உலகச் செய்திகள்


ஜனா­தி­ப­திக்­கான மருத்­துவ பரி­சோ­தனை நெறி­மு­றை­களை மீறிய  டொனால்ட் ட்ரம்ப்

ஈரானின் போர்ட்டோ அணு­சக்தி நிலை­யத்­துக்­கான தடைகள் தொடர்­பான சலு­கைகள் நிறுத்­தம் - அமெரிக்கா

முகமூடி அணிவதற்கான தடை அடிப்படை உரிமை மீறலாகும் : ஹொங்கொங் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

ஈரானில் ஆர்ப்­பாட்­டங்களின் போது 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - சர்­வ­தேச மன்­னிப்பு சபை

குழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் - பொலிஸார் தகவல்

ஹொங்கொங்கிற்கு எதிராக இரு சட்ட மூலங்களை நிறைவேற்றியது அமெரிக்கா!

பாதுகாப்பு பணியில் ஈடுபடும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள்



ஜனா­தி­ப­திக்­கான மருத்­துவ பரி­சோ­தனை நெறி­மு­றை­களை மீறிய  டொனால்ட் ட்ரம்ப்


19/11/2019 அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப்,  தனது ஜனா­தி­பதி பதவி நிலைக்­கான மருத்­துவ பரி­சோ­தனை நெறி­மு­றை­களைப் பின்­பற்­றாது இரா­ணுவ மருத்­து­வ­ம­னை­யொன்றுக்கு நடு இரவு வேளையில்  விஜயம் செய்­துள்ளார்.

மேரி­லான்ட்டில் பெதெஸ்டா எனும் இடத்­தி­லுள்ள  வோல்ட்டர் றீட் தேசிய இராணுவ மருத்­து­வ­ம­னைக்கு  கடந்த சனிக்­கி­ழமை டொனால்ட் ட்ரம்பால் மேற்­கொள்­ளப்­பட்ட இந்த விஜயம் தொடர்­பான தக­வல்கள் நேற்று  திங்­கட்­கி­ழமை வெளியி­டப்­பட்­டுள்­ளன.
மேற்­படி மருத்­து­வ­ம­னையில்  நாட்டின் ஜனா­தி­ப­திக்கும் இரா­ணுவ உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கும்  சிகிச்சை அளிக்­கப்­பட்டு  வரு­கி­றது.
இந்­நி­லையில் 73 வய­தான ட்ரம்ப் எது­வித முன்­ன­றி­விப்­பு­மின்றி அங்கு விஜயம் செய்­தமை  அவ­ருக்கு ஏதா­வது உடல் பிரச்­சினை ஏற்­பட்டு உட­னடி சிகிச்சை பெற நேர்ந்­தி­ருக்­கலாம் என வதந்தி பரவ வழி­வகை செய்­துள்­ளது.
அவ­ரது விஜ­யத்தின்போது  முக்­கிய பிர­முகர் ஒருவர் வரு­வ­தாக மட்டும் மருத்­து­மனை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்டிருந்­தது.
ஏனெனில் முக்­கி­யஸ்­தர்கள் வரு­வ­தாக அறி­விக்­கப்­பட்டால் அந்த முக்­கி­யஸ்­தரின் பாது­காப்புக் கருதி அந்த மருத்­து­வ­ம­னையின் சில பகு­தி­களை மூட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
இந்­நி­லையில் ஜனா­தி­பதி அங்கு வரு­வதை அறி­யாத மருத்­துவ­மனை உத்­தி­யோ­கத்­தர்கள் அவ­ரது மருத்­து­வ­ப­ரி­சோ­த­னைக்­காக பின்­பற்­றப்­படும் விசேட நெறி­மு­றை­களைப் பின்­பற்­றாது இருந்­துள்­ளனர்.
இதனால்  அங்­கி­ருந்த  சிறிய மருத்­துவ குழு­வி­னரால் ட்ரம்­புக்கு  விரை­வான துரித மருத்­துவ பரி­சோ­த­னைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
இந்த விஜ­யத்­திற்கு முதல் நாளான வெள்ளிக்­கி­ழமை  இரவு டொனால்ட் ட்ரம்ப் பூரண ஆரோக்­கிய நிலையில் காணப்­பட்­ட­தாக  கூறப்­ப­டு­கி­றது.
மேற்­படி  மருத்­துவ பரி­சோ­தனை குறித்து  அமெ­ரிக்க வெள்ளை மாளிகை ஊடக செய­லாளர் ஸ்ரெபனி கிறிஷ் கூறு­கையில், ட்ரம்­பிற்கு வரு­டாந்த  உடல் நலப் பரி­சோ­த­னையே மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­வித்தார்.

அதே­ச­மயம் டொனால்ட் ட்ரம்ப்  நேற்று முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை டுவிட்டர் இணை­யத்­த­ளத்தில் தன்னால் பதி­வேற்றம் செய்யப்பட்டசெய்­தியில்,  தான்  கடந்த பெப்ரவரி மாதம்  மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையின்போது தனது உடல் நலம்  மிகவும் ஆரோக்கியமாகக் காணப்பட்டதாகவும் தனது நிறை 243  இறாத்தலாகவுள்ள  அதேசமயம் தனது  இரத்த அழுத்த அளவு 118/80 ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 









ஈரானின் போர்ட்டோ அணு­சக்தி நிலை­யத்­துக்­கான தடைகள் தொடர்­பான சலு­கைகள் நிறுத்­தம் - அமெரிக்கா

20/11/2019  ஈரானின் போர்ட்டோ அணு­சக்தி நிலை யம் குறித்து தன்னால் வழங்­கப்­பட்­டி­ருந்த தடைகள் தொடர்­பான சலு­கை­களை நிறுத்­தப்­போ­வ­தாக அமெ­ரிக்கா நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை அறி­வித்­துள்­ளது.


 தனது யுரே­னிய செறி­வூட்டல் நட­வ­டிக்­கையை மீள ஆரம்­பித்­துள்­ள­தாக ஈரான் அறி­வித்­த­தை­ய­டுத்து அந்­நாட்­டுடன் உலக அதி­கார சக்­தி­களால் செய்து கொள்­ளப்­பட்ட அணு­சக்தி உடன்­ப­டிக்­கையின் முக்­கிய கூறு­களில் ஒன்றை முடி­வுக்கு கொண்டு வரு­வ­தாக  மேற்­படி அறி­விப்பு உள்­ளது.
போர்ட்டோ அணு­சக்தி நிலை­யத்­தி­லான செயற்­பா­டுகள் மீள ஆரம்­பிக்­கப்­ப­டு­வ­தாக ஈரா­னிய ஜனா­தி­பதி ஹஸன் ரோஹானி அறி­வித்­தி­ருந்­தமை குறித்து சுட்­டிக்­காட்­டிய அமெ­ரிக்க இரா­ஜாங்கச் செய­லாளர் மைக் பொம்­பியோ,  தடைகள் தொடர்பில் சலுகை வழங்­கப்­பட்­டி­ருக்கும் சூழ்­நி­லையில் ஈரான் மிகவும் மோச­மான முன்­ன­டி­யெ­டுத்து வைப்­பு­களை மேற்­கொண்டு வரு­வ­தா­கவும்  அதனால் அமெ­ரிக்கா எதிர்­வரும் டிசம்பர் 15 ஆம் திகதி அமு­லுக்கு வரும் வகையில்  போர்டோ அணு­சக்தி நிலை­யத்­துடன் தொடர்­பு­பட்ட தடை­க­ளி­லான சலு­கைளை நிறுத்­து­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.
ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.
தீவி­ர­வா­தத்­துக்கு ஆத­ரவு அளித்து வரும் நாடொன்­றுக்கு  யுரே­னி­யத்தை செறி­வாக்கம் செய்­வ­தற்கு உரி­மை­யா­க­வுள்ள அளவு பூஜ்­ஜி­ய­மா­க­வுள்­ள­தாக தெரி­வித்த அவர்,  ''இந்­நி­லையில் ஈரான் இதற்கு முன் இர­க­சி­ய­மா­ன­தா­க­வி­ருந்த அணு­சக்தி நிலை­யத்தில் செறி­வாக்­கத்தை மீள ஆரம்­பிப்­ப­தற்கு எது­வித கார­ணமும் கிடை­யாது. அதனால் அந்­நாடு  உட­ன­டி­யாக தனது செயற்­பா­டு­களை மாற்றிக் கொள்ள வேண்டும்'' என வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வருடம் ஈரா­னுடன் செய்­து­கொண்ட அணு­சக்தி உடன்­ப­டிக்­கை­யி­லி­ருந்து தனது நாட்டை வாபஸ் பெற்றுக்கொண்­டது முதல் ஈரா­னுக்கு எதி­ரான தடை­கள்­ மீள  நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

எனினும் அணு­சக்தி உடன்­ப­டிக்­கையில் தற்­போதும் உள்ள ஏனைய நாடு­க­ளுக்கு அந்த உடன்­ப­டிக்­கையை முன்­னெ­டுக்க அனு­ம­திக்கும் வகையில் சில தடைகள் தொடர்­பான சலு­கை­களை அமெ­ரிக்கா தொடர்ந்து பேணி வரு­கி­றது.   நன்றி வீரகேசரி 










முகமூடி அணிவதற்கான தடை அடிப்படை உரிமை மீறலாகும் : ஹொங்கொங் உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

19/11/2019 ஹொங்கொங்கில் புதிய கைதி பறிமாற்ற சட்டமூலகத்தை முற்றிலும் கைவிடுவதாக ஹொங்கொங் நிர்வாகம் அறிவித்திருந்த போதும், சீனாவிடம் இருந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடன் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் நேற்றும் கலகமடக்கும் பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இடையில் கடும் முறுகல் நிலை ஏற்பட்டது.
பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டிருந்த ஹொங்கொங் பல்கலைக்கழகத்திலிருந்து பலர் கயிற்றின் மூலம் வெளியில் இறங்கி இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர்.
போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த பொலிடெக்னிக் பல்கலைக்கழகத்தைவிட்டு தப்பிக்க முயன்ற சுமார் 100 பேர் பொலிஸாரின் கண்ணீர் புகைகுண்டு மற்றும் இறப்பர் குண்டுகளால் தாக்கப்பட்டனர். அவர்களில் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹொங்கொங்கில் கடந்த பல மாதங்களாக நடைபெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்துக்கான அண்மைய களமாக குறித்த பல்கலைக்கழகம் மாறியுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த வன்முறையில் 116 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது அண்மைக் காலங்களில் நடைபெற்ற மிக மோசமானதொரு வன்முறை சம்பவமாக கருதப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய சட்டமூலத்திற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் போராட்டமாக வளர்ந்துள்ளது.

அதேவேளை, போராட்டக்காரர்கள் முகமூடி அணிவதற்கு விதிக்கப்பட்ட தடை, அரசமைப்புக்கு எதிரானது என ஹொங்கொங் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  நன்றி வீரகேசரி 











ஈரானில் ஆர்ப்­பாட்­டங்களின் போது 106 பேர் கொல்லப்பட்டுள்ளனர் - சர்­வ­தேச மன்­னிப்பு சபை

21/11/2019  ஈரானில் எரி­பொருள் விலை­யேற்­றத்­துக்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­வர்களை நசுக்க அந்­ நாட்டு அர­சாங்கம் மேற்­கொண்ட நட­வ­டிக்­கையின் போது 106 பேருக்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச மன்­னிப்பு சபை தெரி­விக்­கி­றது.
இது தொடர்பில் பிரித்­தா­னி­யாவை அடிப்­ப­டை­யாகக் கொண்ட உரி­மை­க­ளுக்­காக குரல் கொடுக்கும் தொண்டு ஸ்தாப­ன­மான  மேற்­படி சபை அறிக்­கை­யொன்றை வெளியிட்­டுள்­ளது.
ஈரா­னிய பாது­காப்புப் படை­யினர் கடந்த வெள்ளிக்­கி­ழமை முதல் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ள­வர்­களை நசுக்க அள­வுக்கு மீறிய படை பலத்தைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் இதன்­போது 21 நகர்­களில் 106 பேருக்கும் அதி­க­மானோர் கொல்­லப்­பட்­டுள்­ள­தா­கவும் மேற்­படி அறி க்­கையில்  தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
தாக்­கு­தல்கள் இடம்­பெற்ற போது சம்­பவ இடத்தில் இருந்­த­வர்­கள், ஈரா­னுக்குள் செயற்­படும் மனித உரி­மைகள் செயற்­பாட்­டா­ளர்கள், ஊட­க­வி­ய­லா­ளர்கள் மற்றும் நம்­ப­க­மான வட்­டா­ரங்­க­ளி­லி­ருந்து பெறப்­பட்ட தக­வல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டே பலி­யா­ன­வர்­களின் தொகை கணிப்­பீடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக  அந்த சபை குறிப்­பிட்­டுள்­ளது.
ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களை நசுக்க மேற் கொள்­ளப்­பட்ட இந்த நட­வ­டிக்­கையின் போது கொல்­லப்­பட்­ட­வர்­களின் உண்­மை­யான தொகை இந்தத் தொகை­யிலும் அதிகம் எனவும் இதன்­போது 200 பேர் வரை கொல்­லப்­பட்­டுள்­ள­தாக கரு­து­வ­தா­கவும் சர்­வ­தேச மன்­னிப்பு சபை தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லையில் இது தொடர்பில்  ஈரா­னிய அர­சாங்கம் எது­வித விமர்­ச­னத்­தை யும் இது­வரை வெளியி­ட­வில்லை.   நன்றி வீரகேசரி 









குழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் - பொலிஸார் தகவல்

22/11/2019  குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
குஜராத் மாநிலம்-  ஹிராபூரிலுள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து, 4 குழந்தைகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் நித்யானந்தா மீது முறைப்பாடு பதிவு  செய்யப்பட்டது.
குறித்த முறைப்பாடு தொடர்பாக நித்யானந்தா, அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது ஆமதாபாத் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர்.
அவர்களில் சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் ஆகியோர் கைது செய்யப்பட்டதுடன்  4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூரைச் சேர்ந்த ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். அவர்கள் இருவரும் ஜனார்த்தன சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
ஜனார்த்தன சர்மாவின் மூத்த மகள்களான 21 வயதான லோக முத்ரா , 18 வயதான இ நந்திதா சர்மா  ஆகியோர் இன்னும் ஆமதாபாத் ஆசிரமத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரது மகள்களை சந்திக்க ஆசிரம நிர்வாகிகள் அனுமதி வழங்க மறுத்ததால், ஜனார்த்தன சர்மா குஜராத்  உதவியை நாடினார். இதைத்தொடர்ந்துதான் அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தைகள் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக  ஆமதாபாத் பொலிஸார் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, “நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டார் என்றும், தேவைப்பட்டால் வெளிநாட்டில் இருக்கும் அவரை உரிய வழியில் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை  பொலிஸார் மேற்கொள்வார்கள் என்றும் இந்தியா திரும்பினால் அவரை நாங்கள் நிச்சயமாக கைது செய்வோம் என்றும்” தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே,நித்யானந்தா ஹிராபூர் கிராமத்தில் ஆசிரமம் நடத்தும் நிலம் டெல்லி பப்ளிக் பள்ளிக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

சட்ட விதிமுறைகளை மீறி அந்த நிலத்தை ஆசிரமம் நடத்த குத்தகைக்கு கொடுத்ததாக டெல்லி பப்ளிக் பள்ளியின் முதல்வர் ஹிதே‌‌ஷ் புரியை கைது செய்ததாகவும் பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டதாகவும் ஆமதாபாத் புறநகர் துணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  நன்றி வீரகேசரி 










ஹொங்கொங்கிற்கு எதிராக இரு சட்ட மூலங்களை நிறைவேற்றியது அமெரிக்கா!

21/11/2019  ஹொங்கொங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஹொங்கொங் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்ட மூலங்களை நிறைவேற்றி உள்ளது.
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹொங்கொங் 1997 ஆம் ஆண்டு, ஜூலை முதலாம் திகதி சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாடு, இரண்டு அமைப்புகள் என்ற வகையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹொங்கொங் உள்ளது.
ஆனால் சீனாவில் உள்ள சுதந்திரம், ஹொங்கொங் கிடையாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சுதந்திரத்தைத்தான் ஹொங்கொங் மக்கள் அனுபவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நீதித்துறை சுதந்திரத்திலும் சீனாவின் தலையீடு இருக்கிறது.
இந்நிலையில், குற்றவாளிகளை சீனாவுக்கும் தைவானுக்கும் நாடு கடத்தி விசாரிக்கும் சட்டமூலத்தை ஹொங்கொங் அரசாங்கம் கடந்த ஜூன் மாதம் கொண்டு வந்தது. 
எனினும் இந்த சட்டமூலத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. ஹொங்காங்கில் ஆதிக்கம் செலுத்த சீனா மேற்கொள்ளும் மறைமுக முயற்சி இது எனக் கூறியும், இந்த சட்டமூலத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் ஹொங்காங் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. 
ஜனநாயக ஆர்வலர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை கடந்த மாதம் திரும்பப்பெற்றது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.
சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள், ஹொங்கொங் குற்றவழக்குகளில் சிக்குபவர்கள் மீது வெளிப்படையான விசாரணை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.
தொடர்ந்து 6 மாதங்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் வன்முறை தாண்டவமாடி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த போராட்டம் தொடங்கிய நாள் முதலே அமெரிக்கா, ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறது. போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதாக சீனா மற்றும் ஹொங்கொங்  அரசை அமெரிக்கா ஏற்கனவே கண்டித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் ஹொங்கொங் போராட்டம் தொடர்பாக 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இதில் முதல் மசோதா ஹொங்கொங்  மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும், பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிவகுக்கும்.
அதேபோல் ஹொங்கொங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் 2019 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு சட்டமூலம் ஹொங்கொங் பொலிஸ் படையினருக்கு அமெரிக்க நிறுவனங்கள் சில ஆயுதங்களை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதை தடைசெய்யும்.

அத்துடன் இந்த சட்டமூலம் ஹொங்கொங் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும்.   நன்றி வீரகேசரி 









பாதுகாப்பு பணியில் ஈடுபடும் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள்


23/11/2019  சீனாவில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள் பாதுகாப்பு பணியில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன. 
சீனாவின் பீஜிங் நகராட்சியின் பாதுகாப்பு குழுவில் இணைப்பதற்காக அந்நாட்டு விஞ்ஞானிகள் இரண்டு நாய்களின் மரபணுக்களை கொண்டு குளோனிங் முறையில் 6 நாய்களை உருவாக்கி உள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்த இந்த நாய்க்குட்டிகளுக்கு தற்போது 4 மாதங்கள் வயது ஆகும் நிலையில், அவை 6 மாதங்கள் வயது கொண்ட நாய்களுக்கு உண்டான திறமையுடனும், நினைவாற்றலுடனும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த 6 நாய்களும் இலட்சனை, கழுத்துப்பட்டி, மற்றும் சீருடை அணிவிக்கப்பட்டு பீஜிங்கில் பாதுகாப்பு பணியில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த நாய்களுக்கு கூடுதல் பயிற்சி அளித்து, அதன் மூலம் மேலும் திறமையான நாய்களை உருவாக்க விஞ்ஞானிகள் திட்டுமிட்டுள்ளனர்.   நன்றி வீரகேசரி 









No comments: