.
வாசலிலே கோலமிட்டு வடிவாகக் கல்லடுக்கி
நேசமுடன் சேர்ந்தங்கே நினைவெல்லாம் இனிப்பாக்கி
பாலோடுசர்க்கரையும் பக்குவமாய் சேர்த்தங்கே
அரிசிகொண்டு பொங்கலிட்டு அகமகிழ்ந்து நிற்போமே !
புத்தாடை உடுத்திடுவோம் மத்தாப்பும் கொழுத்திடுவோம்
சொத்தாக மனத்தெண்ணி சுற்றமெலாம் தழுவிநிற்போம்
அத்தனைக்கும் மேலாக அனைத்துப் பெரியோர்களையும்
ஆசையுடன் அரவணைத்து அவராசி பெற்றுநிற்போம் !
பட்டாசு வெடித்திடுவோம் பட்சணங்கள் செய்திடுவோம்
இட்டமுடன் சேர்ந்தங்கே எல்லோர்க்கும் கொடுத்திடுவோம்
நட்டநடு முற்றத்தில் நாமெல்லாம் சேர்ந்திருந்து
கஷ்டமெலாம் போகவெண்ணி கடவுளிடம் வேண்டிநிற்போம் !
இப்படிநாம் பொங்குவது இங்கல்ல எமதூரில்
இங்குவந்த பின்னாலே எல்லாமே மாறியாச்சு
பொங்கல்வந்து போனபின்பே பொங்கலையே தேடிடுவார்
இங்குள்ளார் வாழ்க்கையிலே இதுவியல்பாய் இருக்கிறது !
எங்களூரில் பொங்கலுக்கு எப்போதும் விடுதலைதான்
என்றுஇங்கு சொன்னாலும் எவர்க்குமது புரியாது
சங்கடங்கள் பலவிருந்தும் சகித்துத்தான் ஆகவேண்டும்
எங்களது வாழ்விப்போ இங்கன்றோ நடக்கிறது !
என்றாலும் நாம்பொங்க என்றுமே விட்டதில்லை
எமதுரத்தத்தோடு பொங்கல் இரண்டறவே கலந்துளது
முற்றமதைத் தேடாமல் முழுமனதைத் திடமாக்கி
குக்கரிலே பொங்கலிட்டுக் கொண்டாடி மகிழ்கின்றோம் !
வேலையில்லா நாட்களிலே பொங்கல்தினம் வந்துவிடின்
விரம்பிய வரம்கிடைத்த வெற்றியென நினைத்திடுவோம்
வேலையுள்ள நாள்வந்தால் விரைவாகப் பொங்கிவிட்டு
வேலைத்தளம் போய்நின்று வெள்ளையரின் முகம்பார்ப்போம் !
வேலைவிட்டு வந்தவுடன் விரைவாகக் குளித்துவிட்டு
மாலைவேளை கோவில்சென்று மனந்தெளியக் கும்பிடுவோம்
நாலுபேரை நாமழைத்து நன்றாகப் பொங்கலிட
நாம்வாழும் சூழலிங்கே நமக்குத் துணையிருக்கவிலை !
என்றாலும் பொங்குகின்றோம் இனிக்கட்டும் வாழ்வுவென
மங்கலங்கள் வாழ்வில்வர பொங்கலைநாம் தொடருகின்றோம்
தைத்திங்கள் வருவதைநாம் தவமாகக் கருதுகின்றேன்
எத்திக்கு வாழ்ந்திடினும் இனிக்குமெங்கள் தைப்பொங்கல் !
வாசலிலே கோலமிட்டு வடிவாகக் கல்லடுக்கி
நேசமுடன் சேர்ந்தங்கே நினைவெல்லாம் இனிப்பாக்கி
பாலோடுசர்க்கரையும் பக்குவமாய் சேர்த்தங்கே
அரிசிகொண்டு பொங்கலிட்டு அகமகிழ்ந்து நிற்போமே !
புத்தாடை உடுத்திடுவோம் மத்தாப்பும் கொழுத்திடுவோம்
சொத்தாக மனத்தெண்ணி சுற்றமெலாம் தழுவிநிற்போம்
அத்தனைக்கும் மேலாக அனைத்துப் பெரியோர்களையும்
ஆசையுடன் அரவணைத்து அவராசி பெற்றுநிற்போம் !
பட்டாசு வெடித்திடுவோம் பட்சணங்கள் செய்திடுவோம்
இட்டமுடன் சேர்ந்தங்கே எல்லோர்க்கும் கொடுத்திடுவோம்
நட்டநடு முற்றத்தில் நாமெல்லாம் சேர்ந்திருந்து
கஷ்டமெலாம் போகவெண்ணி கடவுளிடம் வேண்டிநிற்போம் !
இப்படிநாம் பொங்குவது இங்கல்ல எமதூரில்
இங்குவந்த பின்னாலே எல்லாமே மாறியாச்சு
பொங்கல்வந்து போனபின்பே பொங்கலையே தேடிடுவார்
இங்குள்ளார் வாழ்க்கையிலே இதுவியல்பாய் இருக்கிறது !
எங்களூரில் பொங்கலுக்கு எப்போதும் விடுதலைதான்
என்றுஇங்கு சொன்னாலும் எவர்க்குமது புரியாது
சங்கடங்கள் பலவிருந்தும் சகித்துத்தான் ஆகவேண்டும்
எங்களது வாழ்விப்போ இங்கன்றோ நடக்கிறது !
என்றாலும் நாம்பொங்க என்றுமே விட்டதில்லை
எமதுரத்தத்தோடு பொங்கல் இரண்டறவே கலந்துளது
முற்றமதைத் தேடாமல் முழுமனதைத் திடமாக்கி
குக்கரிலே பொங்கலிட்டுக் கொண்டாடி மகிழ்கின்றோம் !
வேலையில்லா நாட்களிலே பொங்கல்தினம் வந்துவிடின்
விரம்பிய வரம்கிடைத்த வெற்றியென நினைத்திடுவோம்
வேலையுள்ள நாள்வந்தால் விரைவாகப் பொங்கிவிட்டு
வேலைத்தளம் போய்நின்று வெள்ளையரின் முகம்பார்ப்போம் !
வேலைவிட்டு வந்தவுடன் விரைவாகக் குளித்துவிட்டு
மாலைவேளை கோவில்சென்று மனந்தெளியக் கும்பிடுவோம்
நாலுபேரை நாமழைத்து நன்றாகப் பொங்கலிட
நாம்வாழும் சூழலிங்கே நமக்குத் துணையிருக்கவிலை !
என்றாலும் பொங்குகின்றோம் இனிக்கட்டும் வாழ்வுவென
மங்கலங்கள் வாழ்வில்வர பொங்கலைநாம் தொடருகின்றோம்
தைத்திங்கள் வருவதைநாம் தவமாகக் கருதுகின்றேன்
எத்திக்கு வாழ்ந்திடினும் இனிக்குமெங்கள் தைப்பொங்கல் !