வாட்ஸ் அப் கலாட்டா‏ - ரத்னம்டா... மணிரத்னம்டா'..

.
'ரத்னம்டா... மணிரத்னம்டா'... இது வாட்ஸ் அப் கலாட்டா தாலி கட்டாமல் வாழும் லிவிங் டுகெதர் கல்ச்சர் பற்றி ’ஓ காதல் கண்மணி’ படத்தில் அலசியிருக்கிறார் இயக்குனர் மணிரத்னம். இப்போது, தாலி தொடர்பான சர்ச்சைகள் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது, மணிரத்னம் எடுத்துள்ள படம் விவாத பொருளாக மாறியிருக்கிறது.

மணிரத்னம் தாலியை பற்றி இப்போது அவர் சொல்லவில்லை. காலம் காலமாக சொல்லி வருகிறார் என்று மணிரத்னம் குறித்து வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைகளில் மெஸேஜ் ஒன்று ஷேர் ஆகி வருகிறது. அதில் மணிரத்னத்தின் அத்தனை படங்களையும் சேர்த்து ஒரே வரியில் கூறியுள்ளனர். 


தாலி கட்டிட்டு அவரவர் வீட்டுல வாழ்ந்தால் - அலைபாயுதே

தாலி கட்டியும் வாழாமல் இருந்தால் - மௌன ராகம்

இன்னொருவன் தாலி கட்டிய பெண்ணை கடத்தி கொண்டு போனால் - ராவணன்

தாலி கட்டலாமா வேண்டாமா என சிந்தித்தால் - கடல்

ஸ்கூல் பொண்ணுக்கு தாலி கட்டினால் - நாயகன்

ஒரு மனைவிக்கு தாலி கட்டிவிட்டு இரு மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தால் - அக்னி நட்சத்திரம் 

ஒரு பொண்ணுக்கு இரண்டு பேர் தாலி கட்ட நினைத்தால் - திருடா திருடா 

தாலி கட்டாம அடுத்தவன் வீட்டில் வாழ்ந்தால் - ஓகே கண்மணி 

தாலியே கட்டாமல் சேர்ந்து வாழ்ந்தால் ...ஒ.கே. கண்மணி ...

தாலிக்கட்டாமல் நோயினால் இறந்தால் - கீதாஞ்சலி

முஸ்லீம் பொண்ணுக்கு தாலி கட்டினால் - பம்பாய்.

தாலிகட்டாமல் தீவிரவாதியை கட்டிக் கொண்டு செத்தால் - உயிரே

வியாபாரத்திற்க்காக தாலி கட்டினால் - குரு

ரமணாவ கொன்னுட்டு அவன் மனைவிக்கு தாலி கட்டினால் - தளபதி

தாலி கட்டாமல் பிள்ளை பெற்றால் - தளபதி 

குழந்தையை தத்தெடுத்துகறதற்கு தாலி கட்டுனா அது கன்னத்தில் முத்தமிட்டால்..!

தாலி கட்டிய புருஷனுக்காக போராடினால் - ரோஜா

ரத்னம் ‘டா’ ... ’மணிரத்னம்’ டா 

இப்படி ஒரு ஃபார்வர்டு மெஸேஜ் பரவி வருகிறது வாட்ஸ் அப்பில். இப்படியும் ஒரு ட்ரெண்டா பாஸ்.

-

No comments: