இசை வேள்விக்காக இராகங்களை இனம் காணும் போட்டி


தமிழ்முரசு வாசகர்களுக்கு,
எம்
 அன்பார்ந்த வணக்கங்கள்.


வீணா
 வேணு கான இசை நிகழ்ச்சியாக அரங்கேறவிருக்கும்
 இசை வேள்வியை முன்னிட்டு SBS தமிழ்த் தேசிய வானொலியுடன் இணைந்து இராகங்களை இனம் காணும் போட்டி ஓன்றை நடாத்துகின்றோம்.
இளம் கர்நாடக இசைக் கலைஞர் அகிலன் சிவானந்தன் அவர்கள், (அவுஸ்திரேலியக் கம்பன்கழக இணை பொறுப்பாளர் - மெல்பேர்ண் வளாகம்) ஆறு இராகங்களை ஆலாபனை செய்து வழங்க,கீழ்க்காணும் இணையத்தளத்தில் SBS தமிழ்த் தேசிய வானொலி நிலையத்தார் பதிவேற்றியுள்ளனர்.http://www.sbs.com.au/yourlanguage/tamil/highlight/page/id/334685/t/Win-Tickets-for-Isai-Velvi-2014/

இராகங்களை
 இனங்கண்டுஅதே ஒழுங்கில் வரிசைப்படுத்தி இதேஇணையதளத்திலோ அல்லது 
tamil.program@sbs.com.au எனும் மின்னஞ்சல்முகவரிக்கோ பதிவுசெய்து அனுப்பி வையுங்கள்போட்டி முடிவு திகதி : 19/05/2014 23:59:59.
இந்த ஆறு இராகங்களையும் சரியாக வரிசைப்படுத்தும் நேயர்களுள்அதிர்ஷ்டசாலிகளுக்குஇசை வேள்விக்கான - இரு தனிநபருக்கான நுழைவுச் சீட்டுக்கள் காத்திருக்கிறது.

உலகப் புகழ் பெற்ற வீணை வல்லோன் கலைமாமணி இராஜேஷ் வைத்தியா,புல்லாங்குழல் இசைக்கலைஞர் வாரிஜாஸ்ரீ வேணுகோபால் ஆகியோர்தென்னிந்திய மற்றும் சிட்னிக் கலைஞர்களுடன் இணைந்து வழங்கவுள்ள,அவுஸ்திரேலியக் கம்பன் கழக இசை வேள்விமே மாதம் 24ம் திகதிசனிக்கிழமைமாலை 5:30 மணிக்கு, 107 Derby Street, Silverwater இல் அமைந்துள்ள Sydney Baha'i Centreஇல் நடைபெறவுள்ளது.

அன்புடன்,
-அவுஸ்திரேலியக்
 கம்பன் கழகத்தினர்-


அவுஸ்திரேலியக் கம்பன் கழகம் வழங்கும் இசை வேள்வியை இரசிக்க வருகை தருமாறு வீணை வல்லோன் இராஜேஷ் வைத்தியா மற்றும் வாரிஜாஸ்ரீ வேணுகோபால் அவர்கள்  விடுக்கும் அன்பழைப்பு: 


http://www.youtube.com/watch?v=Pt3-0fRhibo

நன்றி.

No comments: