Tuesday, 01 May 2012

கணிசமான, நீண்ட சிறைத் தண்டனை விதிக்கப்படாவிடின் சட்டத்துக்கான மதிப்பை கெடுப்பதாகிவிடும். எனவே ஒருவர் பயங்கரவாத இயக்கத்துக்கு பொருள் ரீதியான உதவி வழங்கினாலும் கடும் தண்டனையிலிருந்து தப்பிக்கொள்ளலாமெனத் தெரிவிப்பது போல் இது விளங்கிக் கொள்ளப்படுமென வழங்குரைஞர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கின் அச்சாணியான இலங்கை உள்நாட்டுப் போர் முடிந்துவிட்டது. மேலும் சந்தேக நபர், தீவிர அரசியல் நோக்கம் கொண்டவர் அல்ல. இவற்றைக் கருத்திற்கொண்டு ஏற்கனவே இவர் சிறையில் இருந்ததை தண்டனையாகக் கருதி அவரை விடுவிக்க வேண்டுமென்று குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்நீதிபதியிடம் வேண்டிக்கொண்டுள்ளார்.
இவரது செயல் தனியொரு நிகழ்வு மட்டுமே. இவர் நிலைமை சரியாகப் புரியாமல் தவறுதலாக நடந்துள்ளார். இவர் ஒரு பாடத்தைப் படித்துவிட்டார். இவர் தனது செயலுக்காக உண்மையில் மனம் வருந்துகின்றார். என இவரது வழக்குரைஞரான ஜெரிபொவ் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்த வழக்கு மீதான தீர்ப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தினருக்கு இரவுப் பார்வைக் கண்ணாடி வாங்க முற்பட்டதாக 35 வயதான மயில்வாகனம் ரமணன் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அத்துடன், புலிகள் இயக்கத்தினருக்காக கணினிகள், இலத்திரனியல் பாகங்கள் போன்ற சாதனங்களை வாங்க முயன்ற சுரேஷ் ஸ்ரீஸ்கந்தராஜாவுக்கு உதவியதாகவும் இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment