பசில், நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 23 பேருக்கு எதிராக எப்.சி.ஐ.டி.யினால் 12 வழக்குகள் தாக்கல்
ஷிராந்தி ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்
15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டு நான்கு இலங்கைத் தமிழர்கள் விடுதலை
மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்
கறுப்புப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீங்கியது
நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸில் சரண்
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம்
பசில், நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 23 பேருக்கு எதிராக எப்.சி.ஐ.டி.யினால் 12 வழக்குகள் தாக்கல்
28/07/2017 பசில் ராஜபக் ஷ, நாமல் ராஜபக் ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 23
பேருக்கு எதிராக நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின்
விசாரணைகளின் பின்னர் மேல் நீதிமன்றங்களில் 12 வழக்குகள் தாக்கல்
செய்யப்பட்டுள்ளன.

அரச தகவல் திணைக்களத்தில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின்
நடவடிக்கைகளை தெளிவுபடுத்தும் விஷேட செய்தியாளர் சந்திப்பின்
போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நிதிக் குற்றங்கள் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளில்
அக்குற்றங்கள் வெளிநாடுகள் ஊடாகவும் இடம்பெற்றுள்ளமை தொடர்பில்
சான்றுகள் உள்ளதால் 25 நாடுகளுடன் அந்தியோன்ய அடிப்படையில்
தகவல்களைப் பெற்று விசாரணைகள் நடாத்தப்ப்ட்டு வருவதாகவும் அவர்
சுட்டிக்காட்டினார். இந் நிலையில் இதுவரை நிதிக் குற்றப் புலனயவுப்
பிரிவினரால் 56 சந்தேக நபர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளதாகவும் 10
பேர் நீதிமன்றங்களில் சரணடைந்துள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்தார்.
நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவினர் இதுவரை செய்துள்ள
விசாரணைகள் காரணமாக 237.5 மில்லியன் ரூபா சொத்துக்கள் அரச
உடமையககப்ப்ட்டுள்ளதுடன் மேலும் 400 மில்லியன் சொத்துக்கள் அரச
உடமையாக்கப்படும் செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸ்
அத்தியட்சர் ருவன் குனசேகர தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
' நிதிக் குற்றப் புலனயவுப் பிரிவு கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 21
ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்ப்ட்ட தீர்மானத்துக்கு அமைய 2015
பெப்ரவரி மாதம் 13 ஆம் திகதி பொலிஸ் மா அதிபரின் கீழ்
ஸ்தாபிக்கப்ப்ட்டது. பொலிஸ் மா அதிபரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த
விசாரணைப் பிரிவின் பிரதானியக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக்
ஔள்ள நிலையில் அங்கு 120 அதிகாரிகள் உள்ளனர். வர்களில் பட்டப் பின்
படிப்பை நிறைவுச் எய்தோர், பட்டதாரிகளும் உள்ளனர். இவர்களுக்கு
விஷேட பயிற்சிகள் அளிக்கப்ப்ட்டே கடமையில்
ஈடுபடுத்தப்ப்ட்டுள்ளனர்.
இந் நிலையில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு ஆரம்பிக்கப்ப்ட்டு
இதுவரை 335 முறைப்பாடுகள் அவர்களுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
அவற்றில் 89 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவுச்
செய்யப்ப்ட்டு கோவைகள் சட்ட மா அதிபரின் ஆலோசனைகளுக்காக
அனுப்பட்டுள்ளன.
அத்துடன் 12 வழக்குகள் சந்தேக நபர்களுக்கு எதிராக தககல்ச்
எய்யப்ப்ட்டுள்ளன. மேலும் 115 முறைப்பாடுகள் வேறு
நிருவன்னக்களுக்கு விசாரணைகளுக்கு அனுப்பட்டுள்ளதுடன் சில
குற்றம் ஒன்ரு வெளிப்படாததன் காரணமாக மூடப்பட்டுள்ளன.
மேலும் 131 முறைப்பாடுகள் மீதான விசாரணைகள் தற் சமயம் நிலுவையில் விசாரணையில் உள்ளது.
தாக்கல்ச் செய்யப்ப்ட்டுள்ள வழக்குகள் விபரம்:
விசாரணை முடிவடைந்து தககல் மேல் நீதிமன்றில் தககல்ச் எய்யப்ப்ட்டுள்ள வழக்குகள் பட்டியலை எம்மால் வெளிபப்டுத்த முடியும்.
திவி நெகும திணைக்களத்துக்கு சொந்தமான 36 மில்லியன் ரூபாவை மோசடி
செதமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, திவி நெகும முன்னாள்
பணிப்பாளர் அமித் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல்
நீதிமன்றில் வழக்கு தாக்கல்ச் செய்யப்ப்ட்டுள்ளது. ச,தொ.ச.
நிருவனத்தில் இடம்பெற்ற 38 இலட்சம் ரூப மோசடி தொடர்பில் முன்னாள்
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, முன்னாள் ச.தொ.ச. பனிப்பாளர்களில்
ஒருவரான தாஜா மொஹிதீன் ஷாகிர், ச.தொ.ச. முன்னாள் தலைவர் நலின் ருவன் ஜீவ
ஆகியோருக்கு எதிராக குருணாகல் மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
பிணையங்கள் மற்றும் பங்குப் பரிவர்த்தனை ஆணைக் கூழ்வின் 50 இலட்சம்
ரூபாவை இளைஞர்களுக்கான நாளை அமைப்புக்கு மோசடியாக கொடுத்தமை
தொடர்பில் அந்த ஆணைக் குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் தம்மிக மஞிர
பெரேரா, நாலக ஹர்ஷ ஜீவ கொடஹேவா, மொஹம்மட் நவ்பர் இபராஹீம்,
ஆகியோருக்கு எதிராக வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல்
செய்யப்ப்ட்டுள்ளது.
பீபல்ஸ் லீசிங் நிறுவனத்துக்கு சொந்தமான 388 மில்லியன் ரூஇபாவை
மோசடியாக பயன்படுத்தியமை தொடர்பில் செனின் ட்ரஸ்ட் த்கனியார்
நிறுவனத்தின் பணிப்பாளரான கிங்ஸ்லி சந்தன குனவர்தன, பிரதி
முகாமையாளர் சஞ்ஜீவ பண்டார நாயக்க, பணிப்பாளர் வென்னப்புலி
ஆரச்சிகே சுசந்த, பணிப்பாளர் வெள்ளவத்த ஆரச்சிகே துமித்த சத்துரங்க
சில்வா ஆகியோருக்கு எதிராக வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ரில்
தாக்கல்ச் செய்யப்ப்ட்டுள்ளது.
இதே நான்கு நன்கு நபர்களுக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில்
202 மில்லியன் ரூபா, 50 இலட்சம் ரூபா ஆகியவற்றை மோசடியாக
பயன்படுத்தியமை தொடர்பிலும் இரு வேறு வழக்குகள் நிதிக் குர்ரப்
புலனயவுப் பிரிவினரால் தககல்ச் செய்யப்ப்ட்டுள்ளன.
இதனைவிட தொலைதொடர்புகள் ஆணைக் கூழ்வின் 600 மில்லியன் ரூபாவை
மோசடியாக பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் ஜனடஹிபதி செயலர்
லலித் வீரதுங்க, முன்னாள் தொலைதொடர்பு ஆணைக் குழு பணிப்பாளர் அனுஷ
பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராகவும் கொழும்பு மேல் நீதிமன்ரில் வழக்கு
தாக்கல்ச் எய்யப்ப்ட்டுள்ளது.
64 மில்லியன் ரூபாவை இலஞ்சமாக கோரி அதில் 15 மில்லியன் ரூபாவை
பெற்றுக்கொண்டு எஞ்சிய தொகையை பெற அச்சுருத்தியமை தொடர்பில்
முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மொரின்
ஸ்டெலா ரணதுங்க, நரேஜ் குமார் பாரிக் ஆகியோருக்கு எதிராக கொழும்பு
மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்ப்ட்டுள்ளது.
மள்வானையில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் உழைத்த வழி
முறையை வெளிப்படுத்த முடியாது சேர்க்கப்பட்ட 200.03 மில்லியன் ரூபா
பெறுமதியான 16 ஏக்கர் காணி மற்றும் மாளைகை தொடர்பில் அவருக்கு எதிராக
கம்பஹா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல்ச் செய்யப்ப்ட்டுள்ளன.
கவர்ஸ் கோபரேட் செர்விசஸ் நிறுவனம் ஊடாக 30 மில்லியன் ரூபாவை
சுத்திகரித்தமை தொடர்பில் பாராளௌமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ,
இந்திக பிரபாத் கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா,
நித்திய செனானி சமரநாயக்க அகையோருக்கு எதிராக கொழும்பு மேல்
நீதிமன்றில் வழக்கு தாக்கல்ச் எய்யப்ப்ட்டுள்ளது.
இதனைவிட திவி நெகும இசுருமத் வீடமைப்பு திட்டம் தொடர்பில்
அனுமதியில்லாமல் 2.99 பில்லியன் ரூபாவை மோசடியாக
பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, திவி
நெகும முன்னாள் பணிப்பாளர் ஆர்.கே.கே. ரணவக்க, பொருளாதார அமைச்சின்
முன்னாள் செயலர் நிஹால் ஜயதிலக அகையோருக்கு எதிராக கொழும்பு மேல்
நீதிமன்றில் வழக்கு தாக்கல்ச் செய்யப்ப்ட்டுள்ளது.
அத்துஇடன் 2015 ஆம் ஆண்டு கலண்டர் அச்சிட 20,400,000 ரூபாவை
பெற்றுக்கொன்டு தேர்தல்கள் சட்டத்தை மீறியமை தொடர்பில் திவி நெகும
பணிப்பாளர் ஆர்.கே.கே. ரணவக்க, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ
ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல்ச் எய்யப்ப்ட்டுள்ளது.
இதனைவிட தொலை தொடர்பு வசதி கொண்ட 80 மில்லியன் ரூபா பெறுமதி கொன்ட
வாகனம் ஒன்ரு யோசித்த உள்ளிடோரிடம் இருந்து அரச
உடமையககப்ப்ட்டுள்ளது. அத்துடன் அந்த குழுவிடமிருந்தே 157.5
மில்லியன் ரூபா பணம் அரசுடமையககப்ப்ட்டு திறை சேரியில்
வரவிடப்ப்ட்டுள்ளது.
இதனைவிட 50 மில்லியன் ரூபா பெறுமதியான காணி, 150 மில்லியன்
பெறுமடியான காணி ஆகியவற்றையும் 200 மில்லியன் ரூபா பெறுமதியான
மள்வானை மாளிகையையும் அரச உடமையாக்க முயற்சிகள் இடம்பெற்று
வருகின்றன.
இந்த விசாரணைகளில் பல கறுப்புப் பண சுத்திகரிப்பு
நடவடிக்கைகள் வெளிநாடுகள் ஊடாக முன்னெடுக்கப்ப்ட்டுள்ளதால் அந்
நாடுகளின் ஒத்துழிப்புடன் விசாரணைகள் இடம்பெறுகின்ரன. அவ்வாறு 25
நாடுகளுடன் நாம் அந்தியோன்ய தொடர்புகள் மூலம் தகவல்களைப் பெற்ரு விசாரணைச்
எய்கின்றோம். இது தொடர்பில் அந் நாடுகளிடம் 86 கோரிக்கைகளை நாம்
முன்வைத்துள்ள நிலையில் அவற்ரில் 36 கோரிக்கைகள் தொடர்பில் தகவல்கள்
கிடைத்த வண்ணம் உள்ளன.
அதன்படி ஐக்கிய இராச்சியத்தில் இருந்து இரு சம்பவங்கள் தொடர்பிலும்,
சிங்க்ஜப் பூர் ஊடாக 13 கோரிக்கைகள் தொடர்பிலும் இந்தியாவில் இருந்து 13
கோரிக்கைகள் தொடர்பிலும் அமெரிக்கவைடம் இருந்து 8 கோரிக்கைகள் தொடர்பிலும்
எமக்கு தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
இந்த விசாரணைகள் அனைத்தும் மிக நுணுக்கமாக
முன்னெடுக்கப்ப்ட்டுவருகின்றன. எனவே அதன் பிரதி பலன்களையும் விரைவில்
தெரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என்றார். நன்றி வீரகேசரி
ஷிராந்தி ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்
28/07/2017 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

இன்று காலை 9 மணிக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பிரசன்னமாகும் படி ஷிராந்தி ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.
“சிரிலிய சவிய” விற்கு செஞ்சிலுவை சங்கத்தால் வழங்கப்பட்டிருந்த ஜீப் ரக வாகனத்தை யோஷித ராஜபக்ஷவினது சொந்தப் பாவனைக்கு கையளித்தமை தொடர்பாக விசாரணை செய்வதற்காகவே குற்றப்புலனாய்வு துறையில் அவரை ஆஜராகுமாறு அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு : 99 ஆண்டுகால குத்தகைக்கு சீனாவுக்கு உரிமையானது
29/07/2017 அம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை
அடுத்த 99 ஆண்டுகளுக்கு சீன நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கும்
இருநாட்டு துறைமுக ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டது.

அடுத்த 99 ஆண்டுகளுக்கான குத்தகையை சீன நிறுவனமான சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனம் பெற்றுக்கொள்கின்றது.
இன்று காலை 10. 43 மணிக்கு இலங்கையின் துறைமுக அதிகார சபையின் தலைவர்
பராக்கிரம திசாநாயக மற்றும் சைனா மெர்ச்சன்ட் துறைமுக நிறுவனத்தின் உப
தலைவர் ஹு ஜியான்ஹு ஆகியோர் துறைமுக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
தென் இலங்கையின் பிரதானமான துறைமுகமான ஹம்பாந்தோட்டை மாகம்புர
துறைமுகம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 2011 ஆண்டில் இருந்து அதன்
நிர்மாணப்பணிகள் முன்னெடுக்க சீன அரசாங்கத்திடம் 193 பில்லியன் அமெரிக்க
டொலர் கடன் இலங்கை அரசாங்கத்தினால் பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடன் நெருக்கடிகள் காரணமாக ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99
ஆண்டுகால குத்தகைக்கு விடுவதற்கான தீர்மானிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இதில்
85 வீத பங்கு உரிமை சீனாவுக்கும் 15 வீதம் இலங்கைக்கும் என்ற உடன்படிக்கை
முன்னைய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போதுள்ள புதிய
உடன்படிக்கையின் பிரகாரம் 70 வீத இலாபம் சீனாவிற்கும் 30 வீத இலாபம்
இலங்கைக்கும் என உடன்படிக்கை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம்
தெரிவிக்கின்றது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 15 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இவ்வாறு சீன
நிறுவனத்திடம் குத்தகைக்கு விடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
கனடாவில் ஆட்கடத்தல் குற்றச்சாட்டு நான்கு இலங்கைத் தமிழர்கள் விடுதலை
29/07/2017 இலங்கை அகதிகளை கனடாவிற்கு கடத்தி வந்ததாக
தெரிவித்து குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த நான்கு தமிழர்களை
அந்த வழக்கிலிருந்து அந்நாட்டு உயர் நீதிமன்றம் விடுதலை
செய்துள்ளது.

பிரான்சிஸ் அந்தோனிமுத்து அப்புலோனப்பு, கமல்ராஜ் கந்தசாமி,
ஜெயச்சந்திரன் கனகராஜ், விக்னராஜா தேவராஜ் ஆகிய நால்வரே இவ்வாறு
ஆட்கடத்தல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து வழக்கு விசாரணை நேற்று கனேடிய உயர் நீதிமன்றில் இடம்பெற்றது.
இதன் போது கனடாவில் அடைக்கலம் தேடும் அகதிகளை இலாப நோக்கில்
கடத்துவதற்கு இவர்கள் பொறுப்பாக இருந்தனர் என அரசதரப்பு
சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.
எனினும், சந்தேகநபர்கள் மீதான குற்றச்சாட்டு
நிரூபிக்கப்படவில்லை என தெரிவித்த நீதிபதி ஆர்னே சில்வர்மன்,
அவர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளார்.
இதேவேளை, 2009ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஓசன் லேடி கப்பல் 79
தமிழர்களுடன் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கரையை அடைந்தமை குறிப்
பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
மெய்ப்பாதுகாவலரின் பிள்ளைகளை தத்தெடுத்தார் நீதிபதி இளஞ்செழியன்
26/07/2017 யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த தனது மெய்ப்பாதுகாவலரான சரத் ஹேமச்சந்திரவின் இரு பிள்ளைகளையும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தத்தெடுத்துக் கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

தனது மெய்ப்பாதுகாவலராக 15 வருட காலமாக பணியாற்றிய உப பொலிஸ் பரிசோதகரின் இறுதிக் கிரியை இன்று புதன்கிழமை அவரது சொந்த ஊரான சிலாபத்தில் இடம்பெற்றது.
குறித்த இறுதிக் கிரியையில் கலந்துகொண்டுவிட்டு கருத்து வெளியிடுகையிலேயே யாழ்மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது உயிரைக் காப்பாற்றுவதற்காக தன்னுயிரை நீத்த எனது மெய்ப்பாதுகாவலருக்கு செய்யும் கடமையாக நான் இதனை கருதுகிறேன்.
அந்த வகையில், குறித்த இரு பிள்ளைகளையும் தனது சொந்த பிள்ளைகளைப் போல பராமரித்து, அன்பு செலுத்தி, கல்வியை போதித்து, தான் இறக்கும்வரை அவர்களது எதிர்காலத்திற்கு தேவையான சகல விடயங்களையும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து செய்வேன் என இதன் நீதிபதி இளஞ்செழியன் மேலும் தெரிவித்தார். நன்றி வீரகேசரி
கறுப்புப் பட்டியலில் இருந்து விடுதலைப் புலிகள் அமைப்பு நீங்கியது
26/07/2017 ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத கறுப்பு பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நீக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் இந்த உத்தரவை, இன்று பிறப்பித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, பலஸ்தீனிய இஸ்லாமிய அமைப்பான ஹமாஸ் இயக்கம், தொடர்ந்தும்
தடைப்பட்டியலில் நீடிக்கின்றது. 2009ஆம் ஆண்டு இலங்கையில் விடுதலை புலிகள்
அமைப்பு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அந்த அமைப்பு தொடர்பில் எந்தவித
பயங்கரவாத நடவடிக்கைகளும் பதிவாகாத நிலையில், இந்த தீர்மானத்தை
எடுத்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய கறுப்பு பட்டியலில் 13 பயங்கரவாதிகள் மற்றும் 22 பயங்கரவாத அமைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகள், கறுப்பு பட்டியல், பயங்கரவாத அமைப்பு நன்றி வீரகேசரி
நீதிபதி இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸில் சரண்
25/07/2017 யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கித் தாக்குதல் மேற்கொண்ட பிரதான சந்தேகநபர் இன்று காலை யாழ்.பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் மேல்நீதிமன்ற நீதிபதி மா . இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் இன்று காலை யாழ். பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக மேலும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இவ்வாறு சரணடைந்த நபர் புனர்வாழ்வு பெறாத முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் எனவும் 39 வயதான சிவராசா ஜெயந்தன் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் 1994ஆம் ஆண்டு 16 ஆவது வயதில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்துக்கொண்ட நிலையில் 2012 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலை சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. நன்றி வீரகேசரி
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி போராட்டம்
27/07/2017 கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நீதிபதிக்கு ஆதரவு கோரி இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்தியவாறு அமைதி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த மக்கள்,
மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தமிழ் மகன் ஒருவரை ஏவி விட்டு மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டிருந்தனர். மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் நீதியான முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருந்தனர்.
இதேவேளை, குறித்த போராட்டத்தில் பங்கு கொண்ட அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான அமைப்பின் தலைவர் வண.பிதா சக்திவேல் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் நீண்ட காலமாக இருப்பதற்கு எமது தமிழ் அரசியல் தலைமைகளே காரணம் என குறிப்பிட்டிருந்தார்.
ஐரோப்பிய ஒன்றியம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியமை தொடர்பில் அரசு எவ்வாறான நிலையில் இருக்கும்.? குறித்த தடை நீக்கம் மூலம் தமிழ் மக்களிற்கு அரசியல் தலைமைகளால் சாதிக்க முடியுமா.? என கேள்விகள் எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், இலங்கை அரசு குறித்த விடயத்தில் திருப்தியடையாத போதிலும், விடுதலைப்புலிகளின் தடை நீக்கமானது தமிழ் மக்களின் அரசியல் உரிமையை ஏற்றுக்கொண்டுள்ளமையை உணர்த்துவதாக குறிப்பிட்டிருந்தார். நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment