத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காண்போரின் கண்களை கவரும் ஒன்று.












No comments: