கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ம் வருடத்திற்கான இயல் விருது என அழைக்கப்படும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை 1989ல் இருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிவரும் கவிஞரும், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான திரு சு. வெங்கடேசன் அவர்களுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள்.
வீடியோஸ்பதி சிறப்புப் பகிர்வாக எழுத்தாளர் சு.வெங்கடேசனின் “வீரயுக நாயகன் வேள்பாரி” என்ற வரலாற்றுப் புதினம் குறித்து, அந்த நாவல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த காலத்தில், வாராவாரம் அந்தந்தப் பகுதிகளைச் சிலாகித்துக் கருத்திட்ட இணைய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் திரு கோ.ராகவன் (ஜி.ரா) விடம் முன் வைத்த பின்வரும் கேள்விகளுக்கான ஒலிக் கருத்தாக இந்தப் பெட்டக நிகழ்ச்சி அமைகின்றது.
வணக்கம் ஜிரா
வீடியோஸ்பதி பகிர்வைக் காண
இந்தப் பெட்டக நிகழ்ச்சியில் தனது ஆழமான வரலாற்றுப் பார்வையைப் பகிர்ந்த அன்பு நண்பர் கோ.ராகவனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
கானா பிரபா
08..01.2020
No comments:
Post a Comment