பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்

.


பிரபல தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் (41), உடல் நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த முத்துக்குமார், சிகிச்சை பலனிற்றி இன்று காலமானார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சார்ந்தவர் நா.முத்துக்குமார். இயக்குநராக வேண்டும் என்ற நோக்குடன் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக சேர்ந்து, சீமானின் வீர நடை திரைப்படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார் முத்துக்குமார். இரண்டு முறை தேசிய விருது பெற்றுள்ளார்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு 1,500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அதிகபட்சமாக 2012-ஆம் ஆண்டில் மட்டும் இவர் 103 பாடல்களை எழுதி உள்ளார். கிரீடம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார்.
காதல் கொண்டேன், பிதாமகன், கில்லி, கஜினி, நந்தா, புதுப்பேட்டை, காதல், சந்திரமுகி, சிவாஜி, கற்றது தமிழ், 7 ஜி ரெயின்போ காலனி, காக்காமுட்டை, தெறி, தெய்வத் திருமகள், சைவம், தலைவா, சிவாஜி, சந்திரமுகி உள்ளிட்ட பல படங்களில் வரும் பாடல்கள் எழுதிய பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெற்றவை.


'தங்கமீன்கள்' படத்தில் இவர் எழுதிய ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், 'சைவம்' படத்தில் எழுதிய அழகே அழகே பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 2005-இல் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதினையும், பல பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார்.
நியூட்டனின் மூன்றாம் விதி (கவிதைத் தொகுப்பு), கிராமம் நகரம் மாநகரம், பட்டாம்பூச்சி விற்பவன் (கவிதைத் தொகுப்பு), அனா ஆவண்ணா, என்னை சந்திக்க கனவில் வராதே, சில்க் சிட்டி, பால காண்டம், குழந்தைகள் நிறைந்த வீடு, வேடிக்கை பார்ப்பவன் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
1975-ஆம் ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், கன்னிகாபுரத்தில் பிறந்த நா.முத்துக்குமார், சென்னை அண்ணா நகரில் வசித்து வந்தார்.
நா.முத்துக்குமார் - தீபலஷ்மி தம்பதிக்கு ஆதவன் (9) என்ற மகனும், யோகலஷ்மி (8 மாதம்) என்ற மகளும் உள்ளனர்.
இவரது பிரிவு தமிழ் திரையுலக்கிற்கு பெரும் இழப்பு. தமிழ் திரையுலகத்தினரிடையே பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி இலக்கிய திருவிழாவின் பேசுகையில் அவர் சொன்னது:
குடுசை வீடு தான், ஆனால் வீடு முழுவதும் 1 லட்சத்துக்கும் மேற்றப்ட்ட புத்தங்கங்கள் இருக்கும், அப்பா எந்நேரமும் வாசித்து கொண்டே இருப்பார். அவரை நான் தூங்கி பார்த்ததே இல்லை. இதை தவிர தமிழகத்தில் வரும் அனைத்து சஞ்சிகைகள், சிறு பத்திரிகைகள் என அனைத்தையும் வாங்குவார். சுற்றிலும் உள்ள 10க்கும் மேற்பட்ட நூலகங்களுக்கு, என்னையும் சைக்கிளில் அழைத்து செல்லுவார்
மிகவும் வேகமாக பாடல்கள் எழுதுவது இவரது தனித் திறம். இதன் காரணமாகவே பல வாய்புகள் இவரை தேடி தேடி வருகின்றன. எனக்கு தெரிந்த மட்டில் அடைமொழி இல்லாத கவிஞர் இவர் . (இணையத்தில் இவரை பற்றி தேடினால், கவி இளவரசன் என்று வருகிறது. அவர் அதை சூட்டிக் கொள்ளவோ, எந்த படத்திலும் பயன்படுத்தி கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்). கடந்த வருடத்தின் சிறந்த பாடலுக்கான விருதை : ஆனந்த யாழை, இந்திய அரசு இவருக்கு தந்து சிறப்பித்தது.

No comments: