இலங்கைச் செய்திகள்


பசில் ராஜபக்ஸ கைது

ஜோதிடரை நம்பி ஜனாதிபதி தேர்தலை நடத்தியமைக்காக கவலையடைகின்றேன்

கோத்தபாய வெளியேறினார் : அரை மணித்தியாலம் விசாரணை

 பஷிலை பார்க்கச்சென்றார் கோத்தா

 பாராளுமன்றில் பகலிரவு ஆர்ப்பாட்டம்: மஹிந்த ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ராஜித

சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்த பஷில் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

பசில் ராஜபக்ஸ கைது

22/04/2015   முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஸ பொலிஸ்  நிதிமோசடி குற்ற விசாரணைப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.









 கடுவெல நீதவான் முன்னிலையில் அவரை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பசில் ராஜபக்ஸவின் சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா தெரிவித்தார். 
முன்னாள் அமைச்சருடன் முன்னாள் பொரு­ளா­தார அமைச்சின் செய­லாளர் டாக்டர் நிஹால் ஜய­தி­லக மற்றும் திவிநெகும திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் கே.ஆர்.கே.ரண­வக்க ஆகியோர் கைதுசெய்­யப்­பட்டு எதிர்­வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.



கொள்­ளுப்­பிட்­டியில் உள்ள நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு  அழைக்­கப்­பட்ட முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ உள்­ளிட்ட மூவரும் அங்கு சுமார் 7 மணி நேரம் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­பின்னர் கைதுசெய்­யப்­பட்டு கடு­வலை பிர­தான நீதிவான் தம்­மிக ஹேம­பால முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டதை அடுத்து அவர்­களை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.
திவிநெகும (வாழ்வின் எழுச்சி) திட்டம் ஊடாக மிக சூட்­சு­ம­மான முறையில் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள பாரிய நிதி மோச­டிகள் தொடர்பில் முன்னாள் பொரு­ளா­தார அபி­விருத்தி அமைச்சர் பஷில் ராஜ­ப­க் ஷ­வுக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.
இது தொடர்பில் திவிநெகும திட்­டத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஆர்.ஆர்.கே.ரண­வக்­க­விடம் ஏற்­க­னவே பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கா­ரவின் தலை­மை­யி­லான நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் அப்­போ­தைய பொரு­ளா­தார அமைச்சர் பஷில் ராஜ­ப­க்ஷவின் உத்­த­ர­வுக்கு அமை­யவே அத்­தி­ணைக்­க­ளத்தின் அனைத்து நட­வ­டிக்­கை­களும் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­தது.
அதன்­படி பஷில் ராஜ­பக்ஷ வெளி நாடொன்றில் இருந்த நிலையில் அவரை நாட்­டுக்கு அழைத்து வர நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டது. நீதி­மன்றம் ஊடா­கவும் இது­தொ­டர்பில் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டது. இந் நிலையில் நேற்று நாடு திரும்­பிய முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ இன்று நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வாக்கு மூலம் அளிக்கச் சென்றார்.
இந் நிலையில் அவ­ருக்கு மேல­தி­க­மாக அவர் அமைச்­ச­ராக இருந்­த­போது அவ­ரது செய­லா­ள­ராக இருந்த டாக்டர் நிஹால் ஜய­தி­ல­கவும் விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டி­ருந்­த­துடன் ஏற்­க­னவே விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த திவி நெகும திட்­டத்தின் பணிப்­பா­ள­ரக இருந்த ஆர்.கே.கே.ரண­வக்­கவும் அழைக்­கப்­பட்­டி­ருந்தார்.
இந் நிலையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி வைத்­தி­ய­லங்­கா­ரவின் கீழ் இடம்­பெற்ற இந்த விசா­ர­ணை­களில் முதலில் முன்னாள் செய­லாளர் நிஹால் ஜய­தி­லக, முன்னாள் பணிப்­பாளர் கே.கே.ரண­வக்க ஆகி­யோரை நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு கைது செய்­தது. பின்னர் தொடர்ந்த விசா­ர­ணை­களில் 7 மணி நேரத்தின் பின்னர் முன்னாள் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜப்க்ஷ கைது செய்­யப்­பட்டார்.
விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவு அமைந்­துள்ள கொள்­ளுப்­பிட்டி, கார்வில் பிர­தே­சத்தில் பொலிஸ் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்டு பொலிஸ் கல­கத்­த­டுப்புப் பிரி­வி­னரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.
இந் நிலையில் மாலை 6 மணி­ய­ளவில் கைது செய்­யப்­பட்ட முன்னாள் அமைச்சர் பஷில் ராஜ­பக்ஷ, ஏனைய இரு­வரும் பொலி­ஸாரின் ஆரம்­ப­கட்ட நட­வ­டிக்­கை­களின் பின்னர் இரவு மணி­ய­ளவில் கொள்­ளு­பிட்­டியில் இருந்து குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விஷேட வேன் ஊடாக கடு­வலை நீதிவான் நீதி­மன்­றுக்கு கொண்­டு­செல்­லப்­பட்டார்.
இந் நிலையில் கடு­வலை நீதி­மன்றின் முன்னால் சுமார் 1000 பேர் வரையில் திரண்டு பஷில் ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ர­வாக கோஷம் எழுப்­பிய நிலையில் அப்­பி­ர­தே­சத்தின் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. இந் நிலையில் நீதி­மன்­றுக்கு 10 மணி­ய­ளவில் பஷில் ராஜ­ப­க்ஷவும், நிஹால் ஜய­தி­ல­கவும், ரண­வக்­கவும் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போதும் 50 நிமி­டங்­களின் பின்­ன­ரேயே அவர்­க­ளது விவ­கா­ரத்தை நீதிவான் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொண்டார்.
இத­னை­ய­டுத்தே அம்­மூ­வ­ரையும் எதிர்­வரும் 5 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க நீதிவான் உத்­த­ர­விட்டார்.
இதனை தொடர்ந்து சிறைச்­சாலை வாக­னத்தில் ஏற்­றப்­பட்ட பஷில் ராஜ­பக்ஷ உள்­ளிட்ட மூவரும் வெலிக்­கடை விள­ம­றி­ய­லுக்கு அழைத்துச் செல்­லப்­பட்­டனர். இதன் கார­ண­மாக வெலிக்­கடை பொலிஸ் பிரிவின் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. சிறை­சா­லையை அண்­மித்த பகு­தி­களில் பொலிஸ் கல­கத்­த­டுப்புப் பிரிவும் மேல­திக பொலி­ஸாரும் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.
திவி நெகும திணைக்­க­ளத்தில் ஊக்­கு­விப்பு தொடர்­பி­லான நிதியில் 70 மில்­லியன் ரூபா மோசடி செய்­யப்­பட்­டமை, திவி­நெ­கும வீட­மைப்பு உதவித் திட்­டத்­திலும் நிதி மோசடி செய்­யப்­பட்­டமை, 'லிதோ' அச்­சுப்­ப­திப்பு தொடர்­பிலும் பாரிய நிதி மோசடி, கடந்த ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக அல்­லது பிர­சா­ரங்­க­ளுக்­காக அத் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து பல இலட்ச ரூபா நிதி செலவு செய்­யப்­பட்­டமை உள்­ளிட்ட பல குற்றச் சாட்­டுக்கள் பஷில் ராஜ­பக்ஷ மற்றும் நிஹால் ஜய­தி­லக, ரண­வக்க ஆகி­யோ­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டுள்­ளன. அத்­துடன் தேசிய சம்­மே­ளனம் ஒன்று திவி நெகும நிதியில் நடத்­தி­வ­ரப்­பட்­டமை தொடர்­பிலும் விசா­ர­ணைகள் தொடர்­கின்­றன.­மே­ளனம் ஒன்று திவி நெகும நிதியில் நடத்­தி­வ­ரப்­பட்­டமை தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன.
இந் நிலையிலேயே இந்த திவி நெகும நிதி மோசடிகள் தொடர்பில் பிரதான சந்தேக நபர்களான முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, முன்னாள் பொருளாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயதிலக மற்றும் திவி நெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.ஆர்.கே.ரணவக ஆகியோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பசில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
பசில் ராஜபக்ஷ சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  நன்றி வீரகேசரி 









ஜோதிடரை நம்பி ஜனாதிபதி தேர்தலை நடத்தியமைக்காக கவலையடைகின்றேன்

23/04/2015 ஜோதி­டரின் பேச்சைக் கேட்டு முன்னதா­கவே ஜனா­தி­பதி தேர்­தலை நடத்­தி­ய­மையையிட்டு தற்­போது கவ­லை­ய­டை­கின்றேன். தற்­போது நான் ஜோதி­டர்­களை நம்­பு­வ­தில்லை என்று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.




புதிய அர­சாங்­கத்தின் கீழ் அர­சியல் ஸ்திர­மின்மை காணப்­ப­டு­கின்­றது. எனவே நாட்டில் ஸ்திரத்­தன்­மையை உறு­தி­செய்­வ­தற்­காக விரைவில் பாரா­ளு­மன்ற தேர்தல் நடை­பெற­வேண்டும் எனவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ குறிப்­பிட்­டுள்ளார்.

ஏ.எப்.பி. செய்­திச்­சே­வைக்கு வழங்கி­யுள்ள விசேட செவ்­வி­யி­லேயே அவர் இதனை குறிப்­பிட்­டுள்ளார்.
அந்த செவ்­வியில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது;
அர­சாங்கம் எனது குடும்­பத்­தி­ன­ருக்கு எதி­ரான அர­சியல் பழி­வாங்­கல்­களில் ஈடு­பட்­டுள்­ளது. எனது ஆட்சி ஊழல் நிறைந்­தது என சித்­த­ரிக்க முற்­ப­டு­வதன் மூல­மாக என்னை மைத்­தி­ரி­பால சிறி­சேன அச்­சு­றுத்த முயல்­கின்றார்.
அவர்­க­ளிடம் ஆதா­ரங்கள் இல்லை. அவர்கள் கண்­மூ­டித்­த­ன­மான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­றனர். இது அர­சியல் பழி­வாங்கல் நட­வ­டிக்­கை­யாகும். நானோ அல்­லது எனது குடும்­பத்தை சேர்ந்­த­வர்­களோ தவ­றான வழியில் பணம் சேர்க்­க­வில்லை.
ஹோட்­டல்கள் உள்­ளதா?
முதலில் என்­னிடம் சுவிஸ் வங்­கிக்­க­ணக்­குகள் உள்­ள­தாக தெரி­வித்­தனர். பின்னர் துபாயில் இருப்­ப­தாக தெரி­வித்­தனர். அந்த பணத்தை காண்­பி­யுங்கள் ஆதா­ரங்கள் எங்கே என்று கேட்­கின்றேன்.
துபாயில் எனக்கு ஹோட்­ட­லொன்று இருப்­ப­தாக தெரி­வித்­தனர். அதன் பின்னர் இலங்­கையில் உள்ள அனைத்து ஹோட்­டல்­களும் எனக்கும் எனது சகோ­த­ரர்­க­ளுக்கும் சொந்­த­மா­னவை என குறிப்­பிட்­டனர். இது ஓரு நகைச்­சு­வை­யாகும்.
சீன விவ­காரம்
நான் ஒரு­போதும் சீனா­விற்கு சார்­பாக செயற்­பட்­ட­தில்லை, இலங்­கையின் நலன்­களை மனதில் வைத்தே செயற்­பட்டேன். அனைத்து பாரிய அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளையும் முதலில் இந்­தி­யா­விற்கே வழங்­கினேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்­க­வில்லை.
ஜோதி­டர்­களில் நம்­பிக்கை இழந்தேன்
குறிப்­பிட்ட காலத்­திற்கு முன்னர் தேர்தல் நடத்­தி­யது பாரிய தவறு என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்றேன். ஜனா­தி­பதி தேர்­தலை இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னரே நடத்­தி­யது மிகப்­பெரும் தவ­றாகும். இதற்­காக நான் தற்­போது வருத்­த­ம­டை­கிறேன். குறிப்­பிட்ட திக­தியில் தேர்தல் நடத்­தினால் எனக்கு வெற்றி நிச்­சயம் என ஜோதிடர் தெரி­வித்தார். நான் சகல ஜோதி­டர்­க­ளிலும் தற்­போது நம்­பிக்­கையை இழந்­து­விட்டேன்.
ஓய்­வு­பெ­ற­வில்லை
நான் அரசியலில் இருந்து ஓய்வுபெறவில்லை. தற்போது ஓய்வெடுத்துக்கொண்டிருக்கின்றேன். புதிய அரசாங்கத்தின் கீழ் அரசியல் ஸ்திரமின்மை காணப்படுகின்றது. ஸ்திரத்தன்மையை உறுதிசெய்வதற்காக விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவேண்டும்.    நன்றி வீரகேசரி 











கோத்தபாய வெளியேறினார் : அரை மணித்தியாலம் விசாரணை

23/04/2015 இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு வருகைத் தந்த முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு முன்பாக குழுமியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்து அங்கிருந்து சென்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் சுமார் அரை மணித்தியாலம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
அவன்ட்கார்ட், லக்ன லங்கா நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கோத்தபாய மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 











பஷிலை பார்க்கச்சென்றார் கோத்தா

23/04/2015 நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு, தற்போது சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கோத்தபாய ராஜபக்ஷ பார்வையிடச்சென்றுள்ளார்.






நன்றி வீரகேசரி


















பாராளுமன்றில் பகலிரவு ஆர்ப்பாட்டம்: மஹிந்த ஆட்சியில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? ராஜித

23/04/2015 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கடந்த நாட்களில் பாராளுமன்றில் பகலிரவாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதுவும் நல்லாட்சியின் வெளிப்பாடே ஆகும். மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பாராமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தினத்தன்று இரவில் மின்சாரத்தை துண்டித்து குளிரூட்டியை தடைசெய்திருப்பார். நாங்கள் அவ்வாறு செய்திருந்தால் அவர்களால் எவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இதுவே நல்லாட்சியின் வெளிப்பாடாகும். மேலும் அவர்களின் ஜனநாயக உரிமை என அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
100 நாள் வேலைத் திட்டம்
100 நாள் வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடைகின்றது. இந்த வேலைத் திட்டத்தில் குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றியுள்ளோம். சில விடயங்கள் கட்டாயம் நிறைவேற்றப்படும். அதாவது தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அமெரிக்க ஜனாதிபதி கூட இவ்வாறு நிறைவேற்றியது இல்லை என ஜோன் கெரி புகழ்ந்துரைத்திருந்தார். எனவே இதனை யாரும் குறை கூற முடியாது. இந்த 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பில் எனக்கு மிகவும் சந்தோசம்.

நிறைவேற்று அதிகாரம்
மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் எம்மோடு இணைந்து வீதியில் ஆர்ப்பாட்டம் செய்தார். ஆனால் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அவருடைய மனநிலை மாற்றமடைந்துள்ளது. ஒரு விடயத்தை முன்னெடுக்கும் போது அதற்கு எதிரப்புகள் எழுவது வழக்கம். எனினும் எமது 100 நாள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரத்தை கட்டாயம் இல்லாதொழிப்போம்.

புதிய தேர்தல் முறை
புதிய தேர்தல் முறைப் பற்றி கதைத்துகொண்டேதான் இருக்கின்றோம். இதனை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கூறினார். இதற்கமைய அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேர்தல் முறையில் மாத்திரமே மாற்றம் உள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதிதுவத்தில் பெரிதாக மாற்றம் ஏற்படாது. சகல இனத்தவரின் பிரதிநிதிகளையும் உள்வாங்கும் வகையிலேயே இந்த தேர்தல் முறை அமையும்.

மக்கள் விருப்பம்
புதிய தேர்தல் முறை தொடர்பில் மக்கள் விருப்பம் கட்டாயம் கேட்டறியப்படும். இதற்கான கால அவகாசமும் வழங்கப்படும்.  நன்றி வீரகேசரி











சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்த பஷில் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

23/04/2015 முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.     நன்றி வீரகேசரி
பசில் ராஜபக்ஷ பொலிஸ்  நிதிமோசடி குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







No comments: