புலிவாலை பிடித்த ஜனா­தி­பதி...!

26/08/2019
2015இல் நிகழ்ந்த ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர், எல்­லா­வற்­றையும் நிறை­வேற்­றுவோம் என்று ஜெனீவாவில் வாக்­கு­று­தி­களைக் கொடுத்து, சர்­வ­தேச சமூ­கத்தை நம்­ப­வைத்து வந்த இலங்­கையின் தற்­போ­தைய அர­சாங்கம், தமது வாக்­கு­று­தியை மீறும் வகையில் செயற்­ப­டு­வதை சர்வ­தேச சமூ­கத்­தினால் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­ தி­ருக்­கி­ன்றது.
இலங்­கையின் புதிய இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்ள விவ­காரம், புதி­ய­தொரு பரி­மா­ணத்தைத் தொட்­டி­ருக்­கி­றது, இதனை ஐ.நாவும் சர்­வ­தேச சமூ­கமும், தமக்கு விடுக்­கப்­பட்ட சவா­லா­கவே பார்க்­கின்­றன.
2010ஆம் ஆண்டு தொடக்கம், இலங்­கையின் மனித உரிமை மீறல்­க­ளுக்கு, பொறுப்­புக்­கூ­று­வ­தற்கு எடுக்­கப்­பட்டு வந்த நட­வ­டிக்­கைகள், 2015இற்குப் பின்னர் மந்­த­க­தியை அடைந்த சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்திக் கொண்டே, இலங்கை அர­சாங்கம் இவ்­வா­றான ஒரு நகர்வை முன்­னெ­டுத்­தி­ருக்­கி­றது.
மஹிந்த ராஜபக் ஷ அர­சாங்கம் ஐ.நா மற்றும் மேற்­கு­ல­கத்­துடன் பனிப்போர் நடத்திக் கொண்­டி­ருந்­தது. அப்­போது, லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா இரா­ணுவத் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டி­ருந்தால் இந்­த­ள­வுக்கு எதிர்­வி­னைகள் வந்­தி­ருக்­காது.



ஏனென்றால், தம்­முடன் முரண்­படும் ஒரு அரசு, மீறல்­க­ளுக்குப் பதி­ல­ளிக்­கவோ, பொறுப்­புக்­கூ­றவோ தயா­ராக இல்­லாத ஒரு அரசு- அவ்­வாறு தான் நடந்து கொள்ளும் என்­பது அவர்­க­ளுக்குத் தெரியும்.
ஆனால், 2015இல் நிகழ்ந்த ஆட்­சி­மாற்­றத்­துக்குப் பின்னர், எல்­லா­வற்­றையும் நிறை­வேற்­று வோம் என்று ஜெனீ­வாவில் வாக்­கு­று­தி­களைக் கொடுத்து, சர்­வ­தேச சமூ­கத்தை நம்­ப­வைத்து வந்த இலங்­கையின் தற்­போ­தைய அர­சாங்கம், தமது வாக்­கு­று­தியை மீறும் வகையில் செயற்­ப­டு­வதை சர்­வ­தேச சமூ­கத்­தினால் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­தி­ருக்­கி­றது.
தம்மை ஏமாற்றி விட்டு தமக்கு சவால் விடும் வகையில் இப்­ப­டி­யான ஒரு நிய­ம­னத்தை இலங்கை ஜனா­தி­பதி செய்­தி­ருக்­கிறார் என்ற கோபம் ஐ.நா மற்றும் மேற்­கு­லக நாடு­களின் அறிக்­கை­களில் பிர­தி­ப­லிப்­பதை காண முடி­கி­றது. அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­ல­கி­னதும், ஐ.நாவி­னதும் இந்த எதிர்ப்­பு­களை இலங்கை அர­சாங்கம் நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது, இது இலங்­கையின் இறை­மைக்­குட்­பட்­டது என்றும், வெளியார் இதில் தலை­யீடு செய்ய முடி­யாது என்றும் கூறி­யி­ருக்­கி­றது.
அது­போ­லவே, சிங்­கள தேசி­ய­வாத அர­சி­யல்­வா­தி­களும், அமெ­ரிக்கத் தலை­யீட்டை ஏற்­க­மு­டி­யாது, அவர்கள் எமக்கு உத்­த­ர­விட இது ஒன்றும் அமெ­ரிக்­காவின் கொலனி இல்லை என்ற சூடான அறிக்­கை­களும் வந்து கொண்­டி­ருக்­கின்­றன.
இங்கு பிர­தா­ன­மாக கோபம் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­வது அமெ­ரிக்கா மீது தான். இரா­ணுவத் தள­பதி நிய­மனம் நிகழ்ந்த மிகக்­கு­று­கிய நேரத்­துக்குள், அமெ­ரிக்க தூத­ரகம் அதற்கு கவலை வெளி­யிட்­டது. இதற்கு எதிர்ப்­புகள் வெளி­யி­டப்­பட்ட நிலையில், இதனைத் தான் செய்ய வேண்டும் என்று கூறு­வ­தற்கும், கவலை தெரி­விப்­ப­தற்கும் வேறு­பாடு உள்­ளது என்று தமது நிலைப்­பாட்டை மீண்டும் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார் அமெ­ரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ்.
2015இற்குப் பின்னர், முதல் முறை­யாக இலங்­கைக்கும் மேற்­கு­லகம் மற்றும் ஐ.நாவுக்கும் இடையில் ஒரு பெரிய முரண்­பாடு அல்­லது விரிசல் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.
இதற்கு லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவின் நிய­ம­னமே முழுக்­கா­ர­ண­மாக அமைந்­தி­ருக்­கி­றது.
இந்­த­நிலை எதிர்­பார்க்­கப்­ப­டாத ஒன்­றல்ல. வரும் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்குப் பின்னர், இவ்­வா­றான ஒரு சூழல் ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்­புகள் இருந்­தன. கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்­றி­பெறக் கூடிய நிலை ஏற்­பட்டால், இது­போன்ற முரண்­பாடு எழும் என்­பது எதிர்­பார்க்­கப்­பட்­டது தான்.
ஆனால், அந்த முரண்­பாட்டை முன்­கூட்­டியே, சவேந்­திர சில்­வாவின் நிய­ம­னத்தின் மூலம் ஆரம்­பித்து வைத்­தி­ருக்­கிறார் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன.
இந்த நிய­மனம் மற்றும் அதை­ய­டுத்து எழுந்­தி­ருக்­கின்ற முரண்­பா­டுகள், இலங்­கைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தக் கூடி­யவை என்­பதில் ஐய­மில்லை.
அதனால் தான், நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர, மீண்டும் சர்­வ­தேச சமூ­கத்­துடன் முரண்­ப­டு­கின்ற வகையில் வெளி­வி­வ­கார அமைச்சு செயற்­ப­டக்­கூ­டாது என்றும், அவ்­வாறு முட்டிக் கொண்டால் அது இலங்­கைக்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தும் என்றும் டுவிட்டர் பதிவு ஒன்றை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.
மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் சர்­வ­தேச சமூ­கத்­துடன் கொண்­டி­ருந்த, மோச­மான உற­வு­களை, சீர்­ப­டுத்­து­வ­தற்­காக கடு­மை­யாகப் போரா­டி­யவர், அப்­போது வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த மங்­கள சம­ர­வீர தான்.
அந்­த­வ­கையில் தான் அவர், வெளியார் தலை­யீட்டை ஏற்­க­மு­டி­யாது என, வெளி­வி­வ­கார அமைச்சு வெளி­யிட்ட அறிக்கை பற்றி- இந்தக் கருத்தை முன்­வைத்­தி­ருக்­கிறார்.
புதிய இரா­ணுவத் தள­பதி நிய­ம­னத்தின் மூலம், ஐ.நா மற்றும் அமெ­ரிக்­கா­வு­ட­னான உற­வுகள், வசதி வாய்ப்­புகள் என்­பன பாதிக்­கப்­படும் சூழல் ஒன்று எழுந்­தி­ருக்­கி­றது.
முதலில் ஐ.நாவு­ட­னான உற­வு­களில் எத்­த­கைய பாதிப்பு நிகழும் என்று பார்க்­கலாம்.
லெப்.ஜெனரல் சவேந்­திர சில்­வாவின் நிய­மனம் தொடர்­பாக கவலை தெரி­வித்து ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் மிச்சேல் பசெலெட் வெளி­யிட்ட அறிக்­கையில், “இது ஐ.நா அமை­தி­காப்பு முயற்­சி­களில் இலங்கை தொடர்ந்து பங்­கேற்­ப­தற்­கான இய­லு­மையில் பாதிப்பை ஏற்­ப­டுத்­தக்­கூடும்“ என்று எச்­ச­ரிக்கை செய்­தி­ருக்­கிறார்.
கடந்த 15 ஆண்­டு­க­ளாக ஐ.நா அமை­திப்­ப­டைக்கு, இலங்கைப் படை­யினர் சுழற்சி முறையில் அனுப்பி வைக்­கப்­பட்டு வரு­கின்­றனர்.
மேற்கு சகா­ராவில், 4 பேர், மத்­திய ஆபி­ரிக்க குடி­ய­ரசில், 117 பேர், மாலியில் 203 பேர், லெப­னானில், 149 பேர், தென்­சூ­டானில் 173 பேர், அபேய் பிராந்­தி­யத்தில் 6 பேர் என மொத்தம் 652 இலங்கைப் படை­யினர் ஐ.நா அமை­திப்­ப­டையில் தற்­போது பணி­யாற்­று­கின்­றனர்.
ஐ.நா அமை­திப்­ப­டையில் 5000 இலங்கைப் படை­யி­னரை சேர்த்துக் கொள்­வது என்­பது தற்­போ­தைய அர­சாங்­கத்­தி­னதும், ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்­க­வி­னதும் இலக்­காக இருந்­தது. ஆனால், போர்க்­குற்­றச்­சாட்­டு­களால், அது முடி­யாமல் போனது.
சில ஆண்­டு­க­ளுக்கு முன்னர், ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யினால் கொண்டு வரப்­பட்ட, மனித உரிமை பதி­வுகள் தொடர்­பான ஆய்வுப் பொறி­முறை இலங்கைப் படை­யி­ன­ருக்கு கடு­மை­யான நெருக்­க­டி­களை ஏற்­ப­டுத்­தி­யது.
மாலி, தென்­சூடான் போன்ற பல நாடு­க­ளுக்கு மேல­திக படை­யி­னரை அனுப்பும் வாய்ப்­புகள் இருந்­த­போதும், ஏற்­க­னவே அங்­கி­ருந்து திரும்பும் படை­யி­ன­ருக்குப் பதி­லாக, வேறு படை­யி­னரை அனுப்­பு­வதே சிர­ம­மான காரி­ய­மாக மாறி­யி­ருக்­கி­றது.
பலத்த இழு­ப­றி­க­ளுக்குப் பின்னர் கடந்த மாதம் 61 படை­யி­னரை தென்­சூ­டா­னுக்கு அனுப்­பி­யி­ருந்­தது இரா­ணுவம். அவர்­களில் பெரும்­பா­லானோர் மருத்­துவப் படைப்­பி­ரிவைச் சேர்ந்­த­வர்கள் தான் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
படை­யி­னரின் தனிப்­பட்ட மனித உரிமை பதி­வுகள் ஆய்வு செய்­யப்­படும் இறுக்­க­மான முறை­யி­னாலும், ஐ.நா அறிக்­கை­களில் போர்க்­குற்றம் அல்­லது மீறல்­களில் ஈடு­பட்­ட­தாக குற்­றம்­சாட்­டப்­பட்ட படை­ய­ணி­களைச் சேர்ந்­த­வர்கள் தெரி­வு­களில் ஒதுக்­கப்­ப­டு­வ­தாலும், ஐ.நா அமை­திப்­ப­டையில் வாய்ப்பைப் பெறு­வதில் இலங்கைப் படை­யினர் கடும் நெருக்­க­டி­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.
இந்த நெருக்­கடி, புதிய இரா­ணுவத் தள­ப­தியின் நிய­ம­னத்­தினால் இன்னும் மோச­ம­டையும் என்ற எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த எச்­ச­ரிக்கை சாதா­ர­ண­மாக விடுக்­கப்­ப­ட­வில்லை. ஐ.நாவின் உயர் ஆணை­யா­ள­ரினால் விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
ஐ.நா அமை­திப்­ப­டையில் பணி­யாற்றும் நாடு என்ற வகையில், இலங்­கையின் இரா­ணுவ மறு­சீ­ர­மைப்பு மற்றும், ஏனைய ஒத்­து­ழைப்­புகள், உத­வி­களை இலங்கை பெற்று வரு­கி­றது. போர்க்­குற்­றச்­சாட்டு சுமத்­தப்­படும் தள­பதி ஒரு­வரின் தலை­மையில் இருக்கும் இரா­ணு­வத்­துடன், ஐ.நாவினால், இத்­த­கைய உத­விகள் ஒத்­து­ழைப்­பு­களை பேண முடி­யாது.
அவ்­வாறு பேண முயற்­சித்­தாலோ, விட்­டுக்­கொ­டுப்­பு­களை மேற்­கொண்­டாலோ, அது ஐ.நாவின் நடை­மு­றை­க­ளுக்கு மாறாக அமைந்து விடும். குற்­றச்­சாட்­டு­களை கடந்து செல்­கி­றது ஐ.நா என்ற அவப்­ப­ழிக்கு ஆளாக நேரிடும். குற்­ற­வா­ளிகள் தப்­பிக்க இட­ம­ளிக்­கி­றது என்ற பழியை எதிர்­கொள்­ளவும் நேரிடும்.
இது­வ­ரையில், ஒட்­டு­மொத்த இலங்கை இரா­ணு­வத்­தையும், ஐ.நா அமைப்­புகள், போர்க்­குற்­ற­மி­ழைத்­த­தாக கருத்தில் கொள்­ள­வில்லை. ஆனால், போர்க்­குற்­ற­மி­ழைத்­த­தாக குற்­றம்­சாட்­டப்­பட்ட ஒரு­வரின் தலை­மையில் இயங்கும் போது, அந்த இரா­ணு­வத்­துடன் உற­வு­களை வைத்துக் கொள்­வ­தற்கு ஐ.நா தயங்கும். இங்கு ஒட்­டு­மொத்த இரா­ணு­வமும் ஒரே­வி­த­மான கண்­ணோட்­டத்­து­ட­னேயே பார்க்­கப்­படும்.
ஐ.நாவின் இந்த கண்­ணோட்டம், தற்­போது ஐ.நா அமை­திப்­ப­டையில் உள்ள இலங்கைப் படை­யி­னரைப் பாதிக்­கா­வி­டினும், அடுத்­த­டுத்த கட்­டங்­களில் பணிக்குச் செல்­ல­வுள்ள இலங்கைப் படை­யி­ன­ருக்­கான வாய்ப்­பு­களில் கடு­மை­யான பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்தும் என்றே எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. அடுத்து, இந்த நிய­ம­னத்­தினால், எதிர்­கொள்­ளப்­படும் முக்­கி­ய­மான சிக்கல், அமெ­ரிக்க - இலங்கை பாது­காப்பு உற­வுகள் தான்.
இந்த நிய­மனம் தொடர்­பாக முதலில் எதிர்ப்பை, கவ­லையை வெளி­யிட்­டது அமெ­ரிக்கா தான். அத்­துடன் இந்த நிய­ம­னத்­தினால், இலங்­கையில் முத­லீ­டுகள் பாதிக்­கப்­படும் என்றும், அமெ­ரிக்­காவின் இரா­ணுவ உற­வுகள் பாதிக்­கப்­படும் என்றும் இரா­ஜாங்கத் திணைக்­களப் பேச்­சாளர் ஒருவர் கூறி­யி­ருந்தார்.
2015ஆம் ஆண்­டுக்குப் பின்னர் இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான இரா­ணுவ உற­வுகள் முன்­னெப்­போதும் இல்­லா­த­ள­வுக்கு வளர்ச்­சி­ய­டைந்­தி­ருந்­தன. இந்த வேக­மான வளர்ச்­சியில் ஒரு சடு­தி­யான வீழ்ச்­சியை இந்த நிய­மனம் ஏற்­ப­டுத்தப் போகி­றது. 2008ஆம் ஆண்டு நடை­மு­றைக்கு வந்த அமெ­ரிக்­காவின் லெஹி சட்­டத்­தி­ருத்­தத்­துக்கு அமைய, போர்க்­குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்ட- போர்க்­குற்­றங்­களில் ஈடு­பட்­டமை பற்­றிய நம்­ப­க­மான குற்­றச்­சாட்­டுகள் உள்ள வெளி­நாட்டு ஆயு­தப்­ப­டை­க­ளுடன், அமெ­ரிக்க இரா­ணுவம் உற­வு­களை வைத்துக் கொள்ள முடி­யாது.
இதனால் தான், ஐ.நா அறிக்­கை­களில் போர்க்­குற்­றச்­சாட்­டுகள் சுமத்­தப்­பட்ட இலங்கை இரா­ணு­வத்தின் 53, 55, 58, 59ஆவது படைப்­பி­ரி­வு­க­ளுடன், அமெ­ரிக்கா இரா­ணுவ உற­வு­களைத் தவிர்த்து வந்­தி­ருக்­கி­றது.
இப்­போது, போர்க்­குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்ட, 58 ஆவது டிவி­சனின் கட்­டளை அதி­கா­ரி­யாக இருந்­தவர், ஒட்­டு­மொத்த இரா­ணு­வத்­தி­னதும் தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.
இதனால், அவர் மீதுள்ள போர்க்­குற்­றச்­சாட்டு, இப்­போது, ஒட்­டு­மொத்த இரா­ணு­வத்தின் மீதான குற்­றச்­சாட்­டாக மாறும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. எனவே, இலங்கை இரா­ணு­வத்­து­ட­னான அமெ­ரிக்­காவின் ஒட்­டு­மொத்த பாது­காப்பு உற­வு­களும் சீர்­கு­லையும் என்று கூறப்­ப­டு­கி­றது
அமெ­ரிக்­காவின் இரா­ணுவ உற­வுகள் முறிக்­கப்­ப­டு­வதால், இயல்­பா­கவே சீனா, ரஷ்யா போன்ற நாடு­களின் கத­வுகள் இலங்கை இரா­ணு­வத்­துக்­காக திறக்­கப்­படும்.
ஆனாலும், அமெ­ரிக்­கா­வு­ட­னான உற­வு­களின் இழப்பு எவ்­வா­றா­ன­தாக இருக்கும் என்­பது இலங்கை இரா­ணு­வத்­துக்கு நன்றாகவே தெரியும். ஏனென்றால், விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான ஆயுதங்கள், ரஷ்யா, சீனாவிடம் இருந்து கிடைத்திருக்கலாம். அதற்கான யுக்திகள், பயிற்சிகள் புலனாய்வுத் தகவல்கள் எல்லாமே அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்டவை தான்.
அவ்வாறான ஒரு கோணத்தில் இருந்து பார்க்கும் போது, இலங்கை இராணுவத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு கேள்விக்குள்ளாவது பெரும் பாதிப்பாகவே இருக்கும்.
இதைவிட, போர்க்குற்றம்சாட்டப்பட்டவரான இலங்கை இராணுவத் தளபதி எல்லா நாடுகளாலும், வரவேற்கப்பட முடியாத நிலை ஒன்றும் உருவாகும். மேற்குலக நாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணத்தையும் கூட அவரால் மேற்கொள்ள முடியாதிருக்கும். இவ்வாறான ஒரு நிலைமை, இலங்கையின் எந்த இராணுவத் தளபதிக்கும் இதுவரை ஏற்பட்டதில்லை.
மொத்தத்தில், ஒரு இராணுவத் தளபதியின் நியமனம், ஒட்டுமொத்த இராணுவம் தொடர்பான பல்வேறு நாடுகள், ஐ.நாவினது நிலைப்பாடுகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் முதல் சந்தர்ப்பமாக இது அமைந்திருக்கிறது.
தெரிந்தோ தெரியாமலோ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புலி வாலைப் பிடித்து விட்டார். இனி அவர் வாலை இறுகப் பிடித்தாலும் சரி, கையை விட்டாலும் சரி என்ன நடக்கும் என்பது, அவரது கையில் இல்லை.


- கார்வண்ணன் -  நன்றி வீரகேசரி 











No comments: