தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு யாருக்கு..?: சூடு பிடிக்கும் தேர்தல் களம்


ஆட்சி மாற்­றத்­துக்­காக 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அளித்­தி­ருந்த ஆத­ரவின் மூலம் நன்­மைகள் விளை­ வ­தற்குப் பதி­லாகக் குழப் ­ப­க­ர­மான நிலை­மையை உரு­வாக்­கு­வ­தற்கே வழி­யேற்­ப ­டுத்தி இருந்­தது. அந்த வகையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வழங்கியிருந்த உறு­தி­யான – நிபந்­த­னை­ யற்ற ஆத­ரவு விழ­லுக்கு இறைத்த நீராகி உள்­ளது. 
ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்கள் யாரை ஆத­ரிப்­பது? யார் தமிழ் மக்­க­ளுக்கு விசு­வா­ச­மாகச் செயற்­ப­டு­வார்கள்? யாரைத் தெரிவு செய்தால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிடைக்கும்? என்ற கேள்­விகள் சாதா­ரண வாக்­கா­ளர்­களின் மனங்­களைக் குடைந்து கொண்­டி­ருக்­கின் ­றன. 
ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் தேர்தல் திணைக்­க­ளத்­திடம் இருந்து அதி­கா­ர­பூர்­வ­மான அறி­வித்தல் வெளி­யி­டப் ப­டாத போதிலும், அந்தத் தேர்தல் நாட்டு மக்கள் மத்­தியில் பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பதே இதற்கு முக்­கிய காரணம். 
பெரும்­பான்மை இன மக்­க­ளிலும் பார்க்க, சிறு­பான்மை தேசிய இன மக்­க­ளுக்கு அடுத்த ஜனா­தி­பதி குறித்த அக்­க­றையும் கரி­ச­னையும் அதி­க­மாக இருப்­பதும் இந்த மனக்­கு­டைச்­ச­லுக்கு மற்­று­மொரு முக்­கிய கார­ண­மாகும்.
ஜனா­தி­ப­தி­யாக வரு­பவர் அதி­காரம் உள்­ள­வ­ரா­கவும், அதே­வேளை, அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களில் செல்­வாக்கு செலுத்­து­ப­ வ­ரா­கவும் இருப்பார் என்ற அனு­மா­னமே, தமிழ் மக்கள் வரப்­போ­கின்ற ஜனா­தி­பதி குறித்து அக்­கறை கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றது.  
ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் அர­சியல் தலை­மைகள் என்ன முடிவை எடுக்கப் போகின்­றன என்­ப­தற்குத் தெளி­வான சமிக்­ஞைகள் இன்னும் வெளிப்­ப­ட­வில்லை. ஐக்­கிய தேசிய கட்­சியின் சார்பில் தெரி­வா­கின்ற வேட்­பா­ள­ருக்கு சாத­க­மா­கவே அந்த முடிவு இருக்கும் என்ற தக­வல்கள் அடி­ப­டு­கின்­றன. ஆயினும் அவை உறு­திப்­ப­டுத்­தப்­ப­டா­த­வை­யா­கவே உள்­ளன.






நிலை­மைகள் நேர்­சீ­ராக வேண்டும்
தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன், ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பார்க்க, உறு­தி­யற்­றி­ருக்­கின்ற அர­சி­யலை உறு­தி­ பெறச் செய்­வ­தற்­காக புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கே முன்­னு­ ரிமை அளிக்­கப்­பட வேண்டும் என்ற கருத்தை வெளி­யிட்­டி­ருக்­கின்றார். 

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பிர­தி­நி­தி­க­ளு­ட­னான சந்­திப்­பொன்­றின்­போது அவர் இந்தக் கருத்தை வலி­யு­றுத்தி வெளி­யிட்­டி­ருந்தார். 
அவர் அவ்­வாறு கோரி­ய­தற்கு முக்­கிய கார­ணங்கள் இருக்­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் ஜன­நா­ய­கத்தைப் பாது­காத்து நல்ல ஆட்­சி­யொன்றை உரு­வாக்க வேண்டும் என்ற கோரிக்­கையைத் தலை­யாய நிலைப்­பா­டாகக் கொண்டு அதற்­கான உறு­தி­மொ­ழி­களை வழங்கி ஆட்­சி யைக் கைப்­பற்றி இருந்­தது. 
ஆனால் எதிர்பார்த்த அளவில் காரி­யங்­களை முன்­னெ­டுத்து தனது பெய­ருக்கு ஏற்ற வகையில் ஆட்­சியை நல்ல ஆட்­சி­யாகக் கொண்டு நடத்த அது தவ­றி­விட்­டது. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்ட போதிலும், அந்த நட­வ­டிக்­கைகள் ஆமை வேகத்தில் நகர்ந்து அப்­ப­டியே ஸ்தம்­பித்து நின்­று­விட்­டன. 
ஆட்­சியில் குழப்­பங்­களும், அர­சி­யலில் இழு­ப­றி­களும் ஏற்­பட்டு, போட்­டி­களும் உரு­வாகி இருந்­தன. இதனால் உறு­தி­யற்ற அர­சியல் நிலை­மைக்கே அவை வழி­வ­குத்­தி­ருந்­தன. நல்­லாட்­சிக்­காக சர்­வா­தி­காரப் போக்­கிற்கு வழி­யேற்­ப­டுத்தி இருந்த ஜனா­தி­ப­தியின் வரை­ய­றை­யற்ற அதி­கா­ரங்­களை 19ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தச் சட்­டத்தின் மூலம் இல்­லாமல் செய்­தி­ருந்த போதிலும், தேர்தல் காலத்தில் வழங்­கிய வாக்­கு­று­தி­களை ஜனா­தி­பதி நிறை­வேற்­ற­வில்லை. அதே­போன்று பிர­த­மரும் அவற்றை நிறை­வேற்­ற­வில்லை.
இரு­வ­ரி­டை­யேயும் ஏற்­பட்ட அதி­காரப் போட்­டியும் அதனால் எழுந்த அர­சியல் நிலை­மை­களும் நல்­லாட்சி நில­வு­வ­தற் குப் பதி­லாக நாட்டில் குழப்­ப­க­ர­மான நிலை­மை­க­ளையே உரு­வாக்கி இருக்­கின்­றன. இத்­த­கைய பின்­பு­லத்­தில்தான் ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பார்க்க புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கி நிலை­மை­களை நேர்­சீ­ராக்­கிய பின்னர் தேர்­தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்­கையை தமிழ்த் ­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் முன்­வைத்­தி­ருந்தார் என்று எண்ணத் தோன்­று­கின்­றது.
ஆனாலும் தேர்­த­லுக்­கான முன்­னு­ரி­மையே அரச தரப்பில் முனைப்புப் பெற்­றி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதித் தேர்­த­லி­லேயே அனைத்து அர­சியல் கட்­சி­களும் கவ­னத் தைக் குவித்­தி­ருக்­கின்­றன. 
ஜனா­தி­பதி வேட்­பா­ளரைத் தெரிவு செய்­வதில் ஏற்­பட்ட பர­ப­ரப்­பான நிலை­மைக்கும் இதுவே காரணம்.  


துணி­க­ர­மான நிலைப்­பாட்டைக் காண­வில்லை
வழ­மைக்கு மாறாக இம்­முறை அர­சியல் கட்­சி­களின் இரண்டாம் நிலையிலுள்ள தலை­வர்கள் மத்­தியில் இருந்தே வேட்­பா­ளர்­களைத் தெரிவு செய்­வதில் ஜே.வி.பி. தவிர்ந்த ஏனைய இரண்டு பிர­தான கட்­சி­க­ளுக்கும் ஏற்­பட்­டுள்ள நிலை­மையும் வரப்­போ­கின்ற ஜனா­தி­பதி குறித்த சிறு­பான்மை இன மக்­களின் நம்­பிக்­கை­யீ­னங்­க­ளுக்கும் ஒரு முக்­கிய கார­ண­மாகி உள்­ளது. 

வேட்­பா­ளர்­க­ளாகத் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள பொது­ஜன பெர­மு­னவின் கோத்­த­பாய ராஜ­பக் ஷ­வும் ­சரி, ஜே.வி­.பி.யின் அனு­ர­கு­மார திசா­நா­யக்­க­வும் ­சரி, சிறு­பான்மை இன மக்­க­ளு­டைய அர­சியல் நலன்­களில் அவர்­க­ளுக்கு சாத­க­மான நிலைப்­பாட்டை எடுக்­கின்ற அர­சியல் போக்­கு­டை­ய­வர்­க­ளாகக் காணப்­ப­ட­வில்லை. 
கோத்­த­பாய ராஜ­பக் ஷ சிங்­களத் தேசி­யத்தில் தீவிர பற்­று­டை­யவர். அதனால் அவர் சிறு­பான்மை இன மக்­களின் நலன்­களில் தற்று­ணி­புடன் அவர்­க­ளுக்கு சாத­க­மான நிலைப்­பாட்டை எடுப்பார் என்று எதிர்­பார்க்க முடி­யாது. 
ஆயுதக் கிளர்ச்­சியில் ஈடு­பட்­டி­ருந்த ஜே.வி.­பி.யும் தமிழ் மக்­களின் உரி­மை­களில் நியா­ய­மான அர­சியல் கொள்கை வழி­நின்று சிந்­திப்­ப­தா­கவோ அல்­லது அந்த வகையில் செயற்­ப­டு­கின்ற ஓர் அர­சியல் சக்­தி­யாகத் தென்­ப­ட­வில்லை.
யுத்த காலத்தில் பேரி­ன­வாத போக்கைக் கொண்­டி­ருந்த ஜே.வி­.பி.யே இலங்கை –இந்­திய ஒப்­பந்­தத்தின் கீழ் தற்­கா­லி­க­மாக இணைக்­கப்­பட்­டி­ருந்த வடக்­கையும் கிழக்­கையும் இரு ­வேறு மாகா­ணங்­க­ளாகப் பிரிப்­ப­தற்கு நீதி­மன்­றத்தை நாடி வெற்றி பெற்­றி­ருந்­தது.  
இட­து­சாரிப் போக்­கு­டை­ய­தாகக் காணப்­பட்ட போதிலும், ஜே.வி.பி. அந்தக் கொள்கை வழியில் செயற்­ப­டு­கின்ற வல்­லமை கொண்­ட­தல்ல. பேரி­ன­வாதப் போக்கும், சிங்­கள பௌத்த தேசி­யத்தைத் தழுவிச் செல்­கின்ற ஒரு கொள்கை நிலைப்­பாட்­டை­யுமே அது கொண்­டி­ருக்­கின்­றது. 
இத­னால்தான் சிறு­பான்மை மக்­களின் பிரச்­சி­னைகள் குறித்து அதன் வேட்­பாளர் அனுர குமார திசா­நா­யக்க துணி­க­ர­மான ஒரு நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்த முடி­யா­த­வ­ராகத் திகழ்­கின்றார்.


வேடிக்­கை­யான நிலைப்­பாடு
ஐக்­கிய தேசிய கட்சி ஜனா­தி­ப­திக்­கான வேட்­பா­ளரைத் தெரிவதில் ஏற்­பட்­டுள்ள இழு­பறி நிலை­யா­னது, அந்தக் கட்­சிக்குள் பிள­வுகள் ஏற்­ப­டுத்தி விடுமோ என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது. 

ஆனாலும், தானே அந்தக் கட்­சியின் வேட்­பாளர் என சுய பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டுள்ள சஜித் பிரே­ம­தா­ச­விடம் இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு என்ன என்ற கேள்­விக்கு உறு­தி­யான நிலைப்­பாட்டைக் காண முடி­ய­வில்லை.
ஒரு­மித்த நாட்­டுக்குள் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிப்­பதே தன்­னு­டைய நோக்கம் என அவர் கூறி­யுள்ளார். ஜனா­தி­ப­தி­யாகத் தன்னைத் தெரிவு செய்தால் ஆறு மாதங்­க­ளுக்குள் இத்­த­கைய தீர்வைத் தர­ மு­டியும் என்­பது அவ­ரு­டைய நிலைப்­பாடு. 
வட்­டுக்­கோட்டை தீர்­மா­னத்தின் மூலம் முன்­வைக்­கப்­பட்ட தனி­ நாட்டுக் கோரிக்­கைக்­கா­கவே 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­ட­ணிக்கு தமிழ் மக்கள் தமது அமோ­க­மான ஆத­ரவை வெளிப்­ப­டுத்தி இருந்­தது. அதன் அடிப்­ப­டை­யி­லேயே ஆயுதப் போராட்டம் எழுந்­தது. இறுதி வரை­யிலும் அதற்­காக விடு­த­லைப்­பு­லிகள் ஆயு­த­மேந் திப் போரா­டி­னார்கள். 
ஆனால் 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு வந்­ததன் பின்னர் தமிழ் மக்கள் ஐக்­கிய இலங்­கைக்குள் அர்த்­த­முள்ள ஓர் அர­சியல் தீர்வை வேண்டி நிற்­கின்­றனர். யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்­ததும், அர­சியல் தீர்வு ஒன்றைக் காண்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ நிறை­வேற்று அதி­கா­ரத்தின் உச்ச நிலை­மையக் கொண்­டி­ருந்த போதிலும், அர­சியல் தீர்வு காண­வில்லை. 
அர­சியல் தீர்வு காண்­ப­தென்­பதை ஓர் அர­சியல் விளை­யாட்­டா­கவும், தமிழ் மக்­களின் ஆத­ரவைத் திரட்­டு­வ­தற்­கா­னதோர் உத்­தி­யா­க­வுமே அவர் பயன்­ப­டுத்தி இருந் தார். தமிழ் மக்­களின் அர­சியல் தீர்­வுக்­கான அர­சியல் ரீதி­யான ஆவலை, அவர்­களின் ஆத்­மார்த்­த­மான தேவையை அவர் புரிந்து கொள்­ள­வில்லை. புரிந்துகொள்ள முயற்­சிக்­கவும் இல்லை. 
இத்­த­கைய பின்­பு­லத்­தில்தான் அவர் இரா­ணுவ மய­மான கடு­மை­யான அர­சியல் போக்கைக் கொண்­டுள்ள தனது சகோ­தரர் கோத்­த­பாய ராஜ­பக் ஷவை ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்கி உள்ளார். 
தனி ­நாட்டுக் கோரிக்­கையில் இருந்து இறங்கி, அர்த்­த­முள்ள அர­சியல் தீர்வை வேண்டி நிற்­கின்ற தமிழ் மக்­க­ளிடம் தன்னை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய் தால் பத­விக்கு வந்­ததும் ஆறு மாதங்க­ளுக்குள் ஐக்­கிய இலங்­கைக்குள் அதி­கா­ரங்­களைப் பகிர்ந்­த­ளிப்பேன் என சஜித் பிரே­ம­தாச கூறி­யி­ருப்­பது வேடிக்­கையே அன்றி வேறொன்­று­மில்லை. 


தமிழ் மக்­களின் நிலைப்­பாடு
ஒரு­மித்த நாட்­டுக்­குள்­ளேதான் தமிழ் மக்­களும் தீர்வைக் கோரி நிற்­கின்­றார்கள் என்­பது சாதா­ரண நடை­முறை உண்மை. அதன் அடிப்­ப­டை­யில்தான் யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்னர் வடக்­கிற்கும் கிழக்­கிற்கும் வெவ்வேறு மாகா­ண­ சபைத் தேர்­தல்கள் நடத்­தப்­பட்டு, அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்ட நிலையில் ஆட்சி நிர்­வாகம் நடை­பெற்று வரு­கின்­றது. கொள்கை ரீதி யில் மாகாண மட்­டத்தில் அதி­கா­ரங்கள் பகிர்ந்­த­ளிக்­கப்­பட்­டுள்­ளன என்­பதும் சாதா­ரண நடை­முறை அர­சியல் யதார்த்தம். 

மாகா­ணங்­க­ளுக்­கான அதி­கா­ரங்கள் தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்டில் அர்த்­த­முள்­ள­வை­க­ளாக இல்லை என்­ப­தையும், அவர்கள் பிராந்­திய ரீதியில் வடக்கும் கிழக்கும் இணைந்­ததோர் அர்த்­த­முள்ள அதி­கா­ரங்­களைக் கொண்ட நிர்­வாக அல­கையே கோரி ­நிற்­கின்­றனர் என்­ப­தையும் பேரின அர­சியல் கட்­சி­களும் அவற்றின் வேட்­பா­ளர்­களும் நன்கு புரிந்து கொள்ள வேண்­டி­யது அவ­சியம். 
யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற பாதிப்­பு­க­ளுக்கும் அநி­யா­யங்­க­ளுக்கும் நீதி வழங்க வேண்டும். அர­சியல் ரீதி­யாக இழப்­பீ­டாக நிவா­ரணம் வழங்க வேண்டும். தமது எதிர்­கால வாழ்க்கை சமூக, பொரு­ளா­தார, அர­சியல் ரீதி­யாக மீளப் பெற முடி­யாத வகையில் அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட ஓர் அர­சியல் தீர்வைத் தர வேண்டும் என்­பதே  அவர்­களின் அர­சியல் அபி­லாஷை.
சிங்­கள மக்­களை அவர்கள் தமது சக குடி­மக்­க­ளா­கவே கரு­து­கின்­றார்கள். பேரின அர­சியல் கட்­சி­க­ளையோ அல்­லது பேரின அர­சி­யல்­வா­தி­க­ளையோ அவர்கள் தமது எதி­ரி­க­ளாகக் கரு­த­வில்லை. அவர்கள் தமது அர­சியல் அபி­லா­ஷைக­ளைப் புரிந்து கொண்டு இணைந்து வாழத்­தக்க நிரந்­த­ர­மா­னதோர் அர­சியல் நிலைப்­பாட்டை உரு­வாக்க வேண்டும் என்­ப­தையே எதிர்­பார்க்­கின்­றார்கள். 
இந்த எதிர்­பார்ப்­பு­களின் நியா­யத்­தன்­மை­யையும் அவற்றின் ஆழத்­தையும் அர­சியல் ரீதி­யான உறு­தி­யான உணர்­வையும் பேரின கட்­சி­களைச் சேர்ந்த வேட்­பா­ளர்கள் உளப்­பூர்­வ­மாக உணர்ந்­தி­ருக்க வேண்­டி­யதும் அவ­சியம். 
அத்­த­கைய அர­சியல் உணர்வின் அடிப்­ப­டையில் பேரின கட்­சி­களும் அவற்றின் வேட்­பா­ளர்­களும் சிறு­பான்மை இன மக்கள் தொடர்பில் தங்­க­ளு­டைய நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்த வேண்டும். அத்­த­கைய வெளிப்­பாடு உண்­மை­யான, நேர்­மை­யான உறு­திப்­பாட்டைக் கொண்­ட­தா­க அமைய வேண்­டி­யதும் முக்­கியம். ஆனால் தற்­போ­தைய நாட்டின் அர­சியல் சூழலில் அவர்­க­ளிடம் இருந்து அத்­த­கைய அர­சியல் நிலைப்­பாடு வெளிப்­ப­டுமா என்­பது சந்­தே­கமே.


நம்­பிக்­கையை விதைக்க வேண்டும்

யுத்­தத்தில் பெற்ற வெற்­றியை அர­சியல் முத­லீ­டாக்­கிய ராஜ­பக் ஷாக்கள் இனப்­பி­ரச்­சி­னைக்கு உறு­தி­யா­னதோர் அர­சியல் தீர்வைக் காணத் தவ­றி­விட்­டார்கள். அவர்­க­ளுக்குப் பின்னர் 2015ஆம் ஆண்டு நல்­லாட்­சியை உரு­வாக்­கிய மைத்­திரி – ரணில் கூட்டு அமைப்பும் தமிழ் மக்­க­ளுக்கு அளித்த தேர்தல் கால வாக்­கு­று­தி­க­ளின்­படி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணத் தவ­றி ­விட்­டது. 
ஆட்சி மாற்­றத்­துக்­காக 2015ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் தமிழ் மக்கள் அளித்­தி­ருந்த ஆத­ரவின் மூலம் நன்­மைகள் விளை­ வ­தற்குப் பதி­லாகக் குழப்­ப­க­ர­மான நிலை­மையை உரு­வாக்­கு­வ­தற்கே வழி­யேற்­ப­டுத்தி இருந்­தது. அந்த வகையில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வழங்கியிருந்த உறு­தி­யான – நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு விழ­லுக்கு இறைத்த நீராகி உள்­ளது. 


என்ன செய்­யலாம்.......?

அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வரு­பவர் எந்த வகை­யிலும் நம்­பிக்­கைக்கு உரி­ய­வ­ராக இருக்­க­ மாட்டார் என்ற அர­சியல் ரீதி­யான மனப்­ப­தி­வையே தமிழ் மக்கள் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இந்த நிலையில் நம்­பிக்­கை­யற்­ற­வர்கள் ஜனா­தி­ப­தி­யா­னால் என்ன நடக்கும் என்ற கேள்­வியும், அந்த நம்­பிக்­கை­யற்­ற­வர்­களைத் தெரிவு செய்­கின்ற ஜனா­தி­பதித் தேர்­தலைத் தொடர்ந்து வரு­கின்ற பொதுத் தேர்­தலில் ஆட்­சியைக் கைப்­பற்­றுகின்ற தரப்பும், ஜனா­தி­ப­தியின் போக்­கி­லேயே அர­சி­யலை முன்­னெ­டுக்கும் என்ற ஐயப்­பாடும் தமிழ் மக்கள் மனங்­களில் நிறைந்­தி­ருக்­கின்­றன. 
இந்த நிலை­மையில் ஜனா­தி­பதி வேட்­பா­ளர்கள் தாங்கள் முன்­வைக்­கின்ற நிலைப் ­பாட்டை நிறை­வேற்­று­ப­வர்­க­ளாக இருப்­பார்கள் என்­பதை உறு­திப்­ப­டுத்­த உரிய சமிக்­ஞை­யாக ஏதா­வது ஒரு நட­வ­டிக்­கையை அவர்கள் முன்­னெ­டுக்க வேண்டும். அப்­போ­துதான் தமிழ் மக்­களின் மனங்­களில் நம்­பிக்­கையை விதைக்க முடி யும். தொடர்ந்து தேர்­தலில் அவர்­க­ளு­டைய ஆத­ரவைப் பெறவும் முடியும். 
ஐக்­கிய தேசிய கட்சி பாரா­ளு­மன்ற பலத்தின் மூலம் அதி­காரம் வாய்ந்­த­தாக இருக்­கின்­றது. அதே­வேளை, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால பொது­ஜன பெர­மு­ன­வுடன் கொண்­டுள்ள மென்­போக்­கான அர­சியல் அணு­கு­மு­றையின் மூலம் ராஜ­பக் ஷாக்கள் செல்­வாக்கு பெற்­றி­ருக்­கின்­றார்கள். ஆகவே ஜனா­தி­ப­தியின் அதி­கார பலத்தைக் கொண்டு அவர்­களும் தேர்தல் காலத்­துக்­கான ஒரு நல்­லெண்ண சமிக்­ஞையை வெளிப்­ப­டுத்த முடியும். அதற்­கான வாய்ப்­பான நிலை­மையும் காணப்ப­டு­கின்­றது. தமிழ்...
இத்­த­கைய நல்­லெண்ண சமிக்­ஞை­யாக அர­சியல் கைதிகள் அனை­வ­ரையும் பொது­மன்­னிப்­ப­ளித்து உட­ன­டி­யாக விடு­தலை செய்­வது – இரா­ணு­வத்தின் பிடியிலுள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­வித்து அவர்­களின் மீள் குடி­யேற்­றத்­துக்கு வழி­செய்­வது –
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இறைமையுள்ள அரசு என்ற வகையில் பொறுப்பேற்று அவர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்துவது, அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் அல்லது எங்கு, எவ்வாறு, என்ன நோக்கத்துக்காக வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற உண்மையான விபரத்தை வெளிப் படுத்துவது – 
என்ற இது போன்றவற்றைச் செய்து தமது நிலைப்பாட்டை தமிழ் மக்களுக்கு உறுதிப்படுத்த முடியும். பேரின அரசியல் கட்சிகளினாலும், பேரின அரசியல்வாதிகளினாலும் இது செய்யத்தக்கது. இவற்றைச் செய்வதற்குரிய அழுத்தத்தை உரிய அரசியல் வழிகளின் மூலம் பிரயோகிக்க வேண்டியது தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைமையினதும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளினதும் கடமையும் பொறுப்புமாகும். 
சர்வதேசத்தின் உதவியின் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று சர்வதேசத்தின் மீது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் சர்வதே சத்தையும் ஐ.நா.வையும் மத்தியஸ்தமாகக் கொண்டு ஓர் உடன்பாட்டின் மூலம் ஒரு வேட்பாளருக்கு ஆதரவளிக்கலாம். அந்த ஆதரவின் மூலம் அவரை ஜனாதிபதியாக்க முடியும். அவர் பதவிக்கு வந்ததும், இது கால வரையிலும் நடந்ததைப் போலல்லாமல் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு சர்வதேசமும் ஐ.நா.வும் உறுதியான வலுவான அழுத்தத்தைப் பிரயோகிக்க வேண்டும். 
இத்தகைய வழிகளின் மூலம் மட்டுமே விடாக்கண்டன் கொடாக்கண்டன் போக்கில் செயற்படுகின்ற பேரின அர சியல் கட்சிகளின் வேட்பாளர்களை பிரச்சினைகளுக்குத் தீர்வு காணச் செய்ய முடியும். 
இதுபற்றி சம்பந்தப்பட்ட அரசியல் தரப்பினர் சிந்திப்பார்களா?



 - பி.மாணிக்­க­வா­சகம் -  நன்றி வீரகேசரி 




No comments: