உலகச்செய்திகள்

பசுபிக் கடலினுள் விழுந்த செயலிழந்த செயற்கைக் கோள்







அட்லாண்டிக் கடலில் 240 தொன் வெள்ளியுடன் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்




 
 
 
 

 



பசுபிக் கடலினுள் விழுந்த செயலிழந்த செயற்கைக் கோள்


26/9/2011

முற்றிலுமாக செயலிழந்த நிலையிலுள்ள செயற்கைக்கோளொன்று சில தினங்களில் பூமியில் விழும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

அச் செயற்கைக்கோள் கடந்த சனிக்கிழமை பூமியில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.


பூமியினுள் நுழைந்த குறித்த செயற்கைகோள் 26 பகுதிகளாக பிரிவடைந்ததாகவும், இதில் பெரிய பகுதி சுமார் 150 கிலோகிராம்கள் எனவும் இது பசுபிக் கடலினுள் விழுந்ததாக நாசா தெரிவித்துள்ளது.

மேலும் சில பகுதிகள் வேறு சில பகுதிகளில் விழுந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இது எங்கு விழுந்தது என்பது தொடர்பில் பல முரண்பாடான தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
நன்றி வீரகேசரி 
 

அட்லாண்டிக் கடலில் 240 தொன் வெள்ளியுடன் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்
27/9/2011

இரண்டாம் உலகப் போரின் போது சுமார் 240 தொன் வெள்ளியுடன் ஜேர்மனியப் படைகளின் 'டொபிடோ' தாக்குதலுக்குள்ளாகி அட்லாண்டிக் கடலில் மூழ்கிய பிரித்தானிய கப்பலொன்றின் சிதைவுகளை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆழ்கடல் ஆராய்ச்சி நிறுவனமான ஒடிசி அறிவித்துள்ளது.

எஸ்.எஸ். கெயார்சோபா என்ற அக்கப்பலின் சிதைவுகள் அயர்லாந்து கரைப்பகுதியிலிருந்து 300 மைல்கள் தொலைவில் சுமார் 15,510 அடி ஆழத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இக்கப்பலானது 1941 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் திகதி ஜேர்மனியப்படையின் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் அதன் போது இதில் பயணித்த 84 பேர் உயிரிழந்துடன் ஒருவர் மாத்திரம் உயிர்பிழைத்துள்ளார்.

தற்போதைய சந்தைவிலைகளுடன் ஒப்பிடும் போது அவ்வெள்ளியின் மொத்தப் பெறுமது 210 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒடிசி நிறுவனமானது பிரித்தானிய அரசுடனான ஒப்பந்தப்படி கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளியில் 80 வீதமானவற்றை பெற்றுக்கொள்ளுமென்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி






No comments: