பொங்கலென்று சொன்னாலே
பூரிப்பும்
கூடவரும்
மங்கலங்கள்
நிறையுமென்று
சங்கடங்கள்
போவதற்கும்
சந்தோசம்
வருவதற்கும்
பொங்கலை
நாம்வரவேற்று
புதுத்தெம்பு
பெற்றிடுவோம் !
தைபிறந்தால்
வழிபிறக்கும்
எனவெண்ணி
மகிழுகிறோம்
கைகட்டி
நின்றுவிடின்
வழியெமக்கு
வந்திடுமா
தைபிறக்க
முன்னாலே
தளர்வின்றி
உழையுங்கள்
தைபிறக்கும்
வேளையிலே
கைகொடுக்கும்
தைமாதம் !
எதிர்காலம்
மகிழ்வாக
அமையுமென
எண்ணிடுவோம்
இறந்தகாலம்
தனையெண்ணி
எமையிழக்கா
திருந்திடுவோம்
நிகழ்கால
நிலையினிலே
நிம்மதியை
நாடிடுவோம்
வரும்பொங்கல்
எங்களுக்கு
வளமாகும்
எனநினைப்போம் !
புத்தரிசி வாங்கிடுவோம்
புதுப்பானை
எடுத்துவைப்போம்
மொத்தமுள்ள
உறவுகளை
முழுமனதாய்
வாழ்த்திடுவோம்
பால்பொங்கி
வருவதுபோல்
வாழ்வுவளம்
பெருகவென
சர்க்கரையை
சேர்த்தபடி
பொங்கியே
மகிழ்ந்திடுவோம் !
பெற்றாரின்
ஆசியினை
பெரும்பேறாய்
எண்ணிடுவோம்
கற்பித்த
ஆசானை
கால்தொட்டு
வணங்கிடுவோம்
புத்தாடை எனுமெண்ணம்
புத்துணர்வை
வழங்கட்டும்
பொங்கலென்றும்
வாழ்வினிலே
புத்தொளியாய்
மிளிரட்டும் !
சாந்தியொடு
சமாதானம்
வரப்பொங்கல்
அமையட்டும்
சன்மார்க்கம்
மனமெல்லாம்
நிறையப்
பொங்கலமையட்டும்
வேண்டியவர்க்கு
வேண்டியன
கிடைக்கப்
பொங்கலமையட்டும்
வீண்வம்பு
வேதனைகள்
விலகப்
பொங்கலமையட்டும் !
ஆனந்தம்
அகநிறைவு
அமைய
பொங்கலமையட்டும்
அறம்நீதி அத்தனையும்
நிலைக்கப்
பொங்கலமையட்டும்
வேற்றுமைகள்
வில்லங்கம்
விலகப்
பொங்கலமையட்டும்
விரோதமனம்
விட்டோட
பொங்கலெமக்
கமையட்டும் !
No comments:
Post a Comment