பண்­பட்ட ஊடகவியளார் மொறா­யஸின் மறைவு ஈடு­செய்ய முடி­யாத இழப்பு


29/08/2019 எம்­முடன் பத்­தி­ரி­கைத்­து­றையில் பணி­யாற்­றி­ய­வர்­களில் மிகுந்த அமை­தி­யா­ன­வர்­க­ளையும், எந்தப் பிரச்­சி­னை­யையும் பதற்­றப்­ப­டாமல் நிதா­ன­மாக அணு­கு­ப­வர்­க­ளையும் கூறுங்கள் என்று கேட்டால் நண்பர் அகஸ்டின் மொறா­யஸை தவிர வேறு எவரும் முதலில் நினை­விற்கு வர­மாட்­டார்கள். அத்­த­கைய அமை­வ­டக்­க­மான, பண்­பட்ட ஒரு மூத்த ஊட­க­வி­ய­லாளர் எம்­மத்­தி­யி­லி­ருந்து மறைந்து விட்டார்.
கடந்த திங்­கட்­கி­ழமை இரவு இடம்­பெற்ற அந்த மரணம் தமிழ் ஊட­கத்­து­றைக்கு ஒரு ஈடு­செய்ய முடி­யாத இழப்பு என்று சொல்­வ­திலும் பார்க்க, ஈடு­செய்­யப்­பட வேண்­டிய இழப்பு என்­றுதான் கூற­வேண்டும். அத்­த­கைய ஒரு பண்­பா­ளனை எம்­மத்­தியில் நாம் கொண்­டி­ருக்க வேண்டும்.

வீர­கே­ச­ரியில் ஒரு ஓவி­ய­ராக 1960 களின் நடுப்­ப­கு­தியில் இளம்­வ­யதில் இணைந்­து­கொண்ட நண்பர் மொறாயஸ், சுமார் அரை­நூற்­றாண்டு கால­மாகப் பணி­யாற்­றினார். அவ­ரது சேவைக்­கா­லத்தில் ஓவி­யத்­து­றைக்குப் புறம்­பாக ஊட­கத்­து­றையில் பல்­வேறு பிரி­வு­க­ளிலும், குறிப்­பாக சினி­மாத்­துறை, சிறு­க­தைகள், கார்ட்­டூன்கள், கலை இலக்­கிய விமர்­சனம் என்று  தனது திற­மையை வெளிக்­காட்டி சிறந்த ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளாக வள­ர­வேண்டும் என்ற ஆர்வம் கொண்­ட­வர்­க­ளுக்கு முன்­னு­தா­ர­ண­மாக செயற்­பட்டார்.
சினி­மாத்­து­றையின் மீதான ஆர்வம் நண்பர் மொறா­ய­ஸுக்கு குடும் பப் பின்­ன­ணி­யி­லி­ருந்தே வந்த ஒன்று. இலங்­கையின் சிங்­கள சினி­மாத்­து­றையில் ஒளிர்­விட்டுப் பிர­கா­சித்த தமிழ் ஆளு­மை­களில் முக்­கி­ய­மான ஒரு­வ­ராக விளங்­கிய ஒளிப்­ப­தி­வா­ளரும், இயக்­கு­ந­ரு­மான காலஞ்­சென்ற லெனின் மொறாயஸ் இவரின் மூத்த சகோ­த­ர­ராவார். அவரின் சினி­மாத்­து­றைப்­பணி நண்பர் மொறாயஸ் மீது பெரும் செல்­வாக்கைச் செலுத்­திய கார­ணத்­தினால் வீர­கே­சரி வார­வெளி­யீட்­டிலும், மித்­திரன் தின­சரி, மித்­திரன் வார­மலர் ஆகி­ய­வற்­றிலும் சினி­மாத்­துறை சிறப்­பம்­சங்­களைக் கையாளும் பொறுப்பை விரும்பி ஏற்­றுக்­கொண்டார். அவ­ரு­டைய அந்தப் பணிக்கு வீர­கே­சரி வார­வெளி­யீட்டின் முன்னாள் ஆசி­ரியர் காலஞ்­சென்ற பொன்.இரா­ஜ­கோபால், மித்­தி­ரனின் ஆசி­ரி­யர்­க­ளான கே.நித்­தி­யா­னந்தன், நேச­மணி, சூரி­ய­கு­மாரன் போன்­ற­வர்­களும் மித்­திரன் வார­ம­லரின் ஆசி­ரி­ய­ராக அப்­போது பணி­யாற்­றிய திரு­மதி.அன்­ன­லட்­சுமி இரா­ஜ­து­ரையும் பெரும் ஊக்­கத்தை அளித்­தார்கள். மொறா­ய­ஸுடன் அவ­ரது ஊட­கத்­துறை வாழ்வு குறித்­துப்­பேசும் சந்­தர்ப்­பங்­களில் எல்லாம் தனது முன்­னேற்­றத்­திற்குப் பெரும் பங்­க­ளிப்புச் செய்த இவர்­களைத் தவ­றாமல் நினை­வு­கூ­ருவார். 
மோனா­லிஸா என்ற புனை பெயரில் அவ­ரது படைப்­புக்கள் எண்ணி மாளாது. பணி­யாற்றும் நிறு­வ­னத்­திற்கு விசு­வாசம் என்றால் அதை நண்பர் மொறா­ய­ஸிடம் இருந்­துதான் கற்­றுக்­கொள்ள வேண்டும்.
சினி­மாத்­துறை சார்ந்த பணி­க­ளுக்கு அப்பால் கலை, இலக்­கி­ய­வா­திகள், நாடகக் கலை­ஞர்கள் என்று பல பிரி­வி­ன­ரு­டனும் நெருக்­க­மான தொடர்­பு­களை ஏற்­ப­டுத்தி, அவர்­க­ளது கலைத்­துறைப் பங்­க­ளிப்­புக்­க­ளுக்குப் பத்­தி­ரிகை வாயி­லாக மிகுந்த ஊக்­கத்தைக் கொடுத்து வந்­தவர் நண்பர் மொறாயஸ். மறைந்த கலை­ஞர்­க­ளு­டைய நினைவு தினங்­களின் போது அவர்­களைப் பற்­றிய நினைவுப் பரவல் கட்­டு­ரை­களைத் தவ­றாது வீர­கே­ச­ரியில் மாத்­தி­ர­மல்ல, ஏனைய பத்­தி­ரி­கை­க­ளிலும் பிர­சு­ரிப்­ப­தற்கு ஏற்­பாடு செய்து வந்­தவர் மொறாயஸ்.
 மறைந்த கலை­ஞர்­களின் நினைவைக் கொண்­டாடும் இந்தப் பணியை மொறா­யஸைப் போன்று ஆழ்ந்த அக்­க­றை­யுடன் வேறு யார் செய்யப் போகின்­றார்கள்?
சினி­மாத்­துறை சிறப்­பம்­சங்­களை செம்­மை­யாகக் கையாண்ட கார­ணத்­தினால் நண்பர் மொறாயஸ் தென்­னிந்­தி­யா­வி­லுள்ள சினி­மாத்­து­றை­யி­ன­ரு­டனும் நெருக்­க­மான தொடர்­பு­களைக் கொண்­டி­ருந்தார். சம­கா­லத்தைப் போன்று தகவல் தொழில்­நுட்பம் பெரும் உச்­சங்­களைக் கொண்­டி­ராத அன்­றைய கால­கட்­டத்­தி­லேயே தென்­னிந்­தி­யா­வி­லி­ருந்து சினி­மாத்­துறை விட­ய­தா­னங்­களைத் துரி­த­மாக வர­வ­ழைத்து வாச­கர்­களின் எதிர்­பார்ப்­புக்­களைத் தன்னால் இயன்­ற­வரை பூர்த்தி செய்தார். பத்­தி­ரி­கைத்­து­றையில் பணி­யாற்­றிய அவ­ரது நண்­பர்கள் பல­ருக்கு கலை­யு­லகின் ஆளு­மை­க­ளுடன் பழ­கு­வ­தற்கு வாய்ப்புக் கிடைத்­தி­ருக்­கு­மென்றால் அதற்குக் கார­ண­கர்த்­தா­வாக விளங்­கி­யவர் நண்பர் மொறாயஸ் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
என்­னு­டைய பத்­தி­ரி­கைத்­துறை வாழ்வில் ஏறத்­தாழ சுமார் 40 வரு­டங்கள் நண்பர் மொறா­ய­ஸுடன் நெருக்­க­மான உறவைப் பேணி­வந்­தி­ருக்­கிறேன். அவ­ரு­டைய இனி­மை­யான சுபாவம் எதை­யுமே கடு­மை­யாக அவ­ருடன் பேசு­வ­தற்கு அனு­ம­திக்­காது. அது­போன்றே அவரும் மற்­ற­வர்­களின் மனதைப் புண்படுத்தும் எந்தக் காரியத்திலும் ஈடுபட்டதை யாருமே கண்டிருக்க முடியாது. ஆனால் சிறுமை கண்டு பொங்கி, சாது மிரண்ட" சம்பவங்களும் கூட உண்டு. அவற்றை நெருங்கிப் பழகியவர்கள் தான் அறிவார்கள்.
நல்லுள்ளம் கொண்ட நண்பர் மொறாயஸ் மிகுந்த பண்பாளன் - செயற்றிறன் மிக்க ஊடகவியலாளர் என்ற மரபை விட்டுச் செல்கின்றார். அதுகுறித்து அவருடன் பணியாற்றிய ஊடகவியலாளர்களும், குறிப்பாக அவர்களது குடும்பத்தவர்களும் என்றென்றைக்கும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியும். அவரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
– -வீ.தன­பா­ல­சிங்கம் –  நன்றி வீரகேசரி 





No comments: