மரணஅறிவித்தல்

 


திருமதி பரமேஸ்வரி கந்தையா

யாழ்ப்பாணம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் அத்தியடி மற்றும் சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமேஸ்வரி கந்தையா அவர்கள் 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று சிட்னியில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலம்சென்றவர்களான செல்லையாபிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும் காலஞ்சென்றவர்களான பொன்னையா, சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற தனலட்சுமி, காலஞ்சென்ற கமலாம்பிகை, கமலாசினி, மாசிலாமணி, காலஞ்சென்ற புஷ்பராஜலிங்கம், புண்ணியலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், பாலகிருஷ்ணன், கலாநிதி ஆகியோரின் அன்புத் தாயாரும், சபாநாதன், விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியும், தனுஷா, வினேய், தர்ஷிகா, குணால், பிரேன், யாழினி, வறேன், எமா ஆகியோரின் பாசமிகு பேத்தியும், ஆர்யா, அர்ஜுன், ஆதித்தியா, அரவிந் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 02/03/2021 செவ்வாய்க்கிழமை  காலை 10.15 மணி முதல் 10.45 மணி வரை பொதுமக்களின் பார்வைக்காக  Rookwood Cemetery, East Chapel இல் வைக்கப்பட்டு பின்னர் இறுதிக் கிரியைகளும் தகனக் கிரியைகளும் நடைபெறும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலதிக விபரங்கட்கு க சபாநாதன் Tel: 0408 432 680

 


No comments: