.
அறிவுநிறை தமிழ் கொழுந்தே
ஆண்டாண்டு வாழியவே
நிறைவுடைய வாழ்வு பெற்று
நீண்டநாள் வாழியவே !
கனிவுநிறை உள்ளம் கொண்டு
காலமெல்லாம் வாழியவே
கற்கண்டே கனி அமுதே
களிப்புடனே வாழியவே !
இனிமைநிறை வாழ்வு பெற்று
ஏற்றமுடன் வாழியவே
பருவமெலாம் வளம் பெற்று
பாங்குடனே வாழியவே !
பிறந்தநாள் கொண்டாடும் வேளை இப்படி வாழ்த்தினால் இனிக்குமல்லவா
ஹப்பி பேர்த்டே என்றுபாடும்
கால மதை மாற்றுவோம்
கன்னித் தமிழில் பாட்டுப்பாடி
கலகலப்பை ஊட்டு வோம்
அம்மா பாலில் எமக்குதந்த
அன்னைத் தமிழைப் பாடுவோம்
அன்னியத்தை அணைத்து நிற்கும்
அவலம் அதைப் போக்குவோம் !
கேக்கை வெட்டி விளக்கணைக்கும்
கால மதை மாற்றுவோம்
கன்னித் தமிழில் பாட்டுப்பாடி
கலகலப்பை ஊட்டு வோம்
அம்மா பாலில் எமக்குதந்த
அன்னைத் தமிழைப் பாடுவோம்
அன்னியத்தை அணைத்து நிற்கும்
அவலம் அதைப் போக்குவோம் !
கேக்கை வெட்டி விளக்கணைக்கும்
கேளிக்கையை விரட்டு வோம்
நாக்கில் இனிமை சொட்டசொட்ட
நல்ல தமிழைப் பாடுவோம்
வீட்டில் உள்ள பெரியவரை
வீழ்ந்து வணங்கி நின்றுமே
வாழ்த்து வாங்கி ஆசிபெற்று
வளமாய் தமிழில் பாடுவோம் !
அப்பா அம்மா அருகணைத்து
அக மகிழ்ந்து பாடுவோம்
அக்கா அண்ணா தம்பியோடு
அழகு தமிழில் பேசுவோம்
பக்குவமாய் இனிப்பு வழங்கி
பலரும் மகிழப் பாடியே
செப்பமாகப் பிறந்த நாளை
சிறப்பாய் செய்து மகிழுவோம் !
ஆங்கிலத்தில் பாடும் பாட்டை
அகத்தை விட்டு அகற்றுவோம்
அன்னைத் தமிழில் வாழ்த்துப்பாடி
அகம் மகிழச் செய்குவோம்
இனிய பிறந்த நாளையென்றும்
எங்கள் தமிழால் வாழ்த்துவோம்
எங்கள் தமிழின் இனிமையெங்கும்
பொங்க வாழ்த்துக் கூறுவோம் !
வளங்கொழிக்க வானுயர வாழ்கவென்று வாழ்த்துவோம்
உளம்மகிழ உணர்வுகொண்டு உயர்கவென்று வாழ்த்துவோம்
கருணைகொண்டு கடவுளெம்மைக் காக்கவேண்டி வாழ்த்துவோம்
கன்னித்தமிழ் கொண்டுநின்று பிறந்தநாளை வாழ்த்துவோம் !
தமிழால் வாழ்த்துவோம் !
( எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண் .. அவுஸ்திரேலியா )
அறிவுநிறை தமிழ் கொழுந்தே
ஆண்டாண்டு வாழியவே
நிறைவுடைய வாழ்வு பெற்று
நீண்டநாள் வாழியவே !
கனிவுநிறை உள்ளம் கொண்டு
காலமெல்லாம் வாழியவே
கற்கண்டே கனி அமுதே
களிப்புடனே வாழியவே !
இனிமைநிறை வாழ்வு பெற்று
ஏற்றமுடன் வாழியவே
பருவமெலாம் வளம் பெற்று
பாங்குடனே வாழியவே !
முத்தமிழே முழு நிலவே
சொத்தேநீ வாழியவே
அர்த்தமுள்ள வாழ்வு வாழ
அகமார வாழ்த்துகிறோம் !
வசந்தம்நிறை வாழ்வு பெற்று
வையகத்தில் வாழியவே
வாழ்வெல்லாம் மகிழ்வு கொண்டு
வாழ்ந்திடுக பல்லாண்டு !
வையகத்தில் வாழியவே
வாழ்வெல்லாம் மகிழ்வு கொண்டு
வாழ்ந்திடுக பல்லாண்டு !
வாழ்த்திப் பாருங்கள்
வண்ணமாயிருக்கும்
No comments:
Post a Comment