2014 பட்ஜெட்டில் அரசியல்வாதிகளுக்கு சம்பள வெட்டு

.



வரவு செலவுத் திட்ட ஏற்றத்தாழ்வுகளை சமாளிப்பதற்கு சகல அவுஸ்திரேலிய பிரஜைகளும் பங்களிப்பு நல்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் கூட்டணி அரசாங்கம், அரசியல்வாதிகள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிறுத்தவுள்ளது.
சம்பள அதிகரிப்பை நிறுத்துவது பற்றிய அரசாங்கத்தின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு பிரதம மந்திரி சுயாதீன சம்பள தீர்ப்பாயத்திடம் கோரிக்கை விடுப்பார் என அரச செலவினங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் ஜோ ஹொக்கி தெரிவித்தார்.
இதன் பிரகாரம், ஜூலை முதலாம் திகதி தொடக்கம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2.4 சதவீத அதிகரிப்பை இழப்பார்கள். பின்வரிசை உறுப்பினர்களைப் பொறுத்தவரையில், இது 3,900 டொலராக அமையவுள்ளது.
பிரதம மந்திரி ரோனி அபொட் 500,000 டொலர்களை சம்பாதிக்கிறார். சம்பள அதிகரிப்பு நிறுத்தப்படுவதால் அவர் 10,000 டொலர்களை இழக்க நேரிடும்.
இது தொடர்பான தீர்மானம் நாளை அறிவிக்கப்படவுள்ளது. அனேகமாக சம்பள வெட்டுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: