தீ ஆடிய கோரம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா

      
             கருகியது உடல்கள் கதறியது  உள்ளம்
             பதறியது நாடு சிதறியது வீடு 
             சுட்டெரிக்கும் வெப்பம் தாக்கியது எங்கும்
             சுடர்விட்டு தீயும் ஆடியது கோரம்  !

             கங்காரு நாடு கருகியது தீயால்
             கணக்கில்லா விலங்கு அக்கினிக்கு விருந்து 
             கண்முன்னே யாவும் கரிமேடாய் போச்சு
             கலக்கமுடன் மக்கள் வெறுமையுடன் நின்றார்    !

             உயிர் பறிக்கும் தீயை உளவுறதியுடனே
             எதிர் கொண்டவீரர் இதயம் உறைகின்றார் 
             அர்ப்பணிப்பு என்னும் அளப்பரிய பண்பை 
             அவுஸ்திரேலிய நாட்டில் அவர்களிடம் கண்டோம்  ! 


             உதவிவிடும் கரங்கள் ஓய்ந்து விடவில்லை
             உளமார உருகி ஓடியோடிக் கொடுத்தார் 
             தளர்வின்றி அரசும் தாராளம் கொண்டு
             நிலையுணர்ந்து கரத்தை நீட்டியதே நன்கு  !












No comments: