இலங்கைச் செய்திகள்

யாழ். குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு; தேடுதல்

STF கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது


யாழ். குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு; தேடுதல்





யாழ். குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு; தேடுதல்-Forces Search Operation-Gurunagar-Jaffna
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்றைய தினம் (12) தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு; தேடுதல்-Forces Search Operation-Gurunagar-Jaffna
அதிகாலை 5.30 மணி தொடக்கம் காலை 6.00 மணி வரை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து இந்த சோதனை நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நடவடிக்கையின் போது எவரும் கைது செய்யப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை நேற்றைய தினம் (11) சனிக்கிழமை தெல்லிப்பளை பகுதியிலும் இராணுவத்தினரும் பொலிஸார் சேர்ந்து சுற்றிவளைப்பு தேடுதல்களை முன்னெடுத்திருந்தனர். அதிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எவையும் மீட்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(யாழ்.விசேட நிருபர் - மயூரப்பிரியன்) நன்றி தினகரன் 












STF கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது



STF கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது-4 Arrested for Disturbing STF's Duty
பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் (STF) கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உகண, லாதுகல வனப்ப பகுதியில் வெட்டப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட மரங்களை STF குழுவினர் மீட்டு, உழவு இயந்திரமொன்றில் கொண்டு வந்துள்ளனர்.
இதன்போது, குறித்த உழவு இயந்திரம் மற்றும் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியை மறித்த, மற்றொரு முச்சக்கர வண்டியில் வந்த ஒரு சிலர், அவர்களை தாக்கியதாக உகண பொலிஸில் முறைப்பாட்டு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (11) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது, அதிகாரி ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், முச்சக்கர வண்டியும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்றையதினம் (12) அம்பாறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.   நன்றி தேன்காரன் 









No comments: