இனப்படுகொலைகளுக்கு காரணமானவர்களை தமிழர்கள் எவ்வாறு ஆதரிப்பது?: இறுதியில் எமக்கு எஞ்சியது ஏமாற்றமே..!


சிங்கள பௌத்த ஆதரவை கொண்டிருக்கும் கோத்தாபய தமிழர்களின் அபிலாஷைகளை ஏற்று இதயசுத்தியுடன் எழுத்துமூல உத்தரவாதத்தினை வழங்குவாரா?


தமிழ்த் தரப்பின் விட்­டுக்­கொ­டுப்­புக்­களை தென்­னி­லங்கை கருத்­திற்­கொள்­ளாது எத­னையும் வழங்­காது ஏமாற்­றி­விட்­டது. எமது தரப்பின் இரா­ஜ­தந்­திரம் தோற்­று­விட்­டது. இத்­த­கை­ய­தொரு நிலை­மை­யா­னது அடுத்த தலை­மு­றையின் சிந்­த­னை­களில் திசை­மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்தும் சூழலை தோற்­று­வித்­தி­ருப்­ப­தாக  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் குறிப்­பிட்டார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு,

கேள்வி:- பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்கும் உங்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்கும் வகையில் இரா­ணுவம் செயற்­ப­டு­வ­தாக கூறி­யுள்­ளீர்­களே?
பதில்:- ஆம், சவேந்­திர சில்­வாவின் நிய­மனம் தொடர்பில் கடு­மை­யான விமர்­ச­னத்­தினை பாரா­ளு­மன்றில் முன்­வைத்த மறு­தி­னமே வட்­டக்­கச்­சியில் உள்ள எனது காணியில் ஆய்வு செய்­ய­வேண்டும் என்று இரா­ணு­வத்­தினர் கூறி­யுள்­ளார்கள். உட­ன­டி­யா­கவே அவ்­வி­டத்­திற்கு வரு­கை­தந்­த­வர்­களை தொடர்பு கொண்ட போது அந்த விட­யத்­தினை திசை திருப்­பி­விட்­டார்கள். 2011ஆம் ஆண்­டி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னரும், புல­னாய்­வா­ளர்­களும் இவ்­வாறு என்­மீது அவ்­வப்­போது அச்­சு­றுத்தும் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றார்கள். 


தற்போதைய ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் பங்கேற்காது விட்டால் கோத்தாபய ஆட்சியில் அமரும் நிலைமை நிச்சயம் ஏற்படும்

சபா­நா­ய­க­ரி­டத்தில் இவ்­வி­டயம் சம்­பந்­த­மாக எழுத்­து­மூ­ல­மான முறைப்­பாடும் செய்­துள்ளேன். என்னால் முன்­வைக்­கப்­படும் உண்­மை­யான கருத்­துக்­களை ஜீர­ணிக்க முடி­யாது. இரா­ணுவ மேலா­திக்க சிந்­த­னை­யுடன் செயற்­ப­டு­கின்­றார்கள். இந்த நிலை­மைகள் தொடர்ச்­சி­யாக இருக்கும் என்றே கரு­து­கின்றேன்.
கேள்வி:- தென்­னி­லங்­கையில் ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான பூர்­வாங்க ஏற்­பா­டுகள் தீவி­ர­மா­கி­யுள்ள நிலையில் அவை குறித்து தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வி­த­மான செயற்­பா­டு­களை ஆரம்­பித்­துள்­ளது?
பதில்:- கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன், சேனா­தி­ராஜா, சுமந்­திரன் ஆகியோர் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவின் இல்­லத்தில் சஜித்­ பி­ரே­ம­தா­ஸவைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான புளொட்டின் தலைவர் சித்­தார்த்தன் கோத்­தா­ப­யவைச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். இவ்­வி­ரண்டு நிகழ்­வுகள் தொடர்­பாக எமது பாரா­ளு­மன்­றக்­குழு கூட்­டத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 


இத­னை­விட மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அநு­ர­கு­மா­ர­வுடன் உத்­தி­யோ­கப்­ பற்­றற்ற பேச்­சுக்கள் சில முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றை விட ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் கூட்­ட­மைப்பு எவ்­வி­த­மான விட­யங்­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. அதே­போன்று எமது பாரா­ளு­மன்­றக்­கு­ழு­விலோ, மத்­தி­ய ­கு­ழு­விலோ இது­வ­ரையில் யாரை ஆத­ரிப்­பது என்­பதில் உத்­தி­யோக பூர்­வ­மான முடி­வுகள் எவையும் எடுக்­கப்­ப­ட­வு­மில்லை.

கேள்வி:- தமிழ் மக்கள் ஜனா­தி­பதித் தேர்­தலை புறக்­க­ணிக்க வேண்டும் என்ற கருத்­துக்கள் வலுக்­கின்ற நிலையில் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு எவ்­வா­றுள்­ளது?
பதில்:- ஜன­நா­யக முறை­மை­யான தேர்­தல்­களில் தமி­ழர்கள் பங்­கேற்க வேண்­டி­யது மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். 2005ஆம் ஆண்டில் நடை­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் நாம் வாக்­க­ளிப்பில் பங்­கேற்­கா­மையால் தான் மஹிந்த ஜனா­தி­ப­தி­யானார். அடிப்­ப­டையில் நோக்­கு­கின்­ற­போது அன்று தமி­ழர்­களே மஹிந்­தவை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யுள்­ளார்கள். தமி­ழர்கள் வாக்­கெ­டுப்பில் பங்­கேற்­றி­ருந்தால் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­ப­தி­யா­கி­யி­ருப்பார். அன்று ஆயு­த ­ரீ­தி­யான பலத்­துடன், எமது மண்ணில் சம­வ­லி­மை­யுடன் நாம் இருந்தோம். 


அத்­துடன் பேச்­சு­வார்த்­தைகள் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போதே ரணில் பின்­க­தவால் கரு­ணாவை பிள­வு­ப­டுத்­திய கால­மா­கவும் இருந்­தது. இதனால் தான் அன்று வாக்­கெ­டுப்­பினை புறக்­க­ணிக்க வேண்­டி­யேற்­பட்­டது. அவ்­வா­றி­ருக்க தற்­போ­தைய தேர்­தலில் தமி­ழர்கள் பங்­கேற்­காது விட்டால் கோத்­தா­பய ஆட்­சியில் அமரும் நிலைமை தான் இருக்­கின்­றது. இனப்­ப­டு­கொ­லை­யா­ளியை, எம்­மீது போர்க்­குற்­றங்­களை புரிந்­த­வரை வாக்­க­ளிக்­கா­ம­லேயே தெரிவு செய்­கின்ற கைங்­க­ரி­யத்­தினை செய்ய முடி­யாது.

கேள்வி:- அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் தமிழ் மக்கள் எத்­த­கைய வேட்­பா­ளரை ஆத­ரிக்­கலாம் என்று எண்­ணு­கின்­றீர்கள்?
பதில்:- யார் ஜனா­தி­ப­தி­யாக வந்­தாலும் அவர்­களால் நாம் தொடர்ச்­சி­யாக ஏமாற்­றப்­பட்டே வந்­தி­ருக்­கின்றோம். தமி­ழர்­க­ளுக்­கான தேசிய விடு­தலை அங்­கீ­காரம் செய­லி­ழந்த பின்னர்  போர் வெற்­றியை முன்­னி­லைப்­ப­டுத்தி மஹிந்த ராஜ­பக் ஷ
 இரு­த­ட­வைகள் ஆட்­சியை தன்­ன­கப்­ப­டுத்­தினார். தேசிய இனப்­பி­ரச்­சினை குறித்து அவ­ருடன் கூட்­ட­மைப்பு 19தட­வைகள் பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொண்­டி­ருந்­த­போதும் ஏமாற்­றமே எஞ்­சி­யது. மஹிந்த இரா­ணுவ வெற்­றியை முன்­னி­லைப்­ப­டுத்­தி­னாரே தவிர புரை­யோ­டிப்­போ­யி­ருந்த பிரச்­சி­னை­க­ளுக்கு ஜன­நா­யக அர­சியல் ரீதி­யான தீர்­வு­களை காண்­ப­தற்கு சிந்­திக்­கவே இல்லை. 2015இல் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நாம் அர­சியல் புரட்­சியின் மூலம் ஆட்­சிப்­பீ­டத்தில் அமர்த்­தினோம். நெல்சன் மண்­டே­லாவே வருக என்று எமது தலைவர் அவரை ஆரா­தித்­தி­ருந்தார்.


ஆனால் அவர் வினைத்­தி­ற­னாக செயற்­ப­டு­வ­தற்கு பதி­லாக கடந்த காலத்தில் இருந்த ஜனா­தி­ப­தி­களின் செயற்­பா­டு­க­ளுக்கு பல­ ப­டிகள் அப்பாற் சென்று  சிங்­கள பௌத்த இன­வாத சிந்­த­னையில் செயற்­பட்டார். இதனால் தமி­ழர்­களின் பிரச்­சி­னை­களை தீர்க்­க­மு­டி­யா­த­வாறு அடி­யோடு புரட்­டிப்­போட்டு விட்டார். ஆகவே அடுத்த தேர்­தலில் யாருக்கு ஆத­ர­வ­ளிப்­பது என்­பதில் ஆழ­மாகச் சிந்­தித்து நிதா­ன­மா­கவே முடி­வெ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

கேள்வி:- நேர­டி­யாக போரில் கட்­ட­ளை­களைப் பிறப்­பித்து வழி­ந­டத்­திய சரத்­பொன்­சே­காவை ஆத­ரித்த கூட்­ட­மைப்பு கோத்­தா­ப­ய­வுடன் தமது நிபந்­த­னை­களை முன்­வைத்து பேச்­சுக்­களை நடத்த முடியும் என்றும் அவரை ஆத­ரிப்­ப­தாக அறிவிக்­காது விட்­டாலும் தமிழ் மக்­களை திசை­தி­ருப்­பாது இருக்­க­வேண்டும் என்று மஹிந்த தரப்­பினால் விவா­திக்­கப்­ப­டு­கின்­றதே?
பதில்:- 2010ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்தல் நடை­பெற்­ற­போது நான் பாட­சாலை அதி­ப­ராக இருந்­த­தோடு சிரேஷ்ட தலை­மை­தாங்கும் அதி­கா­ரி­யாக தேர்தல் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்தேன். அதன் பின்னர் நடை­பெற்ற பொதுத்­தேர்­தலில் தான் அர­சி­யலில் பிர­வேசம் செய்­தி­ருந்தேன். சரத்­பொன்­சேகா ஜனா­தி­ப­தி­யா­கின்­ற­போது, உட­ன­டி­யாக அர­சியல் தீர்­வினை முன்­வைப்பேன் என்று எழுத்­து­மூ­ல­மான உத்­த­ர­வா­தத்­தினை வழங்­கி­யி­ருந்தார். அந்த எழுத்­து­மூல உத்­த­ர­வா­தத்­தினை எமது கட்­சியின் சில உறுப்­பி­னர்கள் வெளிப்­ப­டுத்­தி­யதன் கார­ணத்தால் தான் சிங்­கள மக்­களால் தோற்­க­டிக்­கப்­பட்டார் என்று எமது கட்சி சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் எம்­மி­டத்தில் கூறி­யுள்­ளார்கள். 


தற்­போது சிங்­கள பௌத்த மக்­களின் ஆத­ரவை கோத்­தா­பய கொண்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. அவ்­வா­றான நிலையில் தமி­ழர்­க­ளுக்கு அவர் எழுத்­து­மூல உறு­திப்­பாட்­டினை வழங்­கு­வ­தற்கு தயா­ராக இருப்­பாரா என்­பது கேள்­விக்­கு­ரி­ய ­வி­ட­ய­மாகும். மேலும், காணிகள் அப­க­ரிக்­கப்­பட்டு எமது மக்கள் இரா­ணுவ ஆட்­சிக்குள் வாழ்­கின்­றார்கள். காணா­ம­லாக்­கப்­பட்ட உற­வுகள் போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். அவ்­வா­றி­ருக்­கையில் இனப்­ப­டு­கொலை புரிந்து, மனித உரி­மை­மீ­றல்­களை அப்­பட்­ட­மாகச் செய்த ஒரு­வ­ருக்கு எமது மக்கள் வாக்­க­ளிக்க வேண்டும் என்று கோரு­வதில் எந்த முகாந்­தி­ரமும் கிடை­யாது.

