விபுலானந்தரின் 120ஆவது பிறந்த தினம் அனுஷ்டிப்பு


  முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 120ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை கல்லடியில் விழாவொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வின் போது கல்லடியில் அமைந்துள்ள அன்னாரின் சமாதிக்கு கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.பிரேம்குமார், கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்வியகத்தின் மட்டு. மாவட்டச் செயலாளர் த.கோபாலகிருஷ்ணன், சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழாச் சபை சிரேஷ்ட உறுப்பினர் காசிபதி நடராசா, நூற்றாண்டு விழாச் சபை செயலாளர் ஜெயராஜ், ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயச் செயலாளர் என்.ஹரிதாஸ் மற்றும் பெருந்திரளான மாணவ மாணவிகள் மலர் மாலை அணிவித்தனர்.

 நன்றி வீரகேசரி இணையம்

No comments: