மாபெரும் பொங்கல் விழா - சிவிக் பூங்கா பெண்டில் ஹில்

.
மாபெரும் பொங்கல் விழா - சிவிக் பூங்கா பெண்டில் ஹில் - 17 Jan 2015 Sunday காலை 7.30

அனுமதி இலவசம்

யாழ் இந்து பழைய மாணவர் சங்கமும் சிட்னி தமிழ் வர்த்தகர்களும் இணைந்து நடத்தும் மாபெரும் பொங்கல் விழா பெண்டில் ஹில் சிவிக் பூங்காவில் 17 திகதி நடைபெற உள்ளது. தமிழரின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களை அழிந்து விடாது காக்கவும் அதனை ஞாபகப்படுத்தவும் இந்த விழா வழிகோலும் என்பதில் ஐயமில்லை.

தமிழ் பாரம்பரியத்தினை தழுவிய கலை கலாச்சார நிகழ்வுகள் பல இடம்பெறும். அத்துடன் சிறுவர்களுக்கான விஷேட நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தபட்டுள்ளன.தாயாக நினைவுகளை பிரதிபலிக்கும் அலங்கார வளைவுகள் மற்றும் செயற்பாடுகளும் ஒருங்கமைக்கபட்டுள்ளது.


இத்தினத்தன்று பொங்கல்,தமிழ்த் தாய் வாழ்த்து,நாட்டுபுற நடனம்,சங்கீதப் பாடல்கள்,சிறப்புச் சொற்பொழிவு , தவில் - நாதஸ்வரக் கச்சேரி மற்றும் இன்இசை நிகழ்சிகள் பலவும் நடைபெறவுள்ளன.
அத்துடன் 

தண்ணீர்ப் பந்தல் (
சக்கரை தண்ணீர் மற்றும் மோர் ) ,சிற்றுண்டிகள்,பயிற்சிப் பட்டறைகள் (கோலம் போடுதல்,பட்டம் கட்டுதல்,மாலை கட்டுதல் மற்றும் தோரணம் பின்னுதல் ஆகிய 4 அமர்வுகளில் நடைபெறும்)

சிறுவர்களுக்கான நிகழ்வுகள் பலவும் இடம்பெறும். (Mini Animal Farm, Jumping Castle, Play Area Available , Face Painting , Hena Etc)

இடம்   : சிவிக் பூங்கா பெண்டில் ஹில் ( For GPS purpose - 12 Civic Ave, Pendle Hill , NSW 2145)
காலம் : 
17 ஜனவரி ஞாயிற்றுகிழமை
நேரம்  : 7.30 மணி முதல் 3.00 மணி வரை 
உடை : தமிழர் பாரம்பரிய உடைகள் விரும்பத்தக்கது 

அனுமதி :  இலவசம்

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

யாழ் இந்து பழைய மாணவர் சங்கம் சிட்னி - மற்றும் சிட்னி தமிழ் வர்த்தகர்கள்