கேள்வி:- 2015ஆம் ஆண்­டுக்கு பின்னர் ஐ.தே.க தலை­மை­யி­லான அர­சுக்கு கூட்­ட­மைப்பு முண்­டு­கொ­டுத்­து­வ­ரு­கின்­றது என்ற பகி­ரங்க விமர்­ச­னத்­தினை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?
பதில்:- அந்த விமர்­சனம் நேர்­ம­றை­யா­னது அல்ல. எந்­த­வி­த­மான அடை­வு­க­ளையும் பெறாது ஐக்­கிய தேசியக் கட்சிக்கு அப­ரி­த­மாக முண்­டு­கொ­டுத்­தி­ருக்­கின்றோம் என்­பதை ஏற்­றுக்­கொள்­ளத்தான் வேண்­டி­யுள்­ளது. எமது மக்­க­ளுக்கு ஒரு­சில நன்­மைகள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன. ஆனால் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டு­களை ஐ.தே.க முன்­னெ­டுத்­தி­ருந்­தாலும் எமது அடிப்­படை அபி­லா­ஷை­களை தீர்ப்­ப­தற்­கான செயற்­பாட்டில் அக்­கட்சி இத­ய­சுத்­தி­யுடன் செயற்­பட்­டி­ருக்­க­வில்லை. ஆகவே கடந்த காலத்தில் விட்ட தவ­று­களை சுய­ப­ரி­சீ­லனை செய்து கொண்டு அடுத்­த­கட்டம் குறித்த தீர்­மா­னங்­களை முன்­னெ­டுக்க வேண்டும்.
கேள்வி:- இட­து­சா­ரித்­துவ சித்­தாந்­தத்தைக் கொண்­டிருக்கும் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் ஜனா­தி­பதித் தேர்தல் களத்தில் பங்­கேற்­றுள்­ள­மையை எவ்­வாறு பார்க்­கின்­றீர்கள்?
பதில்:- கடந்த காலத்­துடன் ஒப்­பி­டு­கையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியும் கணி­ச­மான வாக்­கு­களை பெறக்­கூ­டிய வாய்ப்­புக்கள் உள்­ளன. ஊழ­லுக்கு எதி­ரான நிலைப்­பாடு, கவர்ச்­சி­க­ர­மான தலை­மைத்­துவம், இளை­ஞர்­களின் விருப்பு ஆகி­ய­வற்றை பார்க்­கின்­ற­போது அத்­த­ரப்பும் தம்மை பலம்­வாய்ந்த தரப்­பாக அடை­யா­ளப்­ப­டுத்தும் என்றே கரு­து­கின்றோம்.
கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் கள­மி­றங்கும் வேட்­பா­ளர்­க­ளுடன் கூட்­ட­மைப்பு தமிழ் மக்­களின் அபி­லா­ஷைகள் சார்ந்து தனித்­த­னி­யான பேச்­சுக்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு வாய்ப்­புக்கள் உள்­ள­னவா?
பதில்:- மக்­களின் அபி­லா­ஷைகள் சார்ந்து எந்­த­வொரு தரப்­பு­டனும் பேச்­சுக்­களை முன்­னெ­டுப்­ப­தற்கு நாம் தயா­ரா­கவே இருக்­கின்றோம். ஆனால் இது­வ­ரையில் உத்­தி­யோக பூர்­வ­மான பேச்­சுக்கள் எவையும் நடை­பெ­ற­வில்லை. வேட்­பா­ளர்கள் நிய­மிக்­கப்­ப­டு­வதில் இருக்கும் குழப்­பங்கள் அனைத்தும் நிறை­வுக்கு வந்த பின்னர் அவர்­களின் கொள்­கைத்­திட்­டங்­களை அடிப்­ப­டை­யாக வைத்து எமது நிபந்­த­னை­யுடன் பேச்­சுக்­களை முன்­னெ­டுப்­பது பற்றி ஆராய்ந்து முடி­வெ­டுப்போம்.
கேள்வி:- ஜனா­தி­பதித் தேர்­தலில் மும்­முனை போட்­டி­யொன்று உரு­வா­கின்­ற­போது கூட்­ட­மைப்பின் கரி­சனை எவ்­வாறு இருக்கும்?
பதில்:- மும்­முனை போட்­டியோ அல்­லது அதற்கும் அதி­க­மாக வரு­கின்­ற 
போது எவ­ராலும் ஐம்­பது சத­வீ­த­மான வாக்­கு­களை பெற­மு­டி­யாது போகும் நிலை­மையே ஏற்­படும். அவ்­வா­றான தரு­ணத்தில்  தமிழ் மக்­களே தீர்­மா­னிக்கும் சக்­தியை கொண்­டி­ருப்­பார்கள். வேட்­பா­ளர்­க­ளுக்­கான விருப்பு வாக்­கு­களின் அடிப்­ப­டையில் தான் வெற்­றி ­பெறும் நபர் பெய­ரி­டப்­ப­டுவார். 


ஆகவே சட்­ட­ரீ­தி­யாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டுள்ள விருப்பு வாக்­கு­களை எவ்­வாறு அளிப்­பது என்­பது தொடர்பில் எமது மக்­களை தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகளை முன்­னெ­டுக்க தலைப்­பட்­டி­ருக்­கின்றோம். அது­கு­றித்த இறுதி முடி­வு­களை விரைவில் முன்­னெ­டுப்போம்.

கேள்வி:- தற்­போ­தைய சூழலில் ஐ.தே.கவுக்கே தொடர்ந்தும் கூட்­ட­மைப்பு ஆத­ர­வ­ளிக்க வேண்­டிய நிலை­மை­யொன்று ஏற்­ப­டு­மாயின் அதன் தலை­மைத்­து­வத்தில் மாற்­றத்­தினை எதிர்­பார்க்­கின்­றீர்­களா?
பதில்:- எவர் பத­விக்கு வந்­தாலும் எமது விட­யத்­திற்கு நேர்­மை­யாக முன்­னு­ரிமை அளித்து சிங்­கள பேரி­ன­வாத சக­திக்குள் விழாது கையா­ளு­வார்கள் என்று நம்­பிக்கை வைக்க முடி­யாது. ஆகவே முதலில் சிங்­கள பௌத்த இன­வா­தத்­தி­லி­ருந்து விடு­ப­டக்­ கூ­டிய ஒருவர் முதலில் ஜனா­தி­ப­தி­யாக வேண்டும். 


மேலும் தேசிய விட­யங்­களை கையாண்ட நீண்ட அனு­பவம் வாய்ந்­தவர் ஜனா­தி­ப­தி­யா­கின்­ற­போது விட­யத்­தினை முன்­ன­கர்த்­து­வ­தற்கு சுல­ப­மாக இருக்கும். இளைய தலை­ 

மு­றை­யொ­ருவர் தலை­மை­யேற்று அவர் அனைத்­தையும் கற்று அதற்­குப்­பின்னர் தீர்­வினை காண்­ப­தென்றால் தேசிய பிரச்­சினை முழு­மை­யாக நீக்கம் பெறும் நிலையே ஏற்­படும். மறு­பக்­கத்தில் இளம் தலை­மு­றை­யைச்­சேர்ந்­தவர் தலை­மை­யேற்­ப­தென்றால் தேசிய பிரச்­சினை விட­யத்தில் தனது நிலைப்­பாட்­டினை பகி­ரங்­கப்­ப­டுத்தி அதற்­கு­ரிய உத்­த­ர­வா­தங்­களை வழங்க வேண்டும்.
கேள்வி:- 2015இற்கு பின்னர் கூட்­ட­மைப்பு தீர்­மா­னிக்கும் சக்­தியை தன்­ன­கத்தே கொண்­டி­ருந்­தாலும் சரி­யான அணு­கு­மு­றை­யின்­மையால் சந்­தர்ப்­பங்­களை தவ­ற­விட்­டி­ருக்­கின்­ற­தென விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றதே?
பதில்:- நாம் சந்­தர்ப்­பங்­களைப் பயன்­ப­டுத்தி விட்­டுக்­கொ­டுக்­காது கிடுக்­கு­பி­டி­யுடன் செயற்­பட்­டி­ருந்தால் எத­னை­யுமே பெற­மு­டி­யா­த­வொரு சூழல் ஏற்­பட்­டி­ருக்­காது. பேரம்­பேசும் சக்­தியை சரி­யாக பயன்­ப­டுத்­த­வில்லை என்­பது ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டிய விட­ய­மா­கின்­றது. அவற்­றை­யெல்லாம் கடந்து, சர்­வ­தேச தரப்­பிற்கும் தார்­மீக கட­மை­யொன்று உள்­ளது. இந்த நாட்டில் இனப்­ப­டு­கொலை, மனித உரி­மை­மீ­றல்கள் நடை­பெற்­றுள்­ள­மைக்­கான சகல ஆதா­ரங்­களும் உள்ள நிலையில் அர­சாங்கம் பொறுப்­புக்­ கூ­றலை செய்­வ­தற்கு தயா­ரில்­லா­தி­ருக்­கின்ற போது அதற்குரிய அழுத்­தங்­களை அளிக்க வேண்­டிய கடமை சர்­வ­தே­சத்­திற்கு உள்­ளது.  


அக்­க­ட­மை­யி­லி­ருந்து சர்­வ­தேசம் விலகி நிற்க முடி­யாது. சர்­வ­தே­சமும் தமி­ழர்­களை கைவி­டு­மாயின் மீண்டும் ஆயு­த­ரீ­தி­யி­லான விடு­தலை நோக்­கிய சிந்­தனை ஏற்­படும் நிலை தோன்­று­மாயின் அதனை யாருமே தடுக்க முடி­யாத சூழலே உரு­வாகும்.

தமி­ழர்கள் வன்­மு­றை­களை விரும்­ப­வில்லை. தந்தை செல்வா ஜன­நா­யக வழியில் போராட ஆரம்­பித்­த­போது அது கருத்­திற்­கொள்­ளப்­ப­டா­மையின் கார­ணத்­தினால் தான் அவ­ரு­டைய கட்­டுப்­பாட்டை மீறி இளை­ஞர்கள் ஆயு­தங்­களை கையில் எடுத்­தி­ருந்­தார்கள். தற்­போது சம்­பந்தன் ஐயாவின் காலத்தில் அவ­ரு­டைய அனைத்து முயற்­சி­களும் தோல்வி கண்­டுள்­ளன. அவ­ரு­டைய விட்­டுக்­கொ­டுப்­புக்­களை அரசு மதிக்­க­வில்லை. 


அவ­ரு­டைய இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் வெற்­றி­பெ­ற­வில்லை. தன்னை தென்­னி­லங்கை தலை­வர்கள் அனை­வரும் ஏமாற்­றி­விட்­டார்கள் என்­பதை அவர் உணர்ந்­துள்ளார். இத்­த­கை­ய­தொரு நிலை­மை­யா­னது அடுத்த தலை­மு­றையின் சிந்­த­னை­களில் திசை­மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்தும். இதனால் இலங்கை வேறு திசைக்கு இட்டுச் செல்ல வாய்ப்­புக்­க­ளையும் ஏற்­ப­டுத்தும்.

கேள்வி:- பல சந்­தர்ப்­பங்­களில் சிறி­த­ரனின் கருத்­துக்­க­ளுக்கும் கூட்­ட­மைப்பின் முடி­வு­க­ளுக்கும் நேரெதிரான நிலைமைகள் காணப்படுவதேன்?
பதில்:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக கட்டமைப்பாகும். 14பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். ஜனநாயக அடிப்படையில் தான் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. கருத்தியல் ரீதியாக எனது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த முடியுமே தவிர தீர்மானிக்கும் தனிச்சக்தியாக என்னால் மாற முடியாது.


பெரும்பான்மையின அடிப்படையில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றபோது எமது கருத்துக்கள், முன்வைக்கப்படுகின்ற வாதங்கள் தோல்வி கண்டுவிடுகின்றன.



இருப்பினும் எமது கருத்துக்களை நிலைப்பாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கு கட்சியில் தடைகள் விதிக்கப்படவில்லை. மாறாக கட்சி ரீதியாக ஏகோபித்த தீர்மானங்களை எடுக்கின்றபோது தவிர்க்க முடியாத சூழலில் ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குள் தள்ளப்படுகின்றோம்.

கேள்வி:- கடந்த கால நிகழ்வுகளை தமிழ்மக்கள் மறந்து புதிய அத்தியாயத்தினை நோக்கி நகரவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தரப்பினரே முன்வைக்கின்றமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?
பதில்:- தமிழ் மக்களுக்கு நன்மைகளை செய்யாதவர்கள் அண்மைய காலங்களில் நாடு திரும்பி அரசியல் பயணத்தினை ஆரம்பித்திருக்கின்றார்கள். 1987இல் இந்திய இராணுவத்தோடு வருகை தந்து பின்னர் அவர்களுடனேயே நாட்டை விட்டு வெளியேறியவர்கள் தமது குடும்பங்களை சரியான முறையில் வளப்படுத்தி விட்டு தற்போது பிரசன்னமாகியுள்ளார்கள்.
இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் நடைபெற்றபோது இரகசியமாக கொழும்புக்கு வருகை தந்து மஹிந்த ராஜபக் ஷவுக்கு உதவியளித்தவர்கள் என்பது பலருக்கு தெரியாத உண்மையாகும். 


இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் தோற்றுவிட்டோம். இந்த நிலையில் மறப்பதற்கும் மன்னிப்பதற்கும் எம்மிடத்தில் எதுவுமில்லை. தமது பதவிகளுக்காக எம்மீது போர்புரிந்தவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதை நிறுத்திவிட்டு இழைக்கப்பட்ட அநீதிகளுக்காக நீதியை கோருவதற்கு முயலவேண்டும்.



நேர்­காணல்:- ஆர்.ராம்  நன்றி வீரகேசரி 







No comments